வியாழன், 30 டிசம்பர், 2010
திருப்பத்துரை குலுக்கிய மாபெரும் ஆர்பாட்டம்
மத்திய அரசின் நுழைவு தேர்வை எதிர்த்து
மாபெரும் கண்டன ஆர்பாட்டம் !
500 க்கும் மேற்ப்பட்ட கழக தோழர்கள் கழக கொடிகளை ஏந்தி உணர்ச்சி முழக்கமிட்டபடி பங்கேற்றனர் .
டிசம்பர் 30மத்திய அரசின் நுழைவு தேர்வை எதிர்த்து திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் எதிரில் நடைபெற்றது .இவ் ஆர்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞ்சரணி தலைவர் வி.ஜி.இளங்கோவன் தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் முன்னிலை வகித்தார் . 300 க்கும் மேற்ப்பட்ட தோழர்களும் 100 க்கும் மேற்ப்பட்ட மகளிரணியினரும் 100 க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்
ஆர்பாட்ட விளக்க உரை
ஆர்பாட்டத்தினை விளக்கி சுந்திரம்பள்ளி பெரியார் பெருந்தொண்டர் வையாபுரி ,திருப்பத்தூர் தமிழ் சங்க பொறுப்பாளர் சாமி .பிரபாகரன் .,புலவர் அண்ணாமலை ,திருப்பத்தூர் முன்னால் நகர் மன்ற உறுப்பினர் M .N .அன்பழகன் ,விசமங்களம் தி.மு.க பொறுப்பாளர் மணி ,ஊற்றங்கரை நகர திராவிடர் கழக தலைவர் இர.வேங்கடம் ,கிருட்டினகிரி தி.மு.க.மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தணிகை .ஜி.கருணாநிதி ஆகியோர் உரையாற்றினர் இறுதியாக மாவட்ட தலைவர் கே.கே.சி.எழிலரசன் அவர்கள் ஆர்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி உரையாற்றி முழக்கமிட்டார்
பங்கேற்றோர்
இந் நிகழ்ச்சியில் முன்னால் ரோட்டரி சங்க தலைவர் பரந்தாமன்,தொழிலதிபர்அண்ணா.அருணகிரி ,மாவட்ட இணை செயலாளர் அரங்க .ரவி ,மாவட்ட துணை செயலாளர் எம்.கே.எஸ்.இளங்கோவன் ,மாவட்ட மாவட்ட மகளிரணி தலைவர் அகிலா,செயலாளர் கவிதா ,கே.கே.சி.கமலாஅம்மாள் ,ஆசிரியை அழகுமணி ,இந்திராகாந்தி ,சுப்புலட்சுமி ,மாவட்ட ப.க.தலைவர் தமிழ்ச்செல்வன் ,மாவட்ட மாணவரணி தலைவர் கமல் ,ஆனந்தன் ,மத்தூர் ஒன்றிய தலைவர் முருகேசன் ,பெரியராணி பயிற்ருனர் திராவிடராசன் ,கட்டரசம்பட்டி குமார் ,ராமச்சந்திரன் ,காவேரி ,முன்னால் மாவட்ட செயலாளர் பழ.பிரபு ,சித.அருள் ,இர .அன்பு .தீ.பொன்னுசாமி ,காளிதாஸ்,கனகராஜ் ,,திருப்பதி,வெற்றிகொண்டான், உதயகுமார், ரமேசு, பழனிசாமி,, சாமி. அரசிளங்கோ,சி.சாமிநாதன் ,அண்ணா,அப்பாசாமி,துரை,தமிழ்குடிமகன் ,உள்ளிட்ட ஏராளமான திருப்பத்தூர் ,ஜோலார்பேட்டை ,கந்திலி ,ஊற்றங்கரை ,மத்தூர் ஒன்றிய தோழர்கள் பங்கேற்றனர்
திணறிய காவல் துறை
எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருப்பத்தூர் சாலையில் காவல்துறை எதிர்பார்பிற்கும் அதிகமாக தோழர்கள் குவிந்ததால் போக்குவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை திணறியது .கழக தோழர்களின் உணர்சிகரமான முழக்கங்களையும் ,கட்டுபாடுடன் ஆர்பாட்டத்தை நடத்தும் பாங்கினையும் பொது மக்கள் பாராட்டினர்
வெள்ளி, 17 டிசம்பர், 2010
தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாள் கருத்தரங்கம மற்றும் வித்யா மந்திர் கல்வி நிறுவங்களின் தாளாளர் வே.சந்திரசேகரன் அவர்களுக்கு பாராட்டு விழா
தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாள் கருத்தரங்கம் மற்றும்
இடம் ;ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடம் ஊற்றங்கரை
வரவேற்புரை ;மானமிகு;சி.சாமிநாதன் துணை தலைவர் விடுதலை வாசகர் வட்டம்
மாத அறிக்கை வாசித்தல்:மானமிகு .அண்ணா.அப்பாசாமி .பொருளாளர் விடுதலை வாசகர் வட்டம்
தலைமை :மானமிகு ;கே .ஆர்.கே .நரசிம்மன் சட்ட மன்ற உறுப்பினர் பருகூர்
முன்னிலை ;மானமிகு ;ஜெ.எஸ்..ஆறுமுகம் ஊரரட்சிக் குழு தலைவர் ஊற்றங்கரை
மானமிகு .முருகேசன் மாவட்ட கல்வி அதிகாரி (ஓய்வு)
மானமிகு ;வரதராசு தலைமை ஆசிரியர் (ஓய்வு)
மானமிகு பழ.வெங்கடாசலம் மண்டல செயலாளர்
மானமிகு .தணிகை .ஜி.கருணாநிதி மாவட்ட தி.மு.க.இலக்கிய
அணி செயலாளர்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படத்திறப்பு
மானமிகு ;கே.கே.சி எழிலரசன் மாவட்ட தலைவர் திராவிடர் கழகம்
பாராட்டு பெறுபவர் : மானமிகு .வே.சந்திரசேகரன் தாளாளர் வித்யா மந்திர் கல்வி நிறுவனகள்
பாராட்டி நினைவு பரிசு வழங்குபவர்கள்
டி.எஸ் .திருநாதன், இரா.வேங்கடம் ,இர,திருநாவுக்கரசு ,சி,என்.சுப்பிரமணி,சு.விவேகானந்தன் ரஜினி சங்கர் ,சரவணன் ,தண்டி.சரவணன்
கருத்துரை
''நற்றமிழர் வாழ்வில் தை திங்களும் தை புத்தாண்டும் ''
மானமிகு :முனைவர் .துரை.சந்திரசேகரன்
துணை பொது செயலாளர் திராவிடர் கழகம்
அனைவரும் வருக !
-ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்
வியாழன், 16 டிசம்பர், 2010
திருச்சியில் உலக நாத்திகர் மாநாடு வாரீர் என்று அழைக்கவும் வேண்டுமோ!
புதன், 1 டிசம்பர், 2010
எங்கள் தலைவர் வீரமணி வாழ்க !வாழ்கவே !
புதன், 3 நவம்பர், 2010
தீபாவளி வணிகம்
தீபாவளி வணிகம்
பேராசிரியர் மு. நாகநாதன் எம்.ஏ.எம்.எல்.பிஎச்.டி.டி.லிட்.
துணைத் தலைவர் மாநிலத் திட்டக்குழு
அறிவுக்கும், பொருளுக்கும் எப்படி எல்லாம் இழப்பு இந்தத் தீபாவளியால் ஏற்படுத்தினர் என்பதைப் பொருளாதாரப் பேராசிரியரான டாக்டர் மு. நாகநாதன் விளக்கியுள்ளார்.
மக்களைப் போதையில் வீழ்த்துவது-தான் மதம் என்பதை காரல் மார்க்சு 1844ஆம் ஆண்டிலேயே குறிப்பிட்டார். போதைப் பொருள் உண்பதால் நோய்கள்தான் உண்டாகும். மதம் என்னும் போதையால் நமது நாட்டில் உருவான நோய்கள் பல. அந்த நோய்களில் அதிகச் செலவினை மக்களுக்கு ஏற்படுத்தும் முதன்மையான நோய் தீபாவளியாகும். பாரப்பனரகள் புகுத்திய சமுதாய நோயான தீபாவளி என்ற சொல்லே சமஸ்கிருதச் சொல்-லாகும். தீபாவளியின் அடிப்படை எங்கிருந்து புறப்பட்டது என்பதை ஆய்ந்து பார்த்தால் பல உண்மைகள் வெளிப்படும்.
சமண மதத்தில் இருந்து திருடப்பட்டு கருத்துத் திரிபு செய்த ஒரு புனைந்துரைதான் தீபாவளி. 2500 ஆண்டுகளுக்கு முன்பு சமண முனிவரான வர்த்தமானர் என்று-அழைக்கப்படுகிற மகாவீரர் 72 ஆண்டு-கள் வாழ்ந்தவர். ஒரு ஆசிரியர் நிலையில் தமது கொள்கைகளை மக்களிடம் 30 ஆண்டுகள் எடுத்துக் கூறினார். வர்த்த-மானர் சொற்பொழிவு ஆற்றிக்-கொண்டிருக்கும் போது விடியற்-காலையில் சொற்பொழிவு மேடை-யிலேயே இறந்து விட்டார். இந்த நிகழ்வை நினைவுகூறும் வகையில் ஒளி விளக்குகளை வரிசையாக ஏற்றி சமணர்கள் விழா எடுக்கின்றனர்.
கடவுள் இல்லை என்று முதன்முதலில் உலகிற்குக் கூறிய சிறந்த பகுத்தறி-வாளரான மகாவீரரின் நினைவு நாளைத் திசை திருப்பி பொய்யுரை-களை புனைந்து தீபாவளியை இந்து மதத்தோடு பார்ப்பனர்கள் இணைத்-தார்கள். ஆனால், தீபாவளி என்ற சொல்லுக்கு சமஸ்கிருத மொழி அளிக்கும் விளக்கம் விளக்குகளின் வரிசை என்பதாகும். இந்தக் கூற்றினை இன்றளவும் அவர்களால் மறுக்க முடிய-வில்லை. சமஸ்கிருதச் சொல் அகராதி இந்த விளக்கத்தைச் சான்று பகர்-கின்றது. தீபாவளிக்கு இரண்டாவது விளக்கமும் ஒன்று உண்டு. 17ஆம் நூற்றாண்டில் மொகலாய மன்னர் ஜகாங்கீர் ஆட்சிக்காலத்தில் இந்தியக் குறுநில மன்னர்கள் கைது செய்-யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்-தார்கள். பத்தாவது சீக்கீய மத குருவான குரு கோபிந்த சிங் இம்மன்னர்களை விடுதலை செய்து அமிர்தசரசு நகருக்குத் திரும்பிய நிகழ்வை நினைவு கொள்ளும் வகையில்,
சீக்கியர்களால் தீபாவளி இன்றும் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் சீக்கிய மக்கள் மெழுகுவத்தியையும் விளக்குகளையும் ஏற்றி விழாக் கொண்டாடுகிறார்கள்.
ஆரியர்கள் திராவிடர்களை வென்று உயர்ந்துவிட்டார்கள் என்று ஜாதி ஆணவத்தைக் காட்டுவதற்காகவும் திராவிடர்களை இழிவுப்படுத்துவ-தற்காகவும் புனைந்துரைக்கப்பட்ட பல கதைகளில் தீபாவளியும் ஒன்றாகும். இந்தக் கட்டுக்கதைகூட ஆரியர்களின் சொந்த மூளையிலிருந்து உதிக்கவில்லை. மேற்கூறிய சமண சீக்கியத்தின் நிகழ்வுகள் தீபாவளியின் உண்மையான தோற்றத்தைப் பறைசாற்றுகின்றன.
எனவேதான் தந்தை பெரியார் 1929ஆம் ஆண்டிலேயே ஈரோட்டில் உண்மை நாடுவோர் சங்கத்தில் ஆற்றிய சொற்பொழிவில் தீபாவளியின் திருட்டுத்தனத்தை _ ஆபாசத்தை எடுத்துக் கூறினார். விஷ்ணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்ட-வனான நரகாசுரன் என்பவன் வருண-னுடைய குடையைப் பிடுங்கிக்-கொண்-டதால் விஷ்ணு கடவுள் நரகாசுரனைக் கொன்றானாம். இதைக் கொண்டாடு-வதற்காக இத்தீபாவளிப் பண்டிகை கொண்டாடுகிறோம். இதில் ஏதாவது புத்தி உள்ள தன்மையோ அறிவோ இருக்கிறதா என்பதை எண்ணிப் பாருங்கள் என்று தீபாவளிப் பண்டி-கையின் ஆபாசத்தைத் தோலுரித்துக் காட்டினார். காலந்தோறும் பொய்களை விற்றே வயிறு வளர்த்த பார்ப்பனியம் தீபாவளியில் இராமனையும் புகுத்த தவறவில்லை.
இலங்கையை ஆண்ட இராவணனைத் தோற்கடித்து அயோத்திக்குத் திரும்பிய நிகழ்வைப் போற்றும் விழா தீபாவளி என்றும் ஒரு கதையைக் கட்டினார்கள். இவ்வாறாகத்-தான் தீபாவளி நமது சமூக அமைப்பில் பொய்யாகப் புகுத்தப்பட்டது. ஒரு நிலையில் திராவிட ஆரியப் போராட்-டத்தின் எதிரொலியாகவும் தீபாவளி அமைகிறது. திராவிடர்கள் இந்த மண்ணிற்கு உரிமையானவர்கள். தொன்மையான நாகரிகத்தை உலகில் உருவாக்கியவர்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நகர வாழக்கையை மேற்கொண்ட-வர்கள் என்பதற்கு ஆதித்தநல்லூர் அரிக்காமேடு, மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற அகழ்வாராய்ச்சிகள் உலகிற்கு உண்மையை எடுத்துரைக்-கின்றன. பன்னாட்டுத் தொல்லியல் ஆய்வாளர்களும் வரலாற்று இயல் அறிஞர்களும் தற்போது அறிவியல் தடயங்கள் வழியாக ஆய்ந்து. திராவிட எழுத்துகளின் வரி வடிவங்கள் 3000 ஆண்டுகளுக்கு மேலும் தொன்மையா-னது என்று ஆய்வுக்கருத்துகளைச் சுட்டுகின்றனர்.
உண்மை இவ்வாறிருக்க பொய் போற்றப்படுகிறது. எந்தக் கல்-வெட்டிலும் தீபாவளி என்ற சொல்லோ அல்லது விழாவோ இருந்ததாகச் சான்றுகள் ஏதுமில்லை. திராவிட நாகரிகத்திலிருந்து மொழி, கலை, பண்பாட்டுக் கூறுகளைத் திருடியும் திருத்தியும் சமஸ்கிருத மொழியில் ஆரியம் அடிக்கும் அளவிறந்த கொட்-டங்கள் பலப்பல. இதில் ஒன்றுதான் தீபாவளி. இதைத் தமிழர்கள் உணர-வில்லை. ஆரியப் பண்டிகைக்குத் தங்-களுடைய செல்வத்தையும் சேமிப்பையும் செலவிட்டு பொருளாதார இழப்பை ஏற்படுத்திக் கொள்கின்றனர். பட்டுத் துணி, பட்டாசு என்று செலவிட்டு, அறிவு வளர்ச்சிக்குத் தேவையான நூல்கள், கணினிகள் தமிழர்கள் வாங்குவதில்லை.
காசைக் கரியாக்கி சுற்றுச்சூழலையும் கெடுக்கும் இந்தக் கொடுஞ் செயல் இன்றும் தொடர்கிறது. கல்வி வளர்ச்சியும், அறிவியல் கண்டுபிடிப்புகளும், தகவல் தொழில்-நுட்பப்புரட்சியும் வளர்ந்து வரும் இக்காலத்திலும் மூடநம்பிக்கையையும் முட்டாள்தனத்தையும் தொலைக்காட்சி தொடங்கி ஏடுகள்வரை தீபாவளியின் புகழ் பாடுகின்றன. பொருளாதாரம் என்றால் என்ன என்பதை விளக்கும் பல கோட்பாடுகள் உள்ளன. பொருளாதாரம் என்பது குறைத்துச் செலவிடுவதுதல்ல; அறி-வுடன் செலவை மேற்கொள்வது-தான் (Economy is not less spending but wise spendint) என்ற ஒரு விளக்கமும் உண்டு. இந்த விளக்கத்தை அறிந்த-வர்கள் புரிந்தவர்கள் தீபாவளியைப் புறக்கணிப்பார்கள்.
பொருளாதாரக் காரணங்களை எடுத்துக்கூறி தந்தை பெரியார் 1931ஆம் ஆண்டில் தீபாவ-ளியைப் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தந்தை பெரியார் துணி, பலகாரங்கள், பட்டாசு, மது வகைகள் ஆகியவற்றில் பணத்தை ஏழை மக்கள் செலவிடுகிறார்கள் என்று கவலையைத் தெரிவித்துக் கண்டனம் தெரிவித்தார். இந்து சமயம் நெறி சார்ந்ததல்ல. அது ஒரு வணிகம். அதுவும் பார்ப்பனர்கள் புகுத்திய தொழில் வணிகம் என்பதை பல ஆய்-வாளர்கள் இன்று எடுத்துரைக்கின்-றார்கள். இவ்வரிசையில் இந்து சமய சந்தையைப்பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை (Exploring the Market of Hindu Religion) இணையதளத்தில் இடம் பெற்-றுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் பணியாற்றும் பொருளாதார ஆய்வாளர்-களான இ`தா தத்தா ராய் துகின், கே.தாஸ் ஆகியோர் இணைந்து இக்கட்டுரையை எழுதியுள்ளார்கள். பெருகி வரும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களாலும் அங்கு சென்று வழிபடும் பக்தர்களாலும் ஏற்படும் பொருளாதார நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் ஆய்வு மேற்கொண்டு புள்ளி-விவரங்களைத் திரட்டி சில கருத்துகளை வெளியிட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. காளி பூசைதான் இம்மாநிலத்தின் பெரும் விழாவாகக் கொண்டாடப்-படுகிறது என்றும் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மத்தியில் கோயில்களுக்குள் ஒரு போட்டிச் சந்தை உருவாகி வருவதாக இவ்வாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அரசர்கள், பணக்-காரர்கள் கட்டிய கோயில்களுக்கும் அந்தந்த வட்டார எல்லைக்குள் உரு-வான கோயில்களுக்கும் நடைபாதையில் உருவான கோயில்களுக்கும் கடும் சந்தைப்போட்டி நடைபெறுகிறது என்று குறிப்பிடுகிறார்கள. இருப்பினும் மத விழாக்களால் கோயில்களால் சாதாரண மக்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளைப் பற்றி இக்கட்டுரையில் குறிப்பிடப்படவில்லை. மதம் வணிகமாகிறது என்பதுதான் இக்கட்டுரையின் முடிவாகும். தீபாவளி-யும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஒரு வணிக மோசடி!
துணி, நகை, பட்டாசு, செருப்புக் கடைகளில் சிறப்புத் தள்ளுபடிகள் என்று தமிழ்நாட்டிலும் தீபாவளி ஒரு வணிக மோசடியாகவே மாறி வருகிறது. தீபாவளி மலர் வெளியிடும் பார்ப்பன ஏடுகளில் வணிகப் போட்டிக்காக கடவுள்களின் படங்களைவிட நடிகைகளின் கவர்ச்சிப் படங்கள்தான் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. தீபாவளி தன் தடம் மாறி சாதாரண மக்களின் பணத்தைப் பறிக்கும் வணிகமாக மாறிவிட்டது. எனவேதான் அறிஞர் அம்பேத்கர் அவர்கள் இந்து மதத்தின் புதிர்கள் என்ற நூலில் இந்து மதத்தின் மோசடிகளை ஆணித்தர-மாகச் சுட்டியுள்ளார்.
இந்த நூலுக்கு இன்று வரை யாராலும் சான்றுகளுடன் மறுப்புக் கூற முடியவில்லை. இந்நூலின் முன்னுரையில் பார்ப்பனர்களின் வணிகம்தான் இந்து மதம் எனறு அறிஞர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். மேலும், மும்பைக்கு அருகே உள்ள கல்யாண் என்ற இடத்தில் மலையின் உச்சியில் புகழ் மிக்க இசுலாமியர்களின் வழிபாட்டுத்தலமான தர்கா அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த இடத்திற்கு இசுலாமியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வார்கள். காணிக்-கைகளை செலுத்துவார்கள். இந்த தரகாவில் இசுலாமியர்களின் உடை-களை அணிந்துகொண்டு மதச் சடங்கு-களைச் செய்து பணத்தைப் பெறுபவர் ஒரு பாரப்பனர். பணத்திற்காகதான் இந்த பணியை மேற்கொள்கிறார்.
மதமோ மதம் அல்லாததோ,. பார்ப்-பானுக்குத் தேவையானது தட்சணை-தான். பார்ப்பனர்கள் மதத்தை ஒரு வணிகமாகவும் வர்த்தகமாகவும் மாற்றிவிட்டார்கள் (The person in Kalyan near Bombay there is a famous Darga of Pir called Bawa Malangsha on the top of a hill. It is a very famous Darga. Every year a Urs (pilgrimages) is held and offerings are made. The person who officiates at the Darga as a priest is a Brahmin, sitting neat it, wearing the clothes of muslims and receiving monies offered at the Darga. This he did for the sake of money. Religion or no religion what the Brahmin wants is Dakshina. Indeed the Brahmins have made religion a matter of trade and commerce.) என்று அறிஞர் அம்பேத்கர் உண்மைகளை வெளிப்படுத்துகிறார்.
தீபாவளியும் இந்து மத வணிகம்-தானே. மேலும், தமிழர்களை, திராவி-டர்களை இழிவுபடுத்தும் ஆண்டு-தோறும் நிகழும் ஒரு சடங்குதானே. பட்டாசுத் தொழிற்சாலைகளில் தீ விபத்துகள், மீண்டும் மீண்டும் உயிரி-ழப்புகள், தீபாவளிக்கு முன்பும் பின்பும் பல விபத்துகள் இந்தச் சடங்கை-யொட்டித் தொடர்கின்றன. தீபாவளி முடிந்தவுடன் பட்டாசு வெடிப்பால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
காவல் துறைக்குத் தலைவலி. அரசிற்கோ பொருளிழப்பு. காரணம், தீபாவளியை ஒட்டி நடக்கும் இந்த வணிகத்திற்கு வரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் காவல் துறை தேவைப்படுகிறது. கூட்ட நெரிசலில் களவும் பொருளிழப்பும் காவல் துறை இருந்தும் தடுக்க முடியவில்லை. பட்டாசுச் சத்தம் பிறந்த குழந்தைகள், முதியோர். நோயுற்றோரின் அமை-தியைக் கெடுக்கின்றன. பட்டாசால் வெளியிடப்படுகிற புகை அமிலங்கள் ஏற்கெனவே உயர்ந்து வரும் காற்றின் மாசு அளவைப் பெருக்குகின்றன.
சமூகத்தின் அனைத்து மக்களின் நலன்-களையும் பொருளாதார இழப்புகளை-யும் ஏற்படுத்துகிற தீபாவளியால் யாருக்குப் பயன்? தீபாவளி, ஏழை நடுத்தரக் குடும்பங்களின் தேவையற்ற செலவினைப் பெருக்கி கடனாளியாக்-குகிறது. மூடநம்பிக்கைகளை வளர்க்-கிறது. ஆரியத்தை உயர்த்துகிறது. திராவிடரை இழிவுபடுத்துகிறது. மக்களுக்கு பொருளாதார இழப்பினை ஏற்படுத்தி இடர்களை உருவாக்கி வருகின்ற ஒழிக்கப்படவேண்டிய சமுதாய நோய்களில் ஒன்றுதான் தீபாவளியாகும்.
செவ்வாய், 2 நவம்பர், 2010
சூரியனை அணைக்கின்ற காற்று உண்டா ?
பெரியாரை மட்டும் தான் .பிறரோ இங்கு
பெரியவரைய்த் தெரிகின்றார் உருவத் தாலே ;
சிரியவராய்த் தெரிகின்றார் நடத்தை யாலே .
வரிபுலி போல் நடமாடி கொள்கை யோடு
விடபிடியாய் வாழ்ந்தவரே பெரியார் .இங்கே
சரிநிகர் எவருண்டு அவரை போலே ?
சூரியனை அணைக்கின்ற காற்று உண்டா ?
நாத்திகனாய் நான் வாழ்ந்து வருவதாலே
மண் வெறியோ ,மொழி வெறியோ எனக்கு இல்லை
காத்திருந்து பிறர்மீது பதுங்கி பாயும்
சாதிவெறி சமயவெறி என்றும் இல்லை
சாத்திரத்தை நம்பியவர் கெட்ட துண்டு
சரித்திரத்தை நம்பியவர் கெட்ட தில்லை
ஆத்திரத்தை வளர்ப்பதுதான் தீயோர் பாதை
பகுத்தறிவை வளர்ப்பது தான் நல்லோர் பாதை
கற்பனையின் விளைவே தான் மூடபக்தி
கட்டுக்கதை வடிவம்தான் புராணமெல்லாம்
கற்பனையில் பொய் வளரும் .குனிந்து நிற்கும்
தலை நிமிர ஒரு போதும் வாய்பு இல்லை
கற்பனையால் திராவிடர்கள் அசுர ரானார்
அன்னியராம் ஆரியரோ தேவ ரானார்
நற்பயனே இலக்கியத்தில் தேவை .என்றும்
நன்மை தரும் சிந்தனையே நமக்கு தேவை
-----------''கவிதை துறைமுகம் சுரதா '' நுலில்
கவிஞர் .சாகுல் அமித்
சனி, 30 அக்டோபர், 2010
திராவிடர்கழக தலைமையை தலைமுறைதலைமுறையாக நேசிக்கும் பார்ப்பன குடும்பம்
அய்யா மறைவுக்கு பின்னர் ஆசிரியர் தலைமை பொறுப்பு ஏற்ற பின்னும் உறவு இன்னும் வலுவாக தொடர்ந்தது .ஆசிரியர் வீரமணி கழக நிகழ்சிகள் ,மண விழா,பொது நிகழ்வுகள் என்று அந்த பகுதிக்கு எப்போது வந்தாலும் பழம் ,நெய் ,பலகாரம் ஆகியன கொண்டு வந்து கொடுத்து அன்பை பரிமாறி செல்வர் .1999 ஆம் ஆண்டு நடேச அய்யர் மறைவுற்றார் .தகவல் அறிந்த ஆசிரியர் வீரமணி சமூகநீதி பிரச்சார பயணம் மேற்கொண்ட போது சிங்காரபேட்டை வந்த போது நடேச அய்யர் இல்லத்திற்கே சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார் .
நடேச அய்யர் மறைவுக்கு பின்னர் அவரது மகன் தண்டபாணி அதே முறையை பின் பற்றி வருகிறார் .திராவிடர் கழக தோழர்களும் அப் பகுதிக்கு ஆசிரியர் வருகிறார் என்றால் அவர்களுக்கு தகவல் தெரிவித்து விடுகின்றனர்
அண்மையில் நடைபெற்ற திருப்பத்தூர் திராவிடர் எழுச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த ஆசிரியர் வீரமணியை சுண்டல் ,பழம், நெய்யுடன் மாவட்ட தலைவர் எழிலரசன் இல்லத்தில் சந்தித்தார் தண்டபாணி .இருவரும் அன்பை பரிமாறி கொண்ட காட்சியை புதிதாக காணும் தோழர்கள் சிலர் ஆச்சிரியப்பட்டு போனார்கள் .இது தலைமுறைகளை தாண்டிய நட்பு ,இங்கு தான் மனித நேயம் பூத்து குழுங்குவதை காண முடியும் !
புதன், 27 அக்டோபர், 2010
தீபாவளி தேவையா ?தமிழர்களே சிந்திபீர் !
தீபாவளி தேவையா ?தமிழர்களே சிந்திபீர் !
உள்ளபடியே தீபாவளி பண்டிகை ஓர்
பொருளாதாரப் பேரழிவு!
சுற்றுச்சூழல் சீர்கேடு!
சுகாதாரக் கேடு! உயிர்ப்பலி!
ஆரிய ஆபாசப் பண்டிகை!
தீபாவளியைப் பற்றி பல கதைகள் உண்டு. வடநாட்டவரைப் பொறுத்தளவில் (குஜராத்திகள், மார்வாரிகள்) தீபாவளி இலக்குமிக்கு உரிய நாள். அவர்களது புத்தாண்டின் தொடக்க நாள். வணிகர்கள் புதுக் கணக்கை அந்த நாளில்தான் தொடங்குகிறார்கள். வங்காளிகள் தீபாவளியை காளி அல்லது துர்க்கைக்குரிய நாளாகக் கொண்டாடுகிறார்கள். இன்னும் சில இனத்தவருக்கு தீபாவளி நாள் இராமன் வனவாசம் முடித்து அயோத்திக்குத் திரும்பிய நாள். தமிழர்களைப் பொறுத்தளவில் தீபாவளி நாள் நரகாசுரன் என்ற அசுரன் கொல்லப்பட்ட நாள்.
தீபாவளி கொண்டடப்படுவதற்கு பல கதைகள் உண்டு .புராணப்படி
ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.தேவர்களின் முறையீட்டின்மீது மகா-விஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமி-யுடன் கலவி செய்தது. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார். விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்-தார்கள்.இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்(?!).இது ஒரு கதை .
இதை ஆராய்வோம்பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்த-போதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டி-னால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?இப் பண்டிகை கொண்டாடும் யாராவது இதை பற்றி சிந்திகிறர்களா?
மற்றொரு புராண கதை என்ன சொல்கிறது என்று பார்ப்போம் !
நரகாசுரன் பூமாதேவியின் பிள்ளை. காமரூப நாட்டின் மன்னன். படைப்புக் கடவுளான பிரமாவை நோக்கி கடும் தவம் செய்து பல வரங்களைப் பெறுகிறான். அதன் பின் தேவர்களை அவன் துன்புறுத்துகிறான். துன்பத்தைப் பொறுக்க முடியாத தேவர்கள் வைகுண்டத்தில் திருமாலிடம் சென்று முறையிடுகிறார்கள். திருமால் வழக்கம் போல் தேவர்களைக் காக்க திருவுள்ளம் கொள்கிறார்.
ஆனால் நரகாசுரனை கொல்வது திருமாலுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. காரணம் நரகாசுரமன் தனது தாயின் கையால் அல்லாது வேறுயாராலும் கொல்ல முடியாதபடி ஏற்கனவே பிரமாவிடம் வரம் வாங்கி விட்டான். உடனே காத்தல் கடவுளான திருமால் பெரிய சதித் திட்டம் தீட்டுகிறார். தனது தேர்ச்சாரதியாக இரண்டாவது மனைவியான சத்தியபாமாவை (பூமாதேவியின் மறுஅவதாரம்) அமர்த்துகிறார். நரகாசுரனோடு நடக்கும் சண்டையின் நடுவில் அம்பு ஒன்று அவரைத் துளைக்கிறது. உடனே திருமால் மூர்ச்சை போட்டு விழுந்து விடுகிறார். உண்மையில் அப்படி அவர் மூர்ச்சைபோட்டு விழவில்லை. எல்லாம் நடிப்பு. இதனை விளங்கிக் கொள்ளாத சத்தியபாமா தனது கணவன் உண்மையிலேயே மூர்ச்சையாகி இறந்து விட்டார் என நினைத்து திருமாலின் வில்லை எடுத்து நரகாசுரன் மீது அம்பு எய்தி அவனைக் கொன்று விடுகிறார்.
உயிர் போகும் தருவாயில் நரகாசுரனிடம் உனது கடைசி ஆசை என்ன? என்று சத்தியபாமா கேட்கிறார். ”எனது மறைந்த நாளை மக்கள் எல்லோரும் கொண்டாட வேண்டும்”" என்கிறான் நரகாசுரன்.இப்படி பல விதமான கதைகள் அடிப்படையில் தேவர் -அசுரர் போராட்டத்தில் தேவர்களின் வெற்றி பெற்றதை குறிக்கும் நாள் தான் தீபாவளி .
நரகாசுரன் ஒரு திராவிட அரசனாகவும் திராவிடத்தை (வங்கத்தை)ச் சேர்ந்த ஒரு பிராகஜோதிஷம் என்னும் நகரை ஆண்டவனாகவும் அதே புராணங்களில் காணப்படுகின்றான். கதை எப்படியிருப்பினும், இவனும் - நரகாசுரனும், இரண்யாட்சன், இரண்யன், இராவணன், சூரபதுமன் முதலிய திராவிடர் தலைவர்களோடு ஒருவனாக மதிக்கப்பட வேண்டியவன் ஆவான். இவன் தன்னைப் பெற்ற தகப்பனால், தாயால் கொல்லப்பட்டதாகக் கதை கூறுகிறது. காரணம் தேவர் களுக்குத் தொல்லை கொடுத்ததால் என்கிறது புராணம்.
''இன்று நாம் (திராவிடர்கள் - தமிழர்கள்) இரண்யனையும், இராவணனையும் எப்படிப் போற்றிப் புகழ்ந்து மரியாதை செய்கின்றோமோ அது போலவே நரகாசுரனும் நம் மரியாதைக்கு உரியவனாவான். ஆதலால் அப்படிப்பட்ட நம் தலைவனை தேவர் கூட்டம் கொன்றதற்கு நாம் துக்கப்பட வேண்டுமே ஒழிய மகிழ்ச்சியடைவது மடமையும் இழிவும், மான ஈனமுமாகும்.''என்கிறார் அறிவாசான் பெரியார் .
“தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியது அன்று, தீபாவளிப் பண்டிகை புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் கொலைக்காக தமிழர் மகிழ்ச்சி அடைதல் நன்று அன்று”"
என்று தமிழ்ப் பெரும் புலவர், பேராசிரியர் சைவப் பெரியார் கா.சுப்பிரமணிய(ன்) பிள்ளை தாமெழுதிய ‘தமிழர் சமயம்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
“தீபாவளி என்பது வடநாட்டு மார்வாரிகளும், குஜராத்திகளும் கொண்டாடும் புதுக்கணக்கு புத்தாண்டுப் பிறப்பு விழா. தீபாவளிக்கும் தமிழர்க்கும், தீபாவளிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை”" எனப் பேராசிரியர் சைவப்பெரியார் அ.கி. பரந்தாமனார் தாமெழுதிய “மதுரை நாயக்கமன்னர் கால வரலாறு”" என்னும் நூலில் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.“தீபாவளி சமணசமயப் பண்டிகை. பாவாபுரி நகரிலே அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த வர்த்தமான மகாவீரர் இறந்த விடியற்கால தினமே தீபாவளியாகும். தீபாவளி பற்றிய வரலாற்றுக்கும் நரகாசுரன் புராணக் கதைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தீபாவளி என்பதன் பொருள் விளக்கு வரிசை” (தீபம் – விளக்கு, ஆவலி – வரிசை )
என்று அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய “சமணமும் தமிழும்”" என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
“ஆரியப் பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனைக் கதையே தீபாவளி”
என்று சைவத் தமிழ் பெரியார் மறைமலை அடிகள் தான் எழுதிய “தமிழர் மதம்”" என்ற நூலில் எழுதியுள்ளார். மேலும் அவர் -“ஆரியரின் இந்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன்-இராவணனன் மதலான நிகரற்த தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படுவராயினர்”
(வேளாளர் நாகரிகம் – பக்கம் 60).என்கிறார்
இவர்கள் எல்லோரையும் விட இராமகிருஷ்ண பரமகம்சரின் சீடர் சுவாமி விவேகானந்தரே சொல்லி இருக்கிறார் '' தென்னிந்தியாவில் இருந்த மக்களே இராமாயாணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.''
(இராமாயணச் சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் பக்கம் 587-589)என்று .எதிரியே இறந்தாலும் அவன் மரணத்திற்காக வருத்தப்படுவது தான் திராவிடர் பண்பு மகிழ்ச்சி அடைந்து கொண்டாடுவது ஆரிய குணம் !இதை அறியா தமிழர்கள் பண்டிகை கொண்டடுகிறர்களே? என்ன சொல்வது !
சுற்றுசுழல் கேடு
இப் பண்டிகை அறிவுக்கு பொருந்தாதது மட்டும் அல்ல சுற்றுசூழலுக்கும் கேடு விளைவிக்கிறது .பண்டிகையின் போது வெடிக்படும் பட்டாசுகளால் ஒலி ,காற்று,நீர் ஆகியன மாசுபடுகிறது .புவியும் வெப்பமடைகிறது
ஒலி மாசு
காற்று மாசுபடுதல்
குழந்தை தொழிலாளர்களின் குருதியில் நடக்கும் பண்டிகை
குழந்தை தொழிலாளர்களில் 90% பெண் குழந்தைகள் தான். அதுவும் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் தான் அதிகம். குழந்தை தொழிலாளர்களை அதிக அளவில் புகுத்த காரணம், இவர்களுக்கு குறைவான சம்பளம் கொடுக்கலாம். ஆனால் நிறைய வேலை வாங்கலாம். ஒரு நாள் முழுக்க ஒரு குழந்தை பட்டாசு செய்தால் அதிகபட்ச சம்பளாமாக 30-50 ரூபாய் கிடைக்கும். 50 என்பதே கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட தொகை தான்.பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சென்று தான் வேலைப்பார்க்க வேண்டும் என்பது கிடையாது. வீட்டிலேயே இருந்து பட்டாசு செய்யலாம். அதன் மூலம் தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை என்பதாக வெளிஉலகுக்கு பட்டாசு முதலைகள் காண்பிப்பார்கள்.
பட்டாசு செய்யும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் கூட இருக்காது. வீட்டின் அடுப்பறை நெருப்பு பட்டாசு மேல் பட்டு பல நேரங்களில் பல மழலைகள் இறந்து போகின்றனர். இங்கு நடக்கும் பல விபத்துக்கள் மூடிமறைக்கப்படுகிறன. ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் சில விபத்துக்களாவது சிவகாசியில் நடக்கும். ஆனால் வெளியூலகுக்கு தெரியாமல் மூடி மறைக்கப்படும்.
செவ்வாய், 26 அக்டோபர், 2010
திருப்பத்தூர் மாடலை மற்றவர்களும் பின்பற்றவேண்டும்
தந்தையை விஞ்சிய தனயனாக கே.கே.சி. எழிலரசனின் சாதனை!
மக்கள் தொடர்பும்-செல்வாக்கும்-கூட்டு முயற்சியும்தான் வெற்றிக்கு மிக முக்கிய காரணங்கள்
இந்த திருப்பத்தூர் மாடலை மற்றவர்களும் பின்பற்றவேண்டும்
தலைமுறை இடைவெளியில்லாத தந்தை பெரியாரின்
தொண்டறம் தொடர்கிறது - அனைவருக்கும் பாராட்டுகள் - தமிழர் தலைவர் அறிக்கை -
பாராட்டு - நன்றி!
தலைவர்,
திராவிடர் கழகம்.
-
முரண்.. இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை நாயே! பன்றியே! குரங்கே! ந...