செவ்வாய், 6 மார்ச், 2012

நான் சொல்ல போவது நன்றி அல்ல !

மார்ச் 6 !    எனது பிறந்த நாள் ,என்னை பொறுத்தவரை வழக்கம் போல் இதுவும்
 மற்றொருநாள் தான், ஆனால் குடும்பத்தினர், நண்பர்கள்(முகநூல்நண்பர்களும் சேர்த்தே சொல்கிறேன் ),தோழர்கள் ,ஊழியர்கள் , நலம் விரும்பிகள் அன்பினாலும் , வாழ்த்துக்களினாலும்  இந்த நாள் என் வாழ்வில் தவிர்க்க முடியாதநாளாகிவிட்டது

 பிறந்த நாள் கொண்டாட்டம் தேவைதானா? என்கிற சிந்தனை எனக்கு அவ்வப்போது தோன்றும் ,ஒரு மனிதன் தான் பிறந்ததினால் குடும்பத்திற்கோ ,அவன் வாழ்கிற சமூகத்திற்கோ தினையளவு பயன்பட்டிருந்தால் கூட அவன் பிறந்ததை கொண்டாடலாம் .இப்போது என்னை சுய விமர்சனம் செய்து பார்க்கிறேன்.மற்றவர்களுக்கும் பயன் தரக் கூடிய வகையில் என் வாழ்வை அமைத்திருகிறேனா ?என்று எண்ணி பார்க்கிறேன் . ஆம் !என் வாழ்வில் பொதுநலம் என்னை அறியாமல் இரண்டற கலந்தே இருந்து வருகிறது .அதற்க்கு எவ் வகையிலும் நான் காரணம் இல்லை .பெரியார் என்ற ஒற்றை சொல் எங்களின் வாழ்வியலாய் மாறியது தான் காரணம் என நினைக்கிறேன்.

                                                     

இப்போதும் நான் நன்றியுடன் என் தந்தை சுயமரியாதை சுடரொளி பழனியப்பன் அவர்களை நினைத்து பார்க்கிறேன் .கிராமத்தில் மிக மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு விதவை மணம் செய்து தனி வாழ்க்கையில் உழைத்து பொருளாதார ரீதியாக வெற்றி பெற்று எங்களை உருவாகியதோடு  மட்டும் அல்லாமல் தந்தை பெரியாரின் பகுத்தறிவு மனிதநேய கொள்கையை எங்களுக்கு அறிமுகப்படுத்தி  உலகின் மாபெரும் புரட்சிகர இயக்கமாம் திராவிடர் கழகத்தை ,அதன் தலைவர் தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்களை அடையாளம் காட்டினார் .



   இன்றைக்கும் திராவிடர் கழகத்தில் பலர் இணையலாம் ,வெளியேறலாம் ,ஆனால் நான் அந்த இயக்கத்தில் பிறந்தவன் .தந்தை மறைவுக்கு பின் தனி வாழ்க்கையில் சில துன்பங்கள் வந்த போது மட்டும் அல்ல எனது வாழ்வின் பல முக்கிய முடிவுகள் எடுத்து ,என் மண விழாவை தலைமை ஏற்று நடத்தி  தந்தையாய்,ஆசானாய் ,என்னை வழி நடத்தி மீட்டெத்த என் வாழ்வியல் வழிகாட்டி தமிழர் தலைவர் வீரமணி தான்




      பெரியாரில் தொடங்கி என் தந்தை சுயமரியாதை சுடரொளி பழனியப்பன் ,தமிழர் தலைவர் ,என நான் நன்றி சொல்ல தொடங்கினால் பட்டியல் நீண்டு கொண்டே போகும் .இன்றைக்கு எனது வாழ்வு மகிழ்ச்சியான நிறைவான  வாழ்வு ,தனது அன்பினால் என்னை தாங்கும் மனம் நிறைந்த வாழ்க்கை துணைவி வித்யா,அன்பு குழந்தைகள் டார்வினா ,கியுபா.

              இன்றைக்கு வாழ்த்திய பலரின் அன்பினை காணும் போது எதோ பயன்பட்டிருக்கேன் அல்லது தந்தை பெரியாரின் சமுக இயக்கமாம் திராவிடர் கழகம் என்னை பயன்படுத்தி இருக்கிறது  .அதற்காக நான் பெருமைப் படுகிறேன் .இன்றைக்கு வாழ்த்திய அனைவருக்கும் நான் சொல்ல போவது நன்றி அல்ல ! இப்போதை போல் எப்போதும் பெரியாரின் தொண்டனாய் ,மனித நேயத்தை நேசிக்கிற திராவிடர் கழகத் தோழர்களில் ஒருவனாய் ,தமிழினத்திற்க்காய் போராடும் தலைவர் வீரமணி அவர்களின் கட்டுப்பாடுள்ள சிப்பாய்களில் ஒருவனாய் என் வாழ்வு இருக்கும் என்கிற உறுதிமொழியை மட்டும் அளிக்கிறேன் !
                                                                                     என்றும் உங்கள் அன்புடன்
                                                                                          பழ .பிரபு ,D.Pharm.,B.H.M.,M.B.A
                                                                                             

1 கருத்து: