வியாழன், 30 டிசம்பர், 2010

இன எழுச்சி: திருப்பத்துரை குலுக்கிய மாபெரும் ஆர்பாட்டம்

இன எழுச்சி: திருப்பத்துரை குலுக்கிய மாபெரும் ஆர்பாட்டம்: " &n..."

திருப்பத்துரை குலுக்கிய மாபெரும் ஆர்பாட்டம்

                             திணறியது   திருப்பத்தூர் !
                             மத்திய அரசின் நுழைவு தேர்வை எதிர்த்து

           மாபெரும் கண்டன ஆர்பாட்டம் !

  500 க்கும் மேற்ப்பட்ட கழக தோழர்கள் கழக கொடிகளை         ஏந்தி உணர்ச்சி முழக்கமிட்டபடி பங்கேற்றனர் .

டிசம்பர் 30
மத்திய அரசின் நுழைவு தேர்வை எதிர்த்து திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் எதிரில் நடைபெற்றது .இவ் ஆர்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞ்சரணி தலைவர் வி.ஜி.இளங்கோவன் தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் முன்னிலை வகித்தார் . 300 க்கும் மேற்ப்பட்ட தோழர்களும் 100 க்கும் மேற்ப்பட்ட மகளிரணியினரும் 100 க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்


பெரியார் சிலைக்கு மாலை


முன்னதாக தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட இளைஞ்சரணி தலைவர் வி.ஜி.இளங்கோவன் ஒலிமுழக்கங்களுக்கு இடையில் மாலை அணிவித்து  ஆர்பாட்டத்தினை தொடங்கி வைத்தார் .


மாவட்ட மாணவரணி அமைப்பாளர்  எ.சிற்றரசன் கழகத்தால் அனுமதிக்கப் பட்ட முழக்கங்களை முழங்க அனைவரும் கொடிகளை உயர்த்தி உணர்ச்சி முழக்கமிட்டனர் .
ஆர்பாட்ட விளக்க உரை
ஆர்பாட்டத்தினை விளக்கி சுந்திரம்பள்ளி பெரியார் பெருந்தொண்டர் வையாபுரி ,திருப்பத்தூர் தமிழ் சங்க பொறுப்பாளர் சாமி .பிரபாகரன் .,புலவர் அண்ணாமலை ,திருப்பத்தூர் முன்னால் நகர் மன்ற உறுப்பினர் M .N .அன்பழகன் ,விசமங்களம் தி.மு.க பொறுப்பாளர் மணி ,ஊற்றங்கரை நகர திராவிடர் கழக தலைவர் இர.வேங்கடம் ,கிருட்டினகிரி தி.மு.க.மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தணிகை .ஜி.கருணாநிதி ஆகியோர் உரையாற்றினர் இறுதியாக மாவட்ட தலைவர் கே.கே.சி.எழிலரசன் அவர்கள் ஆர்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி உரையாற்றி முழக்கமிட்டார்
பங்கேற்றோர்
இந் நிகழ்ச்சியில் முன்னால் ரோட்டரி சங்க தலைவர் பரந்தாமன்,தொழிலதிபர்அண்ணா.அருணகிரி ,மாவட்ட இணை செயலாளர் அரங்க .ரவி ,மாவட்ட துணை செயலாளர் எம்.கே.எஸ்.இளங்கோவன் ,மாவட்ட மாவட்ட மகளிரணி தலைவர் அகிலா,செயலாளர் கவிதா ,கே.கே.சி.கமலாஅம்மாள் ,ஆசிரியை அழகுமணி ,இந்திராகாந்தி ,சுப்புலட்சுமி ,மாவட்ட ப.க.தலைவர்  தமிழ்ச்செல்வன் ,மாவட்ட மாணவரணி தலைவர் கமல் ,ஆனந்தன் ,மத்தூர் ஒன்றிய தலைவர் முருகேசன் ,பெரியராணி பயிற்ருனர் திராவிடராசன் ,கட்டரசம்பட்டி குமார் ,ராமச்சந்திரன் ,காவேரி ,முன்னால் மாவட்ட செயலாளர் பழ.பிரபு ,சித.அருள் ,இர .அன்பு .தீ.பொன்னுசாமி ,காளிதாஸ்,கனகராஜ் ,,திருப்பதி,வெற்றிகொண்டான், உதயகுமார், ரமேசு, பழனிசாமி,, சாமி. அரசிளங்கோ,சி.சாமிநாதன் ,அண்ணா,அப்பாசாமி,துரை,தமிழ்குடிமகன் ,உள்ளிட்ட ஏராளமான திருப்பத்தூர் ,ஜோலார்பேட்டை ,கந்திலி ,ஊற்றங்கரை ,மத்தூர் ஒன்றிய தோழர்கள் பங்கேற்றனர்
திணறிய காவல் துறை
எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருப்பத்தூர் சாலையில் காவல்துறை எதிர்பார்பிற்கும் அதிகமாக தோழர்கள் குவிந்ததால் போக்குவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை திணறியது .கழக தோழர்களின் உணர்சிகரமான முழக்கங்களையும் ,கட்டுபாடுடன் ஆர்பாட்டத்தை நடத்தும் பாங்கினையும் பொது மக்கள் பாராட்டினர்

வெள்ளி, 17 டிசம்பர், 2010

தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாள் கருத்தரங்கம மற்றும் வித்யா மந்திர் கல்வி நிறுவங்களின் தாளாளர் வே.சந்திரசேகரன் அவர்களுக்கு பாராட்டு விழா




       
தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாள் கருத்தரங்கம் மற்றும் 
                                    வித்யா மந்திர் கல்வி நிறுவங்களின் தாளாளர் வே.சந்திரசேகரன் அவர்களுக்கு பாராட்டு விழா
நாள் ;ஜனவரி 2 ஞாயிற்று கிழமை காலை 10 மணியளவில்
இடம் ;ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடம் ஊற்றங்கரை

வரவேற்புரை ;மானமிகு;சி.சாமிநாதன் துணை தலைவர் விடுதலை வாசகர் வட்டம்

மாத அறிக்கை வாசித்தல்:மானமிகு .அண்ணா.அப்பாசாமி .பொருளாளர் விடுதலை வாசகர் வட்டம்

விழா அறிமுக உரை :மானமிகு .பழ.பிரபு செயலாளர் விடுதலை வாசகர் வட்டம்

தலைமை :மானமிகு ;கே .ஆர்.கே .நரசிம்மன் சட்ட மன்ற உறுப்பினர் பருகூர்

முன்னிலை ;மானமிகு ;ஜெ.எஸ்..ஆறுமுகம் ஊரரட்சிக் குழு தலைவர் ஊற்றங்கரை
மானமிகு .முருகேசன் மாவட்ட கல்வி அதிகாரி (ஓய்வு)
மானமிகு ;வரதராசு தலைமை ஆசிரியர் (ஓய்வு)
மானமிகு பழ.வெங்கடாசலம் மண்டல செயலாளர்
மானமிகு .தணிகை .ஜி.கருணாநிதி மாவட்ட  தி.மு.க.இலக்கிய
அணி செயலாளர்





                        

                  புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படத்திறப்பு  
                    
மானமிகு ;கே.கே.சி எழிலரசன் மாவட்ட தலைவர் திராவிடர் கழகம்
                                                                                         

                        பாராட்டு பெறுபவர் :                 மானமிகு .வே.சந்திரசேகரன் தாளாளர் வித்யா மந்திர் கல்வி நிறுவனகள்

                        பாராட்டி நினைவு பரிசு வழங்குபவர்கள்
டி.எஸ் .திருநாதன், இரா.வேங்கடம் ,இர,திருநாவுக்கரசு ,சி,என்.சுப்பிரமணி,சு.விவேகானந்தன் ரஜினி சங்கர் ,சரவணன் ,தண்டி.சரவணன்

                        கருத்துரை
          ''நற்றமிழர் வாழ்வில் தை திங்களும் தை புத்தாண்டும் ''
மானமிகு :முனைவர் .துரை.சந்திரசேகரன்

துணை பொது செயலாளர் திராவிடர் கழகம்


விழா தொகுப்பு:மானமிகு;முனி .வெங்கடேசன்

நன்றிஉரை :மானமிகு :கோ புயல் துணை செயலாளர் திராவிடர் கழகம் 
அனைவரும் வருக !
-ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்

வியாழன், 16 டிசம்பர், 2010

திருச்சியில் உலக நாத்திகர் மாநாடு வாரீர் என்று அழைக்கவும் வேண்டுமோ!


இயக்க வரலாற்றில் எத்தனையோ மாநாடுகளை நாம் நடத்தியதுண்டு. பிறக்க விருக்கும் 2011ஆம் ஆண்டு சனவரி திங்கள் 7, 8, 9 ஆகிய நாள்களில் திருச்சிராப் பள்ளியில் நடக்க இருக்கும் உலக நாத்திகர் மாநாடு சந்தேகம் இல்லாமல் மிக வித்தியாச மான மாநாடாகும்.
திராவிடர் கழகமும், பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து இந்த மூன்று நாள் மாநாடுகளை நடத்துகிறது.
பன்னாட்டு (International) மாநாடு என்பதால் அதற்கேற்ற வசதிகளுடனும், ஏற்பாடுகளுடனும் இந்த மாநாடு நடைபெறப் போகிறது.
இந்தியாவில் மும்பை, விஜயவாடா போன்ற இடங்களில் இதற்கு முன் நடந்த துண்டு. இங்கிலாந்தைச் சேர்ந்த பார்பரா ஸ்மோக்கர் என்ற அம்மையார் குறிப்பிட்டது போல உலக நாத்திக அமைப்புகளின் தலைமையிடம் தந்தை பெரியார் பிறந்த - திராவிடர் கழகம் செயல்படும் தமிழ்நாடு தானே!
தமிழ்நாட்டில் நடக்காமல் வேறு எந்த நாட்டில் நடந்தாலும், அதன் உண்மைத் தன்மை பொலிவு பெறாதே!
கடந்த ஓராண்டு காலமாகத் தொடர்பு கொண்டும் திட்டமிட்டும் பணிகள் அமைதி யாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
உலக நாத்திக, மனித நேய அமைப்புடன் (IHEU - International Humanist and Ethical Union) திராவிடர் கழகம் இணைக் கப்பட்டுள்ளது (Affiliated).
இந்த அமைப்பு நடத்திய பல மாநாடுகளில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பங்கேற்றதுண்டு.
தமிழ்நாட்டில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் நடத்திய பல்வேறு மாநாடுகளில் வெளிநாட்டுப் பகுத்தறி வாளர்கள், உலக நாத்திக மய்யத்தைச் சேர்ந்தவர்கள் பங்கு கொண்டுள்ளனர்.
நாத்திக இயக்கம் மக்கள் இயக்கமாக நடைபெறுவது தமிழ்நாட்டில்தான் - தந்தை பெரியார் அவர்களே இதற்கு மூலகாரணம். தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப் பட்ட திராவிடர் கழகம் பெரியார் பணியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் முழு மூச்சாகச் செயல்பட்டுக் கொண்டு இருப்பதை நேரில் பார்த்து வியந்து பாராட்டியுள்ளனர்.
பொது இடங்களில் கடவுள் மறுப்பு வாசகக் கல்வெட்டுகளையும், தந்தை பெரியார் சிலைகளையும் கண்டு ஆச்சரியக் குறியாக நின்றார்கள்.
வரும் சனவரியில் நடப்பதோ முழுக்க முழுக்க அவர்களின் மனித நேய அமைப்பின் (IHEU) அனுமதியோடு, அங்கீகாரத்தோடு நடக்க இருப்பதால், அதன் தன்மை பல வகைகளிலும் புதுமையான, பொருள்மிக்க நிகழ்ச்சி நிரலுடன (Agenda) அமையும்.
அதே நேரத்தில் நமது தனித் தன்மைகள் மிடுக்காக ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்.
திருச்சி மாநாகரிலும், வல்லம் (பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்), திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களிலும் நிகழ்ச்சி கள் மாறிமாறி நடக்கும்.
மனித நேய அமைப்புகளின் முன்னாள் தலைவர் லெவி ஃபிராகல் (நார்வே), பெக்கா எலோ (பின்லாந்து), ராய் பிரவுன் (சுவிட் சர்லாந்து) போன்ற உலகம் அறிந்த நாத்திக அறிஞர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் அறிஞர் பெருமக்கள் கலந்து கொள்கின்றனர்.
அறிவியல் கண்காட்சி, புத்தகக் கண் காட்சிகள் இடம் பெறும். திருச்சியில் எழுச்சி மிக்க மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் உன்னதமாக இருக்கப் போகிறது.
இரண்டாம் நாள் பேரணி முடிந்த நிலையில், திருச்சியில் உழவர் சந்தையில் பல லட்ச மக்கள் கூடுவர் என்று எதிர்பார்க்கும் பொது மாநாடு நடைபெற உள்ளது. வெளிநாட்டு அறிஞர்களுடன், கலைஞானி கமலகாசன், நாத்திக நன்னெறிச் செம்மல் இனமுரசு சத்யராஜ் போன்றவர்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல துறைகள், அமைப்புகளைச் சார்ந்த வெளிப்படையான பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள், பேராசிரி யர்கள் கருத்துகளை வழங்கிடக் காத்திருக் கின்றனர்.
மூன்று நாள் மாநாடுகளிலும் திராவிடர் கழகத் தலைவர் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு முத்திரை பொறிக்க உள்ளார்.
மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று தந்தை பெரியார் பற்றி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 52 ஆண்டுகளுக்கு முன் தொலைநோக்கோடு பாடினார்.
அந்த உண்மையின் வீச்சை விரிவாக உலக நாத்திகப் பேரறிஞர்கள் நேரில் காணவிருக்கின்றனர்.
கழகக் குடும்பத்தினரே,
பகுத்தறிவாளர்த் தோழர்களே!
இந்த வாய்ப்பை நாம் நழுவவிடலாமா?
இத்தகைய உலக மாநாட்டை நம் வாழ்வில் வேறு எப்பொழுதுதான் காணப்போகிறோம்? நம் காலத்தில் கணீர்என ஒலித்து நடை போடும் இந்த மாநாட்டில் நாம் நடைபோட வேண்டாமா? நம் பிள்ளைகள் பார்த்துக் களிக்க வேண்டாமா?
பல மாதங்களுக்கு முன்பே இம்மாநாட்டிற் கான அறிவிப்புக் கொடுத்தாகிவிட்டது. உங்கள் பயணத்தை நீங்கள் உறுதியாக முடிவு செய்திருப்பீர்கள் அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை.
பெரியார் தமிழர் மண்ணில் போட்ட விதை உலகம் பூராவும் பூத்துக் குலுங்குகிறதே என்று மூடநம்பிக்கையின் மொத்த வியாபாரிகள் புழுங்கத்தான் செய்வார்கள்.
புரியாமல் மூளை மூடிக்கிடந்தவர்களின் முகத்தில் பகுத்தறிவு வெளிச்சம் பாய்ந்து, புது மனிதர்களாகப் புன்னகைத்து மலரும் வாய்ப்புக் கூட உண்டு. எனவே அரை குறையாக இருப்பவர்களைக் கூட கைபிடித்து அழைத்து வாருங்கள் - இது ஒரு மனிதத் தொண்டு என்பதை மறவாதீர்கள்!
விஷயங்களால்தான் மனிதன் அறிவு பெற முடியுமே தவிர, விஷயங்களே காதிற்கு எட்டாமல் செய்துவிட்டால் எப்படி மனிதன் அறிவாளியாக முடியும்? அதைத் தான் பார்ப்பனப் பத்திரிகைகள் செய்து வருகின்றன (விடுதலை, 14.7.1970)
என்றார் பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியார்.
விஷயங்களைத் தெரிந்து கொள்ள, விஷயங்களை விளங்க வைக்க உற்றா ரோடும், உறவினரோடும், நண்பர்களுடனும் குடும்பம் குடும்பமாக முற்றுகையிடுவோம், வாரீர்! வாரீர்!!

புதன், 1 டிசம்பர், 2010

எங்கள் தலைவர் வீரமணி வாழ்க !வாழ்கவே !

ஒரே தலைவர் ஒரே கொள்கை ஒரே கொடி
68 ஆண்டுகள்
அனுபவப் புன்னகை - அந்தக்
கொள்கை மறவருக்கோ
அகவை - 78

யாருக்கும்
ஏற்படும்
அதிசயப் புன்னகை

பொன்
வண்ணத்
தலைவருக்கா
இத்தனை வயது...?


கேள்விக் குறிகள்
மக்கள்
மனதில்
வியப்புக் குறிகளாய்
எழுகின்றன

அவர்கள்
அவர்களாகவே
பேசும் மொழி

தலைவரைத்
தொலைக்காட்சிகளில்
பார்த்தேன்

வாழ்விணையர்
விழாவிலும்
பார்த்தேன்

நேரிலும் பார்த்தேன்

என்னமாய்த்
தோற்றப் பொலிவு

மல்லிகைப் புன்சிரிப்பு

அலைபாய்கிற
கம்பீரம்

அதே
இனிய குரல்

வாதப் பிரதிவாத
சொற்போர்

அய்யா
பெரியாரை
அடிக்கடி
நினைவூட்டும்
கூர்வாள்

வேகத் தடைகளையும்
தாண்டி ஓடுகிற
எந்திர நடை

உண்மையை
யார், மறுப்பது...?

தமிழர்
உள்ளங்களில்
உள்ளபடி - அவர்

உள்ளங்கை
நெல்லிக் கனி.

பெரியாரை
வரிவிடாது
வாசிப்பதும்
வளர்ப்பதுமே - இவர்

இளமைக்கு இரகசியம்.
இவர் ஆற்றும் பணி
பெரியாரை
உலகு தொழ, முக்கியம்!

தலைவர்
வீரமணியின்
பரிமாணங்கள்
தமிழர்கள்
காக்கவேண்டிய, சரித்திரம்

இவருக்கு
இந்தியன் பீனல் கோட்
தெரியும்.

யூனிகோடும்
தெரியும்.

இவர்
விழித்திருக்கிறபோது
தமிழை
தமிழனை
எவனால் அழித்துவிட முடியும்?

தொலைநோக்குப்
பார்வை
அறிவியல் நோக்கு
எந்நேரமும்
தமிழ்
தமிழரைப் பற்றிய
சிந்தனை

யூனிகோட்
மூலம்
தமிழில்
கிரந்த எழுத்தா...?

யாரவன்
சிறீரமண சர்மா...?

வெகுண்டெழுந்த
இனத் தலைவர்
முறையிட்டார்; முதல்வரிடம்!

முதல்வரும்
முறைப்படி விரைவாகச் செயல்பட்டார்.

செந்தமிழை
அழிக்க
ஆரியர் செய்த
சூழ்ச்சி
தமிழர்தலைவர் தம்
முயற்சியால், முறிந்தது.

உலகத்
தமிழரெல்லாம்
இன்று கொண்டாடும்
ஒற்றைத் தமிழர்- நம்
தமிழர் தலைவர்

தமிழுக்கு
தமிழருக்கு
இடர்வரின்
வருமுன் காப்பார்.

ஆரிய
ஆழிப் பேரலை
அபாயத்திலிருந்து
தமிழை, மீட்டவர்

உலகம் கொண்டாடுகிறது
இவர்தாம்
தமிழர் தலைவர்...!

இவர்
வாழ்க
 பல நூறாண்டுகள்...!



 -வழக்கறிஞர் மகேந்திரன்