வியாழன், 3 ஏப்ரல், 2014

வணிகர்களை வஞ்சிக்கும் அரசுகளுக்கு பாடம் புகட்டுவீர் !


வணிகர்களுக்கு என்று தனித்த அரசியல் அடையாளம் என்பது கிடையாது தான் !.பலரும் பல்வேறு அரசியல் இயக்கங்களில் பங்கேற்றும் உள்ளனர் ,பெரும்பாலான வணிகர்கள் ராவணன் ஆண்டால் என்ன ?ராமன் ஆண்டால் என்ன ? என்று வாக்குச் சாவடிக்கு கூட வராமல் வியாபாரம் செய்து கொண்டு இருப்பார்கள் . இப்போது நடைப்பெற போகும் இந்த தேர்தலையும் அப்படிதான் பார்க்கபோகிறோமா? இதை படித்து விட்டு கொஞ்சம் யோசியுங்கள் .
என் பள்ளி பருவத்தில் என் தாய் பள்ளிக்கு செல்ல அடம்பிடிக்கும் போது 50பைசா 1 ருபாய் கொடுத்து அனுப்புவார் .பள்ளிக்கு அருகில் சின்னதாய் கடை போட்டுள்ள பாட்டியிடம் பள்ளி இடைவேளையில் நண்பர்களுடன் வாங்கி சாப்பிடுவேன் இன்றைக்கு அதே பள்ளி இருக்கிறது ஆனால் அந்த பாட்டி இல்லை அவள் விற்ற கல்லை உருண்டை ,கமர்கட் ,குச்சிமிட்டாய் ,கொய்யா பழம் எதுவும் இல்லை .அதற்க்கு பதிலாக Lays,kurkure,MUNCH,டைரி மில்க் ,CHEETOOS,NOODULES,என பலவும் தொங்குகிறது .ஆம் நண்பர்களே ஒரு கிழவியின் வியாபாரத்தை பன்னாட்டு கம்பனிகளும் ,பனியா கும்பல்களும் கபளீகரம் செய்து இருக்கின்றன .காளி மார்க் சோடா இல்லை ,நன்னாரி சர்பத் இல்லை ,என பட்டியலிட்டால் அழிந்து போன தொழில்கள் கணக்கிலடங்கா.
இந்திய அரசின் புதிய பொருளாதார கொள்கை சில்லறை வணிகர்களுக்கும் ,வியாபாரிகளுக்கும் பெரும் கேடாய் அமைந்ததை எவர் மறுப்பார் .ரிலையன்ஸ் நிறுவனம் கறிவேப்பிலையையும் கொத்தமல்லியையும் விற்க வந்த பிறகு மற்றவற்றை பற்றி சொல்லவா வேண்டும் ? இதற்க்கு காரணமான காங்கிரஸ் அரசு தூக்கி எறியப்படவேண்டும் .அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக பி ஜே பி யை சொல்ல முடியாது ஏனெனில் இரண்டு கட்சிகளுக்கும் பொருளாதார கொள்கையில் வேறுபாடு கிடையாது .ஒரு வேளை பிஜேபி ஆட்சியில் இருந்திருந்தால் இதை விட மோசமான நிலை தான் இருந்திருக்கும் .இன்றைக்கு பன்னாட்டு கம்பனிகளும் ,பனியா கும்பல்களும் பிஜேபியை தூக்கி பிடிப்பதை பார்க்கிற போது காங்கிரசை விட பிஜேபி ஆபத்தானதாக தெரிகிறது .இது இந்திய அரசியல்.தமிழக அரசியல் என்று எடுத்து கொண்டால் ஆளும் அதிமுக அரசு வணிகர்களுக்கு இழைத்து வரும் துரோகம் ‘’ஒரு புரட்சிகர துரோகம் ‘’
‘’
அம்மா ‘’ பெயரில் ஒரு சுருக்கு கயிறு
ஏழை எளிய மக்களுக்கு மிக குறைந்த விலையில் அத்தியவாசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுத்தால் தான் அது நல்ல அரசு .தரமான பொருட்கள் மிக குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று தான் எல்லா வணிகர்களும் விரும்புகின்றனர் .ஆனால் ஆளும் அதிமுக அரசு உள்ளூர் தொழிலை நசுக்கி அதில் அரசியல் செய்து வருகிறது அதற்க்கு பல உதாரணங்களை சொல்லலாம்
‘’
அம்மா’’ குடிநீர்
எல்லா பேருந்து நிலையங்களிலும் கல்வி கற்க முடியாத சிறுவர்கள் ‘’வாட்டர் பாக்கெட் ‘’ ’வாட்டர் பாக்கெட் ‘’ கத்தி கொண்டு வருவதை சில மாதங்களுக்கு முன் பார்த்திருப்பீர். இப்போது என்ன ஆனார்கள் அந்த சிறுவர்கள் ? யோசித்து பார்த்தீர்களா? சுத்தமான குடிநீரை அனைத்து மக்களுக்கும் தர வக்கில்லாத அரசு தனது அரசியல் விளம்பரதிற்க்காய் பொருளின் அடக்க விலையை விட விலை குறைத்து அப்பாவி சிறுவனின் வயிற்றில் அடித்துள்ளது
அம்மா உணவகம்
சாலையோர உணவகங்கள் ,நடுத்தர உணவகங்கள் இன்றைக்கு விலையேற்றத்தாலும் மின்வெட்டாலும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது .இட்லிக்கு சட்னி கூட கரண்ட் இருந்தா தான் இந்த நிலையில் அவர்களின் தொழிலுக்கு எமனாக வந்தது அம்மா உணவகம் .ஒரு சப்பாத்தியின் விலை ஒரு ரூபாய் ஒரு சாப்பாட்டின் விலை 5 ருபாய் ,ஒரு பொருள் அதன் நிர்ணய விலையை விட அதிகம் விற்றால் மோசடி என்றால் அதே பொருள் அதன் அடக்கவிலையை விட மிகவும் குறைத்து விற்பது அதுவும் அரசியல் விளம்பரதிற்க்காய் செய்வது எவ்வளவு பெரிய மோசடி அதை தான் ஆளும் அதிமுக அரசு செய்து வருகிறது .இதனால் ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளோ ,பெரிய உணவங்களோ பாதிக்க படவில்லை .பாதிக்கப் பட்டவர்கள் சாலையோர ,நடுத்தர உணவகங்கள் தான் வறுமையின் பிடியில் அம்மா அம்மா என்று அவர்கள் கத்துவது விளம்பர சத்தத்தில் அம்மாவுக்கு தான் கேட்கவில்லை பாவம்!
அம்மா மருந்தகம்
திட்டமிட்டு அதிமுக அரசால் அழிக்கப்பட்டு வரும் தொழில் மக்கள் தொடர்பு மருந்து வணிகம் . ஏற்க்கனவே பன்னாட்டு கம்பனிகளின் வருகையாலும் ,சங்கிலி தொடர் வர்த்தகதினாலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பு மருந்து வணிகம் அம்மா மருந்தகம் ,மற்றும் கூட்டுறவு மருந்தகத்தால் மூடு விழாவிற்கு தயாரகி வருகிறது .ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்கு தான் அரசால் அரசு மருத்துவமனைகளில் இலவசமாய் மருந்துகள் வழங்கப்படுகிறது .இப்போது அம்மா மற்றும் கூட்டுறவு மருந்தகத்தில் 15% முதல் 20% வரை தள்ளுபடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது .மக்களுக்கு தள்ளுபடி வழங்கியதை அரசாங்கம் மானியமாக மீண்டும் திரும்பி மருந்தகத்திற்கு தந்துவிடும் .இப்போது மருந்து வியாபாரம் செய்பவர்களின் கதி அவர்களால் தள்ளுபடி தராமல் தொழிலை நடத்த முடியாது ,தள்ளுபடி தந்து வியாபாரமும் பண்ண முடியாது மற்றவர்களின் உயிரை காக்க மருந்து கொடுக்கும் மக்கள் தொடர்பு மருந்து வணிகர்களின் உயிரை அரசியல் லாபங்களுக்காய் அம்மா குடித்து வருகிறார்
இந்த பட்டியலில் திரை அரங்கங்கள் ,விசைத்தறி கூடங்கள் ,என பலவும் வரிசையாய் நிற்கிறது ,
இந்திய அரசியலில் காங்கிரஸ் ,பிஜேபி எப்படி தூக்கி எறியப்படவேண்டியதோ அவ்வாறே அதிமுக அரசும் அகற்றப்பட வேண்டியது . அன்பான வணிகர் பெருமக்களே !சிறு மற்றும் குறு வியாபாரிகளே !உழைக்கின்ற வர்க்கமே ! நமது வணிகத்தை பன்னாட்டு கம்பெனிகளிடமிருந்தும் ,பனியா கும்பளிடமிருந்தும் மட்டும் அல்ல தமிழக அரசின் வணிக விரோத கொள்கையில் இருந்தும் நம்மை காப்பாற்ற இப்போதுள்ள ஒரே வாய்ப்பு தேர்தல் மட்டுமே !அன்பார்ந்த வாக்காள வணிக பெருமக்களே வணிகர் விரோத அதிமுக ,பிஜேபி ,காங்கிரெஸ் கட்சிகளை புறக்கணிப்பீர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக