ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

தோழர்களே !திட்டமிட்டு காரியம் ஆற்றுங்கள் !

தமிழகத்தில் 1991 ஆம் ஆண்டு நடந்த ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக சிறை தண்டனையை
   கழித்த பேரறிவாளன் சாந்தன்,முருகன் ஆகியோர் வரும் செப்டம்பர் 9 அன்று தூக்கில் இடப்படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது இந்நிலையில் தமிழகமெங்கும் மரணத் தண்டனைக்கு எதிரான குரல் வெடித்து வருகிறது .மரண தண்டனையை கைவிட வேண்டும் என்றும் பேரறிவாளன் ,சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் காப்பாத்த வேண்டும் என்றும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.இந் நிலையில் ஒட்டு மொத்த தமிழ் சமுகத்தை வேண்டுவது யாதெனில் நம்மில் ஜாதி ,மதம் ,அரசியல் ,கட்சி மாச்சரியங்கள் இருக்கலாம் ,இருக்கும் ஆனால் அதை வெளிக் காட்டும்  தருணம் இதுவல்ல  என்பதை நாம் ஒவொவுருவரும் உணர வேண்டும் .கொத்து கொத்தாக தமிழின படுகொலை ஈழத்தில் நடை பெற்றபோது நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லை .3 இலட்சம் தமிழர்களை இழந்தது போதும் இப்போது இருக்கிற இந்த 3 தமிழர்களை காப்பாற்ற போராடுவோம் .சரியாக திட்டமிடுங்கள் தோழர்களே !இன உணர்வாளர்களை ,மனித நேய பற்றளார்களை ஒருகினையுங்கள் .கல்லூரி,பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் போராட்ட கருத்துக்களை விதையுங்கள் !எல்லா ஊரிலும் போராட்டம் ஆர்பாட்டம் ரயில் மறியல் உண்ணா விரதம் என போராட்டம்பல வடிவம் பெறட்டும் ஆளும் அரசை விமர்சிக்காமல் விடுதலைக்கான அழுத்தம் அதிகரிக்கட்டும் !ஆத்திரம் வேண்டாம் ,காரியம் முக்கியம் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள் தமிழர் உயிரை மீட்டுபோம் என உறுதியுடன் திட்டமிட்டு செயலாற்றுவோம் !