ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

தோழர்களே !திட்டமிட்டு காரியம் ஆற்றுங்கள் !

தமிழகத்தில் 1991 ஆம் ஆண்டு நடந்த ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக சிறை தண்டனையை
   கழித்த பேரறிவாளன் சாந்தன்,முருகன் ஆகியோர் வரும் செப்டம்பர் 9 அன்று தூக்கில் இடப்படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது இந்நிலையில் தமிழகமெங்கும் மரணத் தண்டனைக்கு எதிரான குரல் வெடித்து வருகிறது .மரண தண்டனையை கைவிட வேண்டும் என்றும் பேரறிவாளன் ,சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் காப்பாத்த வேண்டும் என்றும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.இந் நிலையில் ஒட்டு மொத்த தமிழ் சமுகத்தை வேண்டுவது யாதெனில் நம்மில் ஜாதி ,மதம் ,அரசியல் ,கட்சி மாச்சரியங்கள் இருக்கலாம் ,இருக்கும் ஆனால் அதை வெளிக் காட்டும்  தருணம் இதுவல்ல  என்பதை நாம் ஒவொவுருவரும் உணர வேண்டும் .கொத்து கொத்தாக தமிழின படுகொலை ஈழத்தில் நடை பெற்றபோது நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லை .3 இலட்சம் தமிழர்களை இழந்தது போதும் இப்போது இருக்கிற இந்த 3 தமிழர்களை காப்பாற்ற போராடுவோம் .சரியாக திட்டமிடுங்கள் தோழர்களே !இன உணர்வாளர்களை ,மனித நேய பற்றளார்களை ஒருகினையுங்கள் .கல்லூரி,பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் போராட்ட கருத்துக்களை விதையுங்கள் !எல்லா ஊரிலும் போராட்டம் ஆர்பாட்டம் ரயில் மறியல் உண்ணா விரதம் என போராட்டம்பல வடிவம் பெறட்டும் ஆளும் அரசை விமர்சிக்காமல் விடுதலைக்கான அழுத்தம் அதிகரிக்கட்டும் !ஆத்திரம் வேண்டாம் ,காரியம் முக்கியம் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள் தமிழர் உயிரை மீட்டுபோம் என உறுதியுடன் திட்டமிட்டு செயலாற்றுவோம் !

புதன், 18 மே, 2011

மே 18 -ஈழ ஆதரவாளர்கள் சிந்தனைக்கு .....

தமிழ் இன வரலாற்றில் மே 18 ஒரு கருப்பு நாள் !

 இன்றைக்கு நினைத்து பார்கிறேன் ஈழ போராட்டம் என் வாழ்வில் எந்தனை அங்கம் வகித்திருகிறது என்பதை  .எனது பள்ளிகூட பருவத்தில் தமிழகத்தில் ஆதரவு திரட்ட எங்கள் பகுதியில் தங்கியிருந்த மேஜர் யசோதரன் ,லேப்..கர்னல் ஞானவேல் உடன் பேசி ,சிரித்து விளையாடிய போது தொடங்கி இருக்கலாம் எனது புலிகள் ஆதரவு உணர்வு

   .ஊற்றங்கரையில் 1985 இல் என்று நினைக்கிறன் எனது தந்தை சுயமரியாதை சுடரொளி பழனியப்பன் தலைமையில் தொடங்க பட்ட விடுதலை புலிகள் தோழமை கழகம் அணைத்து கட்சியினரையும் ஒருகிணைத்து காங்கிரெஸ் கட்சியினர்  உட்பட சின்ன ஊரான ஊற்றங்கரையில் 25000 ருபாய் அன்றைக்கு திரட்டி நாடகம் நடத்தி அய்யா நெடுமாறன் ,கவிஞர் காசி ஆனந்தனிடம் ஒப்படைத்தது ,ராஜீவ் மரணத்தின் போது எங்களுக்கு ஏற்ப்பட்ட பாதிப்பு ,காவல் துறைக்கு தெரியாமல் வீர வேங்கை அகிலா மரணத்தின் போது உணவாளர்களை ஒன்று திரட்டி வயக்காட்டில் வீரவணக்க கூட்டம்நடத்தியது ,என் தந்தையின் நினைவு நாளில் நினைவு தமிழ் விழா நடத்தி புலிகள் புகழ் பாடியது ,இன்னும் எத்தனை எத்தனையோ நினைவுகளில் நிழலாடுகிறது கடும் வெயிலிலும் மழையிளிலும் ஈழ போராட்டத்திற்க்காய் அலைந்தோம்  அத்தனையும் இன்று ஏக்க பெரு மூச்சாய் இருக்கிறது .
              மிக சிறிய அளவிலான பணிகளை செய்த எனக்கே இந் நாளில் இத்தனை துயரத்தையும் நினைவுகளையும் தருகிறதென்றால் புலிகள் அதிகம் பிரபலமாகாத காலத்தில் அவர்களுக்கு அடைக்கலம் தந்து காவல்துறையினரின் விசாரணைக்கு சென்று ,பொருளையும் உழைப்பையும் தந்த பல திராவிடர் கழக தோழர்களுக்கு இந் நாள் எத்தனை துயரம் தரும் !
       இன்றைக்கு புலிகள் ஆதரவையும் ,ஈழ ஆதரவையும் மிக வேகமாக பேசும் நண்பர்களை  அருள் கூர்ந்து வேண்டுகிறேன் .உங்களின் வேகம் நம்மை எந்த நிலையில் நிறுத்தி இருக்கிறது என்பதை தயவு செய்து எண்ணி பாருங்கள் !ஒரு காலத்தில் தமிழகத்தில் இரண்டே அணிகள் தான் புலிகள் \ஈழ ஆதரவாளர்கள் என்கிற ஒரு அணி எதிர்பாளர்கள் மற்றொரு  அணி ,ஆனால் இன்று அன்றைக்கு புலிகளை எதிர்த்தவர்கள் எல்லாம் ஈழ ஆதரவை பேசுகின்றனர் ,புலிகளை உண்மையாய் ஆதரிததவர்கள் ,அவர்களுக்கு களம் அமைத்து கொடுத்தவர்கள் புலிகளின் துரோகிகள் என்று குறை சொல்ல படுகின்றனர் .இன்னும் பகிரங்கமாகவே சொல்கிறேன் புலிகள் என்னை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளனர் ,பிரபாகரனை கைது செய்து தூக்கிலிட பட வேண்டும் என்ற ஜெயலலித்தா ஈழ ஆதரவலராய் சித்தரிக்க படுகிறார் .தமிழர்களை கொல்ல ஆய்தம் வழங்கிய சீனா வை  கண்டித்து வாய் திறக்காத கம்யூனிஸ்ட்கள் காங்கிரசை குறை சொல்ல ஈழ ஆதரவு பேசுகின்றனர் ,பெரியாரை ,திராவிடர் இயக்கங்களை குறை சொல்லி புதிய ஆதரவாளர்கள் கூட்டம் மறுபுறம் .....இன்னும் பட்டியல் நீண்டு கொண்டே போகும்

மே 18 இல் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்காக ,விடுதலை போராட்ட வீரர் களுக்காக வீர வணக்கம் செலுத்தும் முன் ஈழ ஆதரவாளர்கள் ஒருகினைக்க பட வேண்டும் என்கிற எண்ணத்தை நெஞ்சில் முன்னிருத்தவேன்டாமா ?இன்னும் அரசியல் பேசி ஒருவரை ஒருவர் குறை சொல்லி தமிழின பகைவர்களுக்கு நாமே துணை போவதா ?முதலில் புலிகளின் ஆதரவு கட்சிகள் மீதான விமர்சனகளை நிறுத்துங்கள் !இது விமர்சனம் செய்யும் காலம் அல்ல ஆக்க ரீதியாக அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டிய தருணம் அது தான் உண்மையாய் நாம் வித்தாய் போன வீரர்களுக்கு நாம் செலுத்து வீர வணக்கம்

திங்கள், 16 மே, 2011

ஜெயலலிதா திறமையானவர் தான் !

ஜெயலலிதா மாமி முதல்வராக பதவி ஏற்று கொண்டார் .ஆயிரம் விமர்சனகள் அவர் மீது இருப்பினும் நிச்சயம் அவர் திறமையானவர் தான் !சிறுபன்மையிரை கொன்று ,அழிக்க  நினைப்பவன் மோடி ,அவர் வேறு யாருமல்ல ஆண் உருவில் இருக்கும் ஜெயலலித்தா தான் திரவிடத்தையே அழிக்க திராவிடர் பெயரில் அமைப்பு நடத்தும் ஜெயலலித்தா சந்தேகமிலாமல் பெண் உருவில் இருக்கும் மோடி தான் !


இந்த இருவரில் யார் திறமையானவர் ?
நிச்சயம் ஜெயலலித்தா தான் ,முஸ்லிம் அமைப்பை தன் கூட்டணியில் வைத்து கொண்டே மோடிக்கு அழைப்பு விடும் தைரியம் யாருக்கு வரும் ?பெரியாரின் பேரன் ,மார்க்சின் பிள்ளை ,பிரபாகரனின் தம்பி என்றவரை மோடியை போன்றதொரு நல்லாட்சி தமிழகத்தில் வேண்டும் என்று சொல்ல வைத்த ஆற்றல் யாருக்கு வரும் ? மத சார்பின்மை பேசும் கம்நியுஸ்ட் களை மோடியுடன் அமர வைத்த திறமை யாருக்கு வரும் ? சோ பார்ப்பான்களின் வாழ்த்துக்களுடன் திரவிட அமைப்புக்கு தலைமை தாங்கும் ஆற்றல் மோடிக்கு கூட தெரியாது .


நன்றி மறந்த தமிழ் இனத்திற்கு ,ஆரிய பாம்பாய் வந்த ஜெயலலித்தா உண்மையில் திறமையானவர் தான் !



வெள்ளி, 18 மார்ச், 2011

உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள்


முரண்..
இறைவனின் வாகனம் என்றான் நாயை
அவதாரம் என்றான் பன்றியை
இறைவனே என்றான் குரங்கை
இவனே திட்டினான் என்னை
நாயே! பன்றியே! குரங்கே!


நாற்காலி..
இங்கே வேறுபாடு அதிகம் இல்லை
நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.
வீடு தூங்க கட்டில்
நாடு தூங்க நாற்காலி

ஞானம்..
ஞானம் பெற்றது
நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால் நான்-என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்.


பாடம்..
புரட்சியாவது வெங்காயமாவது
என்கிறாய்
தெரிந்து பேசு
காயப்படுத்தியவனின் கண்ணீரை
வாங்கும் வெஙகாயம்.
சென்னிரை வாங்கும் புரட்சி



கோயில்..

செருப்புகளை வெளியே விட்டு
உள்ளே போகிறது அழுக்கு.


தளை..
கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்
பெண்கள் விடுதலை அமைப்பில்சேர.


வில்..
வீழ்ந்த தமிழன் கதையை
விம்மி விம்மி பாடிக்கொண்டிருக்கிறது
மேடையில்-
வெட்கம் கெட்ட வில்


பெண்மை..
தெரிவது உனக்கு அவள் கண்களில்
வண்டும் மீனும் பூவும்
தெரிவதில்லை கண்ணீர்


வெறி..
எரியவில்லை அடுப்பு சேரியில்.
போராடினோம்…
எரிந்ததுஅடுப்பல்ல-சேரி


வீரம்..
உன் கனவில் பாம்பு துரத்துகிறது
நீ ஓடுகிறாய்
குறவன் அவன் துரத்துகிறான்
பாம்பு ஓடுகிறது
வீரம் தொழிலாளிக்கு .


சாமி..
எங்கள் குடிசையில்
அடிக்கடி சாமி ஆடுவாள்
அம்மா ஏனோ தெரியவில்லை
அன்றும் இன்றும்
குடிசைக்கே வருகிறது சாமி
மாடிக்கே போகிறது வரம்.


நிழல்..
எதிரிகளால் அழிக்கப்பட்டன எங்கள் காடுகள்
நிமிர்ந்தோம்
இன்று-போராளிகளின் நிழலில் மரங்கள்
மாவீரன்..இது உயிருக்கு வந்த சாவு அல்ல
சாவுக்கு வந்த உயிர்;


போர்..
ஊரில் உங்கள் சுடுகாடு.
சுடுகாட்டில் எங்கள் ஊர்.


உறுத்தல்..
இரவெல்லாம் விழித்திருந்து
எங்களுர் ஆச்சி இழைத்தபனைபபாய்…
வாங்கினேன் உறங்குவது எப்படி
இவள் பாயில்?


மனிதன்..
இவன் பசுவின் பாலைக்கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையை திருடிற்று என்கிறான்
இப்படியாக மனிதன்….


மானம்..
உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா?
அவன் கைகளை வெட்டு
கெஞ்சி கோவணம் கட்டாதே
அம்மணமாகவே போராடு.


அறுவடை..
திரைப்படச்சுவரொட்டியை
தின்றகழுதை கொழுத்தது
பார்த்த கழுதை புழுத்தது


மந்தை..
மேடை
தமிழா!
ஆடாய் மாடாய்
ஆனாயடா…
நீ என்றேன்
கைதட்டினான்


பெண்..
ஏடுகளில் முன்பக்கத்தின்
அட்டையில்
வீடுகளில் பின்பக்கத்தில்
அடுப்பங்கரையில்.


கொடை..
தங்க வளையலைக்கழற்றி
போராளியிடம் தந்தாள்
செலவுக்குவைத்துக்கொள்
உங்களில் பலருக்கு
கைகளே இல்லை
எனக்கு எதுக்கு வளையல்.


திமிர்..
வேலைக்காரன்மேல் பாய்ந்தார்
நாயே பீட்டரை கவனித்தாயா?
இவர் வீட்டில் பீட்டர் என்றால் நாய்
நாய் என்றால் மனிதன்


கொலை..
ஒரு நாள் வாழ்க்கை பூவுக்கு…
விரியுமுன்பே பறித்து
இனறவனுக்கு அர்ச்சனை
செய்கிறான்
நூறாண்டு வாழ்ககை வேண்டி தனக்கு


அடக்கம்..
அடக்கம் செய்யப்படுகிறோம்…
இரண்டு பெட்டிகளில்.
சவப்பொட்டியிலும்
தொலைக்காட்சிப் பெட்டியிலும்


உலகமைதி..
மாந்த நேயம் பேசின அணுகுண்டுகள்
புறாக்களை பறக்கவிட்டன கழுகுகள்.
போராடிக்கொண்டிருக்கிறது அமைதி.


அடி ..
கலையை கலைஞனை
போற்றிய நாடிது என்கிறாய்…
காலம் காலமாய்
பறையை பறயனை தாழ்த்திய நீ.


ஆணாதிக்கம்..
எப்படியும் இருக்கலாம்
ஆணிண் திமிர்
திரௌபதைக்கு கணவன் ஐந்தாகவும்
அர்ச்சுனனுக்கு மனைவி ஐந்தாகவும்


வேலி..
மயில் இறகு புலித்தோல்
மான் கொம்பு யானைத்தந்தம்
அழகாய் இருக்கிறது எங்கள் வீடு.
வனவிலங்குகள் காப்பாளர் அப்பா


காலம்..
உன் கையிலா கடிகாரம்?
கடிகாரத்தின் கையில் நீ.


கடற்கரை..
உடல் நலம் தேடி
காற்றுவாங்க வந்து போகும்
பெரியஇடத்து மாடிகள்
இங்கேயே நோயோடும் நொடியோடும்
ஒடுங் கிடக்கும் மீனவர் குடிசைகள்


நிலவு..
புராணமாய் இறைவனின் தலையில்
வரலாறாய் மனிதனின் காலில்.


இருள்..
பகலிலும் தலைவர்கள் குத்துவிளக்கு ஏற்ற
நிகழ்ந்தன விழாக்கள்.தேடுகிறோம்…
எங்கேவெளிச்சம்?


தாஜ்மஹால்..
காதலி புதைக்கப்படட இடம் காட்டுகிறாய்
காதலை புதைத்த இடம் காட்டு
எங்கே ஷாஜஹானால் கசக்கி எறியப்பட்ட
அந்தப்புரப்பெண்களின் கறுப்புகல்லறைகள்?


புலமை..
கண்ணீர் சிந்துகிறோம் கண்ணீருக்காக
இவன் உவமைகளும்…முத்துக்கள்
என்றானே கண்ணீரை!


பால்..
என்னைத் தெய்வம் ஆக்கினாய்
சிவன்பாதி சக்திபாதி என்றாய் ஏமாற்றாதே-
உன்பால் வேறுபாடு அழுத்தமானது
சிவனுக்கு பசுப்பாலும் சக்திக்குகள்ளிபாலும்


அரண்..
என் வலகையில் ஐந்துவிரல்கள்
உண்ணவும் வணங்கவும் மட்டுமல்ல
அறையவும்தான்.


தேர்தல்..
மாலை வளையல் ழூக்குத்தி
பென்னான எதுகும் இல்லை
எங்கள் குடிசையில்.
அவன் செல்கிறான்
இருக்கிறதாம் எங்களிடம்…
பொன்னான வாக்குகள்

இனவெறி..
மாடுகள் காணாமல்போகும் என்று
தோலில் குறிபோடும் எங்கள் மண்
கொஞ்சநாளாய்…
மனிதர்களையே காணவில்லையே.


குப்பைத்தொட்டி..
அலுவலகத்தில் இருக்கிறவனுக்
இது குப்பைத்தொட்டி
குப்பை பொறுக்கி வாழ்கிறவனுக்கு
இதுஅலுவலகம்.


ஏழ்மை..
சதை பிடித்து விடுகிறாள்
அழகு நிலையத்தில்
எலும்புக்கைகளால்


கண்ணோட்டம்..
செருப்பைப்பார்கையில் நீங்கள்
அணிந்திருக்கிறவனின்
காலைப்பார்க்கிறீர்கள்.
நான் செய்தவனின்
கையைப்பார்க்கிறேன்


நிமிர்வு..
தேவை பயில்வன்களல்ல வீரர்கள்
உன் உடலின் கூனல்பற்றிய கவலைவிடு
வில்லில் இல்லாத நிமிர்வா?


கூண்டு..
விடுதலை ஆவாரா சிறையில்
இருந்து என்கணவர்?
சோதிடம கேட்கிறாள்
கூண்டுக்கிளியிடம்


மண்..
என்னை என் மண்ணில்
புதைத்தாய் பகைவனே!
என் மண்ணை
எங்கே புதைப்பாய்?


குடுகுடு..
நல்லகாலம் வருகுது
நல்லகாலம் வருகுது..
தெருவிலேயே நிற்கிறான்
குடுகுடுப்பைக்காரன்.

சனி, 5 மார்ச், 2011

ஒழிந்தது காங்கிரெஸ் !


அரசியல் சதுரங்கத்தில் கலைஞர் அருமையாக நகர்த்திய காய்கள்
தி.மு.க. தனித்த பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கக் கூடாது என்பதற்காக மறைமுகமாக அதற்கு போதிய அளவு போட்டியிட வாய்ப்பற்ற ஒரு நிலையை உருவாக்க காங்கிரஸ் கட்சி மிகவும் அதிகமான - நடைமுறைக்கு சாத்தியமற்ற - தொகுதிகளை பிடிவாதமாகக் கேட்பதும், கூட்டணி நெறிமுறை களிலேயே கேள்விப்படாத வகையில், தாங்கள்தான் அத்தொகுதிகளையும்கூட தேர்வு செய்வோம் என்று நிபந்தனை விதிப்பதும் என்ற நிலை காங்கிரஸ் கட்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கட்சியாகவும், தி.மு.க. அவர்கள் தொடுக்கும் நிபந்தனை ஏற்கும் ஒரு கட்சியாகவும் உள்ளது போன்ற ஒரு தோற்றத்தை மக்களிடையே ஏற்ப்படுத்தி வந்தது .
         
                  சுமுகமாக முடிய வேண்டிய கூட்டணி தொகுதி பங்கிடுகள் காங்கிரெசின் முரட்டு பிடிவாதத்தால் மிரட்டி பார்க்கும் எண்ணத்தாலும் மிக சிக்கலான நிலைமைக்கு எடுத்து சென்றது .திராவிட உணர்வாளர்களும் ,தமிழின பற்றாளர்களும் கலைஞர் காங்கிரசை கழற்றி விட்டாலே பரவாயில்லை என்று எண்ணங்களை தெரிவித்தனர் .இந் நிலையில் தான் விஜயகாந்த் எனது நண்பர். தன்மானம் மிக்கவர். அதிமுகவுடன் கூட்டணி வைத்ததாக அவர் இதுவரை வாய் திறக்கவில்லையே. பொறுத்திருந்து பாருங்கள். என்றார் அழகிரி .காங்கிரெஸ் எப்படியாவது நம்மோடு கூட்டணி வைக்காதா என்று எதிர்பார்த்திருந்த விஜயகாந்துக்கு இந்த பேட்டி சிக்கலை உருவாக்கி விட்டது .இனியும் காத்திற்க முடியாது சீக்கிரம் கூட்டணிக்குள் வாருங்கள் அப்போது தான் மற்றவர்களின் இடங்களை முடிவு செய்ய முடியும் என்கிற ஜெயலலிதாவின் வற்புறுத்தலால் வேறு வழி இன்றி  போயஸ் தோட்டம் சென்றார் கூட்டணி அறிவிப்பு வெளியானது .காங்கிரெஸ் க்கு  தோள் கொடுக்க காத்திருந்த கட்சியும் கூட்டணிகுள் சங்கமமாக அரசியல் அனாதையான காங்கிரேச்க்கு பாடம் கற்பிக்க தயாரான கலைஞர் அன்று இரவே காங்கிரெசின் பேச்சு வார்த்தை குறித்து வெளியிட்டு இப்படி நடந்து கொள்வது நியாயம் தான ? என்று கேட்டு அடுத்த நாள் மாலை நடைபெறும் உயர் நிலை செயல்திட்ட குழுவில் உரிய முடிவு எடுக்கப்படும். என கூறியிருந்தார்.மத்திய அரசில் இருந்து திமுக விலகுகிறது என்றும், மத்திய அரசுக்கு பிரச்சனை அடிப்படையில் இனி ஆதரவு அளிக்கும் என்றும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

                   தொல்.திருமாவளவன் ,தமிழர் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட எராளமான தோழமை அமைப்புகளும் ,தி.மு.க தொண்டர்களும் இந்த முடிவை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்க்க திமுக மிகுந்த உற்சாகமாக ,சுயமரியாதையுடன் தேர்தல் களம் காண தயாராகி விட்டனர் .இனி காங்கிரெஸ் தனித்து போட்டி இட வேண்டும் அல்லது ஜெயலலிதாவிடம் பிச்சை கேட்க வேண்டும் .ஏற்க்கனவே 41 இடங்கள் தேமுதிக கொடுத்து விட்ட நிலையில் கலைஞர் கொடுகிறதாய் சொன்ன 60 இடங்கள் இவர்களுக்கு கொடுக்க படலாம் ஆணால் ஆதிமுகவை நம்பி இருக்கும் கம்யுனிஸ்ட் கள் ,மதிமுக நிலை மிக சிக்கலாகும் .ஒரு வேலை காங்கிரெஸ் தனித்து போட்டி இட்டால் காலி ஆகும்
எப்படியோ காங்கிரேச்க்கு மிக சரியான நேரத்தில் சரியான பாடம் கொடுத்தார் கலைஞர் .தேர்தலுக்கு முன்பே இந்த காங்கிரெஸ் சனியன் தொலைந்தது .

வியாழன், 3 பிப்ரவரி, 2011

அறிஞர் அண்ணா நினைவு நாள் !

நான் வந்த பிற்பாடு  எத்தனையோ பொன்னாடைகள் எனக்கு போர்த்தப்பட்டன .இன்றைக்கு பெரியார் அவர்கள் போர்த்திய பொன்னாடை தான் எனக்கு போர்த்தப்பட்ட பொன்னாடை மற்றவை எல்லாம் என் பதவிக்கு போர்த்தப்பட்ட பொன்னாடைகள்

           ---நாகரசம்பட்டி பள்ளி திறப்பு விழாவில் முதலமைச்சர் அண்ணா

புதன், 26 ஜனவரி, 2011

சிங்காரபேட்டை பெரியார் வீர விளையாட்டுக்கழகம் நடத்தும் மாபெரும் கபாடி போட்டி

                         முதன்முறையாக மின்னொளியில் 
            பெரியார் வீர விளையாட்டுக்கழகம் நடத்தும் 

             மாபெரும் கபாடி போட்டி 
நாள் :29 -1 -2011 சனிக்கிழமை மாலை 8 மணியளவில் 
இடம் :அம்பேத்கார் திடல் சிங்காரபேட்டை

வரவேற்புரை :திரு .திருமுகம்
பெரியார் வீர விளையாட்டுக்கழகம்
 
தலைமை :மானமிகு. கே.கே.சி.எழிலரசன் தலைவர் மாவட்ட திராவிடர் கழகம் 
                                       மாநில துணைத் தலைவர் பெரியார் வீர விளையாட்டுக்கழகம் 
 
முன்னிலை :திருமதி. பிரேமாசந்திரன் ஊராட்சி மன்ற தலைவர்  
                          திரு.  ஏ .என் .ராஜா மாவட்ட துணை செயலாளர் திமுக 
                          மானமிகு . பழ .வெங்கடாசலம் மண்டல செயலாளர் திராவிடர் கழகம் 
                         திரு . ஆர் .கரும்பாயிரம் மு.ஊராட்சி மன்ற துணைத் தலைவர் 
                          திரு .  து .சண்முகம் ஊராட்சி மன்ற துணை தலைவர் 
 
போட்டியை தொடங்கி வைப்பவர் : திரு . ப.எல்லப்பன்காவல் ஆய்வாளர்  சிங்காரப்பேட்டை 
 
கவுரவ விருந்தினர்கள் :
                                   மானமிகு. பழ.பிரபு முன்னால் மாவட்ட செயலாளர் திராவிடர் கழகம் 
                      திரு.தணிகைஜி .கருணாநிதி மாவட்ட திமுக இலக்கியஅணி செயலாளர் 
                           திரு. இர.திருநாவுக்கரசு இந்திய தேசிய காங்கிரஸ் 
                               திரு. வ.க.அசோக் மாவட்ட தலைவர் திரிணமுல் காங்கிரஸ் 
 
சிறப்பு அழைப்பாளர்கள் :
                                                 திரு. கே.கமலநாதன்மு.மாவட்ட பிரதிநிதி  
                                               திரு. பஷீர் கவுன்சிலர் சிங்கரப்பேடை
                                                   திரு .அகமத் பாஷா கவுன்சிலர் 
                                                  திருமதி .சத்தியவாணி மகளிர் அணி துணை தலைவர் அ.தி.மு.க.
                                                  மானமிகு.அண்ணா.சரவணன்மாநில துணை தலைவர் பகுத்தறிவாளர் கழகம் 
நன்றியுரை :திரு .பிரசாத் பெரியார் வீரவிளையாட்டுக் கழகம் 
                                                                               நன்கொடையாளர்கள் 
முதல் பரிசு -10000 /-
''சுயமரியாதை சுடரொளி கே.கே.சின்னராசு'' நினைவாக 
                                                  மானமிகு .கே.சி.எழிலரசன் மாவட்ட தலைவர் திராவிடர் கழகம் 
                                                                    மாநில துணைத் தலைவர் பெரியார் வீரவிளையாட்டுக் கழகம் 
 
இரண்டாம் பரிசு -7500/-
   ''சுயமரியாதை சுடரொளி அ.பழனியப்பன்'' நினைவாக 
                                              மானமிகு.பழ.பிரபு முன்னால் மாவட்ட செயலாளர் திராவிடர் கழகம் 
 
மூன்றாம் பரிசு -5000 /-
                                         
திரு.  ஏ .என் .ராஜா மாவட்ட துணை செயலாளர் திமுக

நான்காம் பரிசு -2500 /-
                      திரு..ஆர்.எஸ்.ரமேஷ் .மாவட்ட நிர்வாகி தேமுதிக 
 
அய்ந்தாம் பரிசு-1500 /- 
                      
    திரு . ஆர் .கரும்பாயிரம் மு.ஊராட்சி மன்ற துணைத் தலைவர்
 
ஆறாம் பரிசு -1000
                 திரு.ம.சத்தியநாரயனமூர்த்தி ஊராட்சி கழக செயலாளர் அதிமுக 
 

ஆறுதல் பரிசு -700 
 

               திரு.ஜி.ராமன் தேமுதிக 
 
 
சிறந்த அணிக்கான பரிசு-2000 /-
                  திரு .ஆர்.எஸ்.பார்த்திபன் .ஆர்.எஸ்.எலக்ட்ரோனிக்ஸ் ஊத்தங்கரை
  
 
சிறந்த வீரர்கான பரிசு 2000 /-
           திருமதி .
சத்தியவாணி மகளிர் அணி துணை தலைவர் அ.தி.மு.க.
 

குளிர்பான அன்பளிப்பு-2000 /-
                         
     திரு.தணிகைஜி .கருணாநிதி மாவட்ட திமுக இலக்கியஅணி செயலாளர் 
                           திரு. இர.திருநாவுக்கரசு இந்திய தேசிய காங்கிரஸ் 
 
ஒலிஒளி அமைத்து தருதல் 
        திரு .பாஷ்பன்  அதிமுக கட்டமடுவு
             திரு. த.ராஜேஷ் .திரு கிரேனிட்ஸ் சென்னை 
 
நடுவருக்கான சிறப்பு செய்தல் 
                    ஸ்ரீ வினாயக ஏஜென்சீஸ் சிங்காரப்பேடை
                              இக்பால் பீப் ஸ்டால் 
சிங்காரப்பேடை

உணவு அன்பளிப்பு 

     திருமதி. பிரேமாசந்திரன் ஊராட்சி மன்ற தலைவர்
  
டிஜிட்டல் பேனர்கள் அன்பளிப்பு 
                திரு .எஸ்.ஏ.காந்தன் ஆசிரியர் (பணி நிறைவு )
             மானமிகு.அண்ணா.அப்பாசாமி ex.Army. பொருளாளர் விடுதலை வாசகர் வட்டம்
                        திரு .ஜெகன்   ஷார்ப் டிஜிடல் ஊற்றங்கரை 
                       திரு.விஜய் காய்கறி வியாபாரி ஒரிகினைப்பாளர் விஜய் ரசிகர் மன்றம்
 
சீருடை அன்பளிப்பு 
சிக்னல் வே .ஆறுமுகம் சிக்னல் டிரவெல்ஸ் & ரெடிமடஸ்
 
துண்டறிக்கை அன்பளிப்பு 
திரு.எ.பி.சக்கரவர்த்தி சக்கரவர்த்தி டேக்ஸ்டைல்ஸ்
  
நடுவர்கள் ;ந.புருஷோத்தமன் ,ஆனந்தன் ,கே.என்.நடராஜன் .சி அழகுமணி 

விழாக்குழுவினர்; திருவாளர்கள்
A .முரளி ,கே .ஆனந்தன் ,எஸ்.பி.சிவக்குமார் .எஸ்.விஜி.எஸ்.பிரபு கே.அருள் பி.சுப்பிரமணி ,வி.சக்திவேல்,ராம்கி,கே.வேலாயுதம் ,ஆர்.கார்த்தி.,ஜெ.தண்டபாணி.,நீலகண்டன் ,சங்கர் ,அருண்,அசோக்,இராமச்சந்திரன் பரசுராமன் ஆளப்பன் 

                                                                                 இங்கனம் 
                             பெரியார் வீர விளையாட்டுக் கழகம்   மற்றும் 
                          டாக்டர் அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றம் 
                           சிங்காரப்பேட்டை
 






சனி, 15 ஜனவரி, 2011

இன எழுச்சி: தை முதல் நாளையே தமிழரின் புத்தாண்டாகக் கொண்டாடுவோம...

இன எழுச்சி: தை முதல் நாளையே தமிழரின் புத்தாண்டாகக் கொண்டாடுவோம...: "சித்திரைப் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டல்ல! ---நக்கீரன் (கனடாவிலிருந்து)---(நன்றி ) தை முதல் நாளையே தமிழரின் புத்தாண்டாகக் கொண்டாடுவோம் ..."

தை முதல் நாளையே தமிழரின் புத்தாண்டாகக் கொண்டாடுவோம்

சித்திரைப் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டல்ல!

---நக்கீரன் (கனடாவிலிருந்து)---(நன்றி )

தை முதல் நாளையே தமிழரின் புத்தாண்டாகக் கொண்டாடுவோம்


நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு வெவ்வேறு இன மக்கள் வெவ்வேறு நாட்களைத் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள்.

இன்று சமய அடிப்படையில் கிறித்தவர்கள் சனவரி முதல் நாளையே புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடுகிறார்கள். இஸ்லாமியர்கள் மொகமது நபி மெக்காவில் இருந்து மெடீனாவிற்கு ஓடிய நாளில் இருந்தே ஆண்டுகளைக் கணக்கிடுகிறார்கள். இப்படியே புத்த சமயத்தவர் புத்தர் பிறந்த நாளில் இருந்து ஆண்டுகளை எண்ணுகிறார்கள்.

கிறித்தவர்களுக்கு சனவரி முதல்நாள் எப்போதுமே புத்தாண்டின் தொடக்கமாக இருந்ததில்லை. பதினெட்டாம் நூற்றாண்டுவரை யேசுபிறந்த டிசெம்பர் 25 ஆம் நாளே புத்தாண்டின் தொடக்கமாக இருந்தது.

கிறித்துவ நாட்காட்டியின் அடிப்படையிலேயே சனவரி முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்காட்டி காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டு ஒழுங்குபடுத்தி வரப்பட்டிருக்கிறது.

உரோம சக்கரவர்த்தி யூலியஸ் சீசர் அவர்கள் கி.மு. 45 ஆம் ஆண்டு ஒரு புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார். அதற்கு யூலியன நாட்காட்டி என்று பெயர். அதற்கு முந்தி ஒரு ஆண்டில் பத்து மாதங்களும் 304 நாட்கள் மட்டுமே இருந்தன. கிறித்துவ பாதிரிமார்கள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நாட்காட்டியில் உள்ள நாட்களையும் மாதங்களையும் கூட்டியும் குறைத்தும் சமயத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தினார்கள். சில சமயங்களில் கையூட்டு வாங்கிக் கொண்டு ஆண்டை நீட்டியும் குறைத்தும் காட்டினார்கள்! யூலியஸ் சீசர் அந்தக் குளறுபடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தனது பெயரில் ஒரு மாதத்தைக் கூட்டினார். அவர் கணித்த நாட்குறிப்பு கிபி 1,500 வரை பயன்பாட்டில் இருந்தது. கிமு 45ஆம் ஆண்டில் நாட்காட்டியைத் திருத்தி அமைத்ததால் அந்தக் குழப்ப ஆண்டு மொத்தம் 445 நாட்களைக் கொண்டிருந்தது.

அதன் பின் கிறகோறியன் (Gregorian) நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. ஆனால் கிபி 1900 வரை பழைய நாட்காட்டியை கிரேக்கம், உருசியா போன்ற நாடுகள் கைவிடவில்லை. இன்றும் உருசியாவின் பழைமைவாத தேவாலயங்கள் யூலியன் நாட்காட்டியைத்தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.

யூலியன் நாட்காட்டி ஒரு ஆண்டில் 365 1ஃ4 நாட்கள் இருப்பதாகக் கணக்கிட்டது. கணக்கைச் சரிசெய்ய நாலாண்டுக்கு ஒருமுறை (Leap Year) ஒரு நாள் பெப்ரபரி மாதத்துக்குரிய நாட்களோடு கூட்டப்பட்டது. ஆனால் உண்மையில் ஒரு ஆண்டு 365 நாட்கள், 5 மணித்தியாலங்கள், 49 நிமிடங்கள், 12 வினாடிகள் (365.2424) கொண்டது. இதனால் ஒரு புதிய சிக்கல் உருவாகியது. 128 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 நாள் வித்தியாசம் ஏற்பட்டது. எனவே 1582இல் போப் கிறகோறியன் அதைச் சரிசெய்ய 10 நாட்களைக் (1582-325)ஃ120ஸ்ரீ10) குறைத்தார். அதன் பின்னர் 400 ஆல் பிரிக்கக்கூடிய நூற்றாண்டுகளில் ( 1700, 1800, 1900) ஒரு நாள் கூட்டப்பட்டது. ஆனால் 2000இல் கூட்டப்படவில்லை.

அப்படியும் கிபி 4,000 அல்லது 5,000 ஆண்டளவில் 12 நாட்கள் வித்தியாசம் ஏற்பட்டுவிடும் எனத் தெரிய வந்தது. எனவே இந்தத் தொல்லையில் இருந்து விடுபட 1972 ஆம் ஆண்டு அணு மணிப் பொறி ஒன்றினைக் கண்டு பிடித்தார்கள். அது காட்டும் நேரமே உலகத்தின் முறைமைப்பட்ட (official) நேரம் என எல்லா நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.


வரலாற்றில் எகிப்தியர்கள்தான் முதன் முதலில் ஒரு ஆண்டில் 365 நாட்களைக் கொண்ட நாட்காட்டியை கிமு 4236இல் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது.


பழந் தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.

ஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4); கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை.

திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர். திங்கள் ஞாயிற்றைச் சுற்றிவர எடுக்கும் நேரம் 27 நாட்கள், 7 மணி, 43 மணித்துளிகள்.

பண்டைய நாட்களில் காலத்தைப் பெரும்பொழுது சிறுபொழுது என வகுத்தனர். இளவேனில் (சித்திரை, வைகாசி ) முதுவேனில் (ஆனி, ஆடி)

கார் (ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, ) பின்பனி ( மாசி, பங்குனி) ஆறு பெரும் பொழுதாகும்.

வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும். மேலும் ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 நிமிடங்களாகும்.

'உவவுமதி' (முழுமதி) நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது.

சங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன.

சங்க இலக்கியங்களில் எல்லாத் திங்கள்களின் பெயர்களும் சொல்லப்படவில்லை. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்;டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சியை விளக்கும்போது 'திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன' எனக் கூறுவதைக் காணலாம். எல்லாத் திங்கள்களின் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். எனவே இன்றுள்ள 12 மாதங்களும் அவர் காலத்தில் இருந்து வருகின்றன எனத் துணியலாம்.

மேலும் தொல்காப்பியர் அ,இ,உ,எ, ஒ என்னும் ஐந்து உயிர் எழுத்துக்களும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துக்கள் என்கிறார்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள என்னும் ஏழு உயிர் எழுத்துக்களும் இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடில் எழுத்துக்கள். மூன்று மாத்திரைகளில் எந்த எழுத்தும் ஒலிக்கப்படுவதில்லை. ஒலி மிகுதல் தேள்வைப்பட்டால் அந்தளவிற்குத் தேவையான எழுத்து ஒலிகளை எழுப்புதுல் வேண்டும்.

இதே போல் மெய் எழுத்துக்கு ஒலி அரை மாத்திரை. மாத்திரையின் கால அளவென்ன?

"கண்இமை நொடிஎன அவ்வே மாத்திரை

நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே" (தொல். எழுத்து - நூல்மரபு 8)

(இயல்பாகக் கண் இமைத்தலும், விரல் நொடித்தலுமே ஒரு மாத்திரை என்னும் ஒலி அளவு. இது தெளிவாக அறிந்தோர் வழி.)

காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், அறிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை வரையறை செய்யாது போயினர். அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றைத் தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.

அரசர்கள் முடிசூடிக் கொண்ட ஆண்டை அடிப்படையாகக் கொண்டே அந்தந்த அரசர் 25 ஆண்டுகள், 50 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் எனக் குறிப்பிட்டார்கள். புலவர்களைப் பொறுத்தளவில் பிறந்த இறந்த ஆண்டுபற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடர் ஆண்டு இல்லாதது முக்கிய காரணமாகும், இருக்கிற 60 ஆண்டுகளும் சுழற்சி முறையில் வருவது மேலும் குழப்பத்தை உருவாக்கவே உதவியது. இதனால் வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியவில்லை.

இடைக் காலத்தில் 'சக' ஆண்டை வைத்து தொடர் ஆண்டு எண்ணப்பட்டது. சக என்பது வடபுலத்து அரசன் சாலிவாகன் பெயரில் உள்ள சாலிவாகன சகாப்தம் என்பதன் சுருக்கமாகும். தமிழ்நாட்டில் மொகலாயர் ஆட்சி நடந்தபோது அரசு ஆவணங்களில், குறிப்பாக வருவாய்த் துறை ஆவணங்களில் 'பசலி' ஆண்டு என்ற தொடர் ஆண்டு பின்பற்றப்பட்டது.

புராணக் கதையின்படி ஒரு காலத்தில் நாரத முனிவர் காமம் மேலோங்கி அலைந்தபோது அவருக்கு அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான் நினைவு வந்ததது. நேராக அவர் முன் போய் "'கிருஷ்ணா, சதா கோபியரோடு கொஞ்சி இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு கோபியைத் தந்து எனது காம இச்சையைத் தீர்த்து வைக்க வேண்டும்''; என வேண்டினார்.

அதற்குக் கிருஷ்ண பரமாத்மா ''நாரதரே, நான் இல்லாத பெண்ணை நீ அனுபவித்துக்கொள்'' என ஆறுதல் மொழி கூறினார்.

ஆண்டவன் அருள்வாக்கு அருளப்பெற்ற நாரதர் வீடு வீடாய் (நாயாய்) அலைந்தார். அனைத்துப் பெண்கள் மனதிலும் கிருஷ்ணனே நீக்கமறக் குடி கொண்டிருந்தார். ஒரு கோபியும் அதற்கு விதி விலக்கல்ல. ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்த நாரதர் மானம், வெட்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மீண்;டும் கிருஷ்ண பரமாத்மாவிடமே வந்தார்.

'கிருஷ்ணா! எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். தேவரீர் என்னை இவ்விதம் சோதிக்கலாமா? காம வேட்கை எனை வாட்டுகிறது. என்னைப் பெண்ணாக மாற்றி நீரே என்னை அனுபவித்து என் வேட்கையைப் போக்க வேண்டும்"' என வேண்டி நின்றார்.

பரிதாபப் பட்ட பகவானும் அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார்.

அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத இவ்வாண்டு முறை வரலாற்றுக்கு உதவாத வகையில் உள்ளது.

இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை ஆத்திரம் கொள்ளாமல் ஆன்மீகத் தமிழர்கள் ஆர அமர அலசிப் பார்க்க வேண்டும்.

பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக் காட்டாக மூன்றாவது ஆண்டின் பெயரான ""சுக்கில"" ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்துமூன்றாவது ஆண்டான விரோதி எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு குரோதி. இதன் பொருள் பழிவாங்குபவன் என்பதாகும். முப்பத்துமூன்றாவது ஆண்டின் பெயர் விகாரி. பொருள் அழகற்றவன், ஐம்பத்துஐந்தாவது ஆண்டான துன்மதி கெட்டபுத்தி என்று பொருள்.

ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும்.

இந்தக் குழப்பத்தை நீக்க தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் மறைமலை அடிகளார் தலைமையில் 1921 ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பிறந்த ஆண்டை கி.மு 31 எனக் கொண்டு, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டை ஏற்படுத்துவதென முடிவு செய்தனர். இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமென அவர்கள் அறிவித்தனர்.

வானவியல் அடிப்படையில் தை முதல் நாள் ஞாயிறு தனுசு இராசியில் பட்டு மகர இராசியில் மலர்கிறான்.

தமிழ்நாடு அரசு அதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. தைப் பொங்கல் திருநாளும் திருவள்ளுவர் நினைவாக அதற்கு மறு நாளும் அரச விடுமுறை நாட்களாகும்.

'பத்தன்று நூறன்று பன்னூ றன்று

பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்

புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்''

என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல் கருத்து தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதைத் தெளிவாக்குகிறது.

தமிழ் மண் மீட்பு, தமிழின மீட்பு இவற்றோடு நின்றுவிடாமல் பிற பண்பாட்டுப் படையெடுப்பால் இடைக்காலத்தில் சிதைக்கப்பட்ட எங்கள் கலை பண்பாட்டையும் நாங்கள் மீட்டெடுக்க வேண்டும்.

தைப் புத்தாண்டில் உலகம் வாழ் தமிழ்மக்கள் வாழ்வில் அல்லல்கள் நீங்கட்டும். துன்பங்கள் தொலையட்டும். இருள் அகலட்டும். விடியல் தோன்றட்டும். கோடி இன்பங்கள் குவியட்டும். மகிழ்ச்சி பொங்கட்டும். கல்வி துலங்கட்டும். தொழில்வளம் பெருகட்டும். அறிவியல் வளரட்டும். தமிழுணர்வு ஓங்கட்டும். இனவுணர்வு மலரட்டும்.

தமிழ் மண்ணில் அமைதி நிலவட்டும். அடிமை வாழ்வு முடியட்டும். மக்கள் வாழ்வில் தென்றல் வீசி புது வாழ்வு பூக்கட்டும். அந்த நம்பிக்கையுடன் புதிய ஆண்டில் காலடி எடுத்து வைப்போம்.

புதன், 12 ஜனவரி, 2011

சுயமரியாதை சுடரொளி ஊற்றங்கரை மானமிகு.அ.பழனியப்பன் 18 ஆம் ஆண்டு நினைவு நாள்

(சுயமரியாதை சுடரொளி ஊற்றங்கரை மானமிகு.அ.பழனியப்பன் அவர்களின் மறைவு குறித்து புலவர்.மா.சக்கரவர்த்தி பாடிய இரங்கற்பா)

பொருளற்றார்  பூப்பார் ஒருகால்
என்றான்  வள்ளுவன்

வண்டியோட்டி  வயிறு வளர்த்த
என் மாமன் அண்ணாமலைக்கும்
உண்ணாமலைக்கும் ..........
நான்காம் மகனாய் பிறந்தான்
என் அன்பு மாப்பிள்ளை
என் அறிவு மாணாக்கன்
பழனியப்பன் என்கிற பகுத்தறிவப்பன்

தந்தையால் கொஞ்சி மகிழ்ந்து
விளையாட முடியாதவன்
தமையன்களால் தாங்கத்
தவழ்ந்து எழுந்தவன்

வாட்டிய வறுமையும்
பூட்டிய உழைப்புமாய்
ஓட்டிய குடும்பத்தில்
ஒருவன் உயர்ந்தான்
அவன் தான் அருணாசலம்
அந் நாளைய ரோடு மேஸ்தரி !

சீர் தேடி சீமை சென்ற
சிவபிரகாச மாமனோ ....
ஊர் தேடி உழைப்பே
செல்வமென திரும்பி வந்தார்
உயர்த்து குடும்பம்
ஒன்றுக்கு நான்காய்
வீடுகள் பெருகின

ஆசிரியர் பயிற்சிக்கு
தேறினான் பழனியப்பன்
ஆனால் .....
பிள்ளைகட்கு சொல்லித் தர\
வாய்க்கவில்லை

ஆறுதல் தந்து மேஸ்திரி
அவனுக்கு சோடா பாட்டில்
சுற்றி நிரப்பி
ஊர் ஊராய் கடை கடையாய்
போட சொன்னார்

மிதி வண்டியில்
கொளுத்தும் வெயிலில்
மேனி வியர்க்க
சுழன்று சுழன்று உழைத்தான் அவன்
அய்யோ...!இன்று
சுழன்றது போதுமென ஒய்ந்தானோ ?
.................................................................
................................................................

கோரிக்கையற்று  கிடக்குதண்ணே
வேரில் பழுத்த பலா  எனக்
கைம்பெண்களுக்காகக்
கலங்கிய பாவேந்தன்
கனவை நனவாக்கினான்
கண்ணான பழனியப்பன்

எங்கள் கடத்தூரில்
வேரில் பழுத்த பலாவாய்
கலைமணி என்பாள்
கலங்கி இருக்கையில்

மணந்திடு அவளை மாப்பிள்ளை
என நான் வேண்ட
குணக்குன்றாம்
கோடியில் ஒருவனாம் பழனியப்பன்
அணங்கினை சந்தித்து
அவள் அண்ணன்மார்  சகதீசன்
சோதரர் ஆகியோடு

பெரிய மாமன் சிவபிரகாசம்
கைம்பெண் கொடுமை ஒழிப்பு
ஆதரவோடு
பெண்குலத்து மாதரசியாம்
தருமபுரி காளியம்மாள்
துணை வர

திருவண்ணாமலையில்
கைபிடித்தான் கலைமணியை!
.........................................................
............................................................

முதலில் பெண் பெற்றால்
என் வீட்டு மருமகளாய்
வரவேண்டும் எனக் கேட்டேன்
ஒப்பினார் இருவரும்
ஆண் இரண்டை பெற்று விட்டு
மாமனுக்கு தந்த வாக்கை
மறந்து துறந்து விட்டு
வானின் பெரிதாம் புகழுடம்பை
வையத்தார் போற்ற
தான் சென்ற அடைந்தானே !
தகுமோ பெரியாரே !

என் ஊன் இன்று உருகி
உள்ளம் இன்று கருகி
ஏன் என்று கேட்டு அழுகின்றேன்

ஏக்கமே மூச்சாக
என் எழுத்தால் துக்கமதை
எடுத்து வைத்தேன் உலகீரே!

வாழ்க்கை என்பது வியாபாரம் -அதில்
பிறப்பு என்பது வரவாகும்
இறப்பு என்பது செலவாகும்
என்றான் கண்ணதாசன்

வாழ்க்கை வியாபாரத்தில்
பழனியப்பன்
வானளாவ வெற்றி கண்டு
பிறப்பெனும் வரவினிலே
பகுத்தறிவு பகலவன் வழி சென்று
இறப்பெனும் செலவினிலே
இணையில்லா புகழ் கொண்டான்

தந்தை பெரியார்
பெயர் உள்ளளவும்
பகுத்தறிவு நெஞ்சங்களில்
பசுமை நினைவாக
அவன் பெயர் நிலைத்திருக்கும்
வாழ்க பழனியப்பன் புகழ் !
----கவிதை ஆக்கம் புலவர் .மா.சக்கரவர்த்தி

செவ்வாய், 11 ஜனவரி, 2011

இன எழுச்சி: மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் உண்ம...

இன எழுச்சி: மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் உண்ம...: " ஊற்றங்கரை தந்தை பெரியார் சிலை அருகில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஸ்பெக்ட்ரம் உண்மை நிலை  என்ன ? என்னும் பொதுக்கூட்டம் நடைபெற்றது ...."

மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் உண்மை நிலை என்ன ?திராவிடர் கழக பொதுக்கூட்டம்

    
ஊற்றங்கரை தந்தை பெரியார் சிலை அருகில் திராவிடர் கழகத்தின் சார்பில்  என்ன ? என்னும் பொதுக்கூட்டம் நடைபெற்றது .இக் கூட்டத்திற்கு திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் மானமிகு  இர.அன்பு வரவேற்புரையற்றினார் திராவிடர் கழக மண்டல செயலாளர் மானமிகு  பழ.வெங்கடாசலம் தலைமை வகித்தார் .கிருட்டினகிரி மாவட்ட தி.க தலைவர்  மானமிகு.தா.திருப்பதி,   கிருட்டினகிரி மாவட்ட  தி.க  செயலாளர் மானமிகு .கோ .திராவிடமணி ,மாநில ப.க.துணை தலைவர்   மானமிகு .அண்ணா.சரவணன்  கிருட்டினகிரிமண்டல செயலாளர் மானமிகு .மு.தியாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பருகூர்சட்ட மன்ற உறுப்பினர்மானமிகு.கே.ஆர்.கே.நரசிம்மன் திமுக   மாவட்ட துணை செயலாளர் மானமிகு .எ.என் .ராஜா திமுக ஒன்றிய செயலாளர் மானமிகு .எக்கூர்.த.செல்வம்   திமுக நகர செயலாளர் மானமிகு.பாபுசிவக்குமார் திமுக   நகர அவைத் தலைவர் மானமிகு.பா.அமானுல்லா மாவட்ட தி.மு.க.இலக்கிய அணி செயலாளர் மானமிகு .தணிகை .ஜி.கருணாநிதி  ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர் திமுக மாவட்ட செயலாளர் மானமிகு .டி.செங்குட்டுவன்  கலந்து கொண்டு சிறப்பித்தார் .திராவிடர்  கழக துணை பொதுசெயலாளர் மானமிகு.துரை.சந்திரசேகரன் ஸ்பெக்ட்ரம் உண்மை நிலை குறித்தும்  திமுக அரசின் சாதனைகள் குறித்தும் மிக சிறப்பான உரையாற்றினார் இந் நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர்   அரங்க.இரவி மாவட்ட துணை செயலாளர் எம்.கே.எஸ்.இளங்கோவன் மாவட்ட இலஞ்சரணி தலைவர்வி.ஜி .இளங்கோ மாவட்டப.க.அமைப்பாளர்சித.வீரமணி ஒன்றிய ப.க தலைவர்சித.அருள்  ஒன்றிய திக தலைவர்மானமிகு மா.ரவிச்சந்திரன்  ஒன்றிய ப.க தலைவர் இராம.சகாதேவன் ஒன்றிய ப.க.செயலாளர் இரு .கிருட்டிணன் நகர தலைவர் இர.வேங்கடம் நகர செயலாளர் முனி. வெங்கடேசன் சி.சாமிநாதன் ,க.துரை ,தீ.பொன்னுசாமி .வே.காவேரி ,பொன்.குப்புசாமி ,ஜெ.சிவலிங்கம் ,கணபதி கி .ஆ கோபாலன் ,புயல் ,மாயகண்ணன்,ஜெயராமன் ,தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டனர் முன்னால் மாவட்ட செயலர் பழ .பிரபு நன்றி கூறினார் ஒன்றிய நகர திராவிடர் கழகம இந் நிகச்சியை ஏற்பாடு செய்தது ,