வியாழன், 17 ஏப்ரல், 2014

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் என்பது ஒரு வரலாற்றுப் புரட்டே !

புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற விழாவாக உலங்கெங்கும் உள்ள கிருஸ்துவர்கள் கொண்டாடுகின்றனர் .இன்றைக்கு  கிறிஸ்தவர்கள் நம்பிக்கொண்டிருப்பது போல் உண்மையிலேயே இயேசு 3 இரவு 3 பகல் பூமியில் இருதயத்தில் இருந்து பின்னர் உயிர்த்தெழுந்தாரா? அவர் முன்னறிவித்த காலக்கணக்கு பைபிளுடன் ஒத்துப்போகின்றதா? புனித வெள்ளியும் ஈஸ்டர் தினமும் சரியானது தானா? என்பதை எல்லாம் பைபிளின் வார்த்தைகளின் படி  ஆராய்வோம். .

இயேசுவிடம் ஒரு அடையாளத்தைத் காட்டும் என்று வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் கேட்டதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தாக பைபிளில் எழுதப்பட்டுள்ளது :

இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். - மத்தேயு 12:39

For as Jonas was three days and three nights in the whale's belly; so shall the Son of man be three days and three nights in the heart of the earth

அதாவது, யோனா தீர்க்கதரிசி மீனின்வயிற்றில் உயிருடன் இருந்தது போல தானும் 3 பகல் 3 இரவு (3 days and 3 nights) பூமியின் இருதயத்தில் இருப்பேன் என்கிறார். இந்த 3 பகல் 3 இரவு என்ற காலக்கணக்கை வைத்து தான் பல அப்பாவிக் கிறிஸ்தவர்கள், இயேசு தான் சொன்னதன் படியே சிலுவையில் அறையப்பட்டு 3 நாள் கழித்து உயிர்த்தெழுந்தார், என்கிறது பைபிள் இயேசுவை சிலுவையில் அறைந்தது வெள்ளிக்கிழமை என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். வெள்ளிக்கிழமை அன்று 3ம் மணி வேலையாக இருந்த போது அவரை சிலுவையில் அறைந்ததாக பைபிளில் சொல்லப்படுகின்றது :

அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம்மணி வேளையாயிருந்தது. - மாற்கு 15:25

அதன்பிறகு சில மணி நேரம் கழித்து அவர் இறந்து விடுவதாகவும், அதன் பின்னர் அரிமத்தியாக்காரனான யோசேப்பு என்பவன் வெள்ளிக்கிழமை மாலை சூரியன் மறையத் தெடாங்கிய பின் இயேசுவின் உடலைக் கேட்டதாகவும், பின்னர் அவரது உடலைப் பெற்றுக்கொணடு அடக்கம் செய்ததாகவும் பைபிளில் சொல்லப்படுகின்றது:

யோசேப்பு என்னும் பேர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான். அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான். அவன் யூதருடைய பட்டணங்களிலொன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்துக்குக் காத்திருந்தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதியாதவனுமாயிருந்தான். அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு, அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான். அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது. ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று. – லூக்கா 23:50-54

அதாவது இயேசு கல்லறையில் வைக்கப்படும் போது இரவு ஆரம்பமாகிவிட்டது என்பதைத் தான் ஓய்வு நாளும் ஆரம்பமாயிற்று (அதாவது சனிக்கிழமை ஆரம்பமாயிற்று) என்று இங்கே சொல்லப்படுகின்றது. ஏனெனில் பைபிளின் படி ஒரு நாள் என்பது மாலை சூரியன் மறையத்தொடங்கியதிலிருந்து தான் ஆரம்பமாகின்றது. (பார்க்க ஆதியாகமம் 1:5, லேவியராகமம் 23:32)

WBTC மொழிப்பெயர்ப்பின் மாற்கு 15:42ம் வசனத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது :

இந்த நாள் ஆயத்த நாள் என்று அழைக்கப்பட்டது. (அதாவது ஓய்வு நாளான சனிக்கிழமைக்கு முந்திய நாள்) அன்று இருட்டத் தொடங்கியதும் மரியாதைக்குரிய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரைச்சேர்ந்தவனும் தேவனுடைய இரஜ்யம் வருவதற்காக காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் பிலாத்துவினிடத்தில் துனிந்து போய் இயேசுவின் சரீரத்தைக் கேட்டான் - மாற்கு 15:42-43

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த வசனங்களின் மூலம் இயேசு அடக்கம் செய்யப்பட்டது வெள்ளிக்கிழமை இரவு என்பது மிகத் தெளிவாக விளங்கும். ஏனெனில் யோசேப்பு என்பவன் பிலாத்துவினிடத்தில் இயேசுவின் உடலைக் கேட்கும் போதே சூரியன் மறையத்தொடங்கிவிட்டது - இருட்டத் தொங்கிவிட்டது - என்று இங்கு சொல்லப்பட்டுள்ளது. அதன் பின் அவன் யூதர்கள் முறைப்படி அடக்கம் செய்யப்படும் போது கண்டிப்பாக இரவு வந்துவிடும் - அடுத்தநாள் தொடங்கிவிடும் என்பது தெளிவாக விளங்கும்.

அதன் பின்னர் இயேசு எப்போது உயிர்த்தெழுந்தார் என்பதை பைபிளில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக்கண்டாள் - யோவான் 1:20

உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல், - லூக்கா 24:3

அதாவது இந்த வசனங்களின் மூலம் ஞாயிற்றுக்கிழமை விடிவதற்கு முன்பே - சூரியன் உதயமாவதற்கு முன்பே - இயேசு உயிர்த்தெழுந்ததாக பைபிளின் எழுத்தாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வசனங்களின்படி பார்த்தால் இயேசு பூமியின் இருதயத்தில் - கல்லறையில் எத்தனை நாட்கள் இருந்திருப்பார்? அவர் முன்னறிவித்ததன்படி இருந்தாரா அல்லது அதற்கு மாற்றமாக இருந்தாரா? அதை ஒரு இலகுவான கணக்கின்படி பார்ப்போம்:
 இயேசு உடல் கல்லறையில் இருந்த நாட்கள்                         பகல்                               இரவு
         வெள்ளிக்கிழமை-- -             இல்லை-- -       11 இரவு--
         -சனிக்கிழமை-                       1  பகல்-          1 இரவு
 -ஞாயிற்றுக்கிழமை------ --            இல்லை         இல்லை

 --மொத்தம்--                                  1 பகல்---                   2 இரவு
                                                                                              
-------------------------------------------

மேலே நாம் பார்த்த கணக்கின்படி இயேசு பூமியின் இருதயத்தில் (அதாவது கல்லறையில்) இருந்தது வெறும் 1 பகல் 2 இரவுகள் மட்டுமே என்பது தெளிவாக விளங்கும். ஆனால் மத்தேயு 12:39ம் வசனத்தின் படி இயேசு 3 பகல் 3 இரவு பூமியின் இருதயத்தில் இருப்பேன் என்று முன்னறிவித்தாரே? அப்படி இருந்தாரா? பைபிளின் அவரது கடைசிகால நிகழ்வுகள் அப்படித்தான் இருந்தார் என்று சொல்லுகின்றதா? இல்லையே! மாறாக 1 பகல் 2 இரவுகள் மட்டும் தான் பூமியின் இருதயத்தில் (கல்லறையில்) இருந்ததாக ஒன்றல்ல நான்கு சுவிஷேஷங்களிலும் எழுதப்பட்டுள்ளது. இது இயேசுவின் சிலுவை கொள்கையில் உள்ள அப்பட்டமான முரண்பாடு இல்லையா?இப்படிப்பட்ட அப்பட்டமான முரண்பாடு வரலாமா? இந்த சம்பவம் உன்மையிலேயே நடந்திருந்தால் இந்த குழப்பம் வந்திருக்குமா? புனித வெள்ளி கொண்டாடும் கிருஸ்துவர்களே சற்று சிந்தியுங்கள் !

வியாழன், 3 ஏப்ரல், 2014

வணிகர்களை வஞ்சிக்கும் அரசுகளுக்கு பாடம் புகட்டுவீர் !


வணிகர்களுக்கு என்று தனித்த அரசியல் அடையாளம் என்பது கிடையாது தான் !.பலரும் பல்வேறு அரசியல் இயக்கங்களில் பங்கேற்றும் உள்ளனர் ,பெரும்பாலான வணிகர்கள் ராவணன் ஆண்டால் என்ன ?ராமன் ஆண்டால் என்ன ? என்று வாக்குச் சாவடிக்கு கூட வராமல் வியாபாரம் செய்து கொண்டு இருப்பார்கள் . இப்போது நடைப்பெற போகும் இந்த தேர்தலையும் அப்படிதான் பார்க்கபோகிறோமா? இதை படித்து விட்டு கொஞ்சம் யோசியுங்கள் .
என் பள்ளி பருவத்தில் என் தாய் பள்ளிக்கு செல்ல அடம்பிடிக்கும் போது 50பைசா 1 ருபாய் கொடுத்து அனுப்புவார் .பள்ளிக்கு அருகில் சின்னதாய் கடை போட்டுள்ள பாட்டியிடம் பள்ளி இடைவேளையில் நண்பர்களுடன் வாங்கி சாப்பிடுவேன் இன்றைக்கு அதே பள்ளி இருக்கிறது ஆனால் அந்த பாட்டி இல்லை அவள் விற்ற கல்லை உருண்டை ,கமர்கட் ,குச்சிமிட்டாய் ,கொய்யா பழம் எதுவும் இல்லை .அதற்க்கு பதிலாக Lays,kurkure,MUNCH,டைரி மில்க் ,CHEETOOS,NOODULES,என பலவும் தொங்குகிறது .ஆம் நண்பர்களே ஒரு கிழவியின் வியாபாரத்தை பன்னாட்டு கம்பனிகளும் ,பனியா கும்பல்களும் கபளீகரம் செய்து இருக்கின்றன .காளி மார்க் சோடா இல்லை ,நன்னாரி சர்பத் இல்லை ,என பட்டியலிட்டால் அழிந்து போன தொழில்கள் கணக்கிலடங்கா.
இந்திய அரசின் புதிய பொருளாதார கொள்கை சில்லறை வணிகர்களுக்கும் ,வியாபாரிகளுக்கும் பெரும் கேடாய் அமைந்ததை எவர் மறுப்பார் .ரிலையன்ஸ் நிறுவனம் கறிவேப்பிலையையும் கொத்தமல்லியையும் விற்க வந்த பிறகு மற்றவற்றை பற்றி சொல்லவா வேண்டும் ? இதற்க்கு காரணமான காங்கிரஸ் அரசு தூக்கி எறியப்படவேண்டும் .அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக பி ஜே பி யை சொல்ல முடியாது ஏனெனில் இரண்டு கட்சிகளுக்கும் பொருளாதார கொள்கையில் வேறுபாடு கிடையாது .ஒரு வேளை பிஜேபி ஆட்சியில் இருந்திருந்தால் இதை விட மோசமான நிலை தான் இருந்திருக்கும் .இன்றைக்கு பன்னாட்டு கம்பனிகளும் ,பனியா கும்பல்களும் பிஜேபியை தூக்கி பிடிப்பதை பார்க்கிற போது காங்கிரசை விட பிஜேபி ஆபத்தானதாக தெரிகிறது .இது இந்திய அரசியல்.தமிழக அரசியல் என்று எடுத்து கொண்டால் ஆளும் அதிமுக அரசு வணிகர்களுக்கு இழைத்து வரும் துரோகம் ‘’ஒரு புரட்சிகர துரோகம் ‘’
‘’
அம்மா ‘’ பெயரில் ஒரு சுருக்கு கயிறு
ஏழை எளிய மக்களுக்கு மிக குறைந்த விலையில் அத்தியவாசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுத்தால் தான் அது நல்ல அரசு .தரமான பொருட்கள் மிக குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று தான் எல்லா வணிகர்களும் விரும்புகின்றனர் .ஆனால் ஆளும் அதிமுக அரசு உள்ளூர் தொழிலை நசுக்கி அதில் அரசியல் செய்து வருகிறது அதற்க்கு பல உதாரணங்களை சொல்லலாம்
‘’
அம்மா’’ குடிநீர்
எல்லா பேருந்து நிலையங்களிலும் கல்வி கற்க முடியாத சிறுவர்கள் ‘’வாட்டர் பாக்கெட் ‘’ ’வாட்டர் பாக்கெட் ‘’ கத்தி கொண்டு வருவதை சில மாதங்களுக்கு முன் பார்த்திருப்பீர். இப்போது என்ன ஆனார்கள் அந்த சிறுவர்கள் ? யோசித்து பார்த்தீர்களா? சுத்தமான குடிநீரை அனைத்து மக்களுக்கும் தர வக்கில்லாத அரசு தனது அரசியல் விளம்பரதிற்க்காய் பொருளின் அடக்க விலையை விட விலை குறைத்து அப்பாவி சிறுவனின் வயிற்றில் அடித்துள்ளது
அம்மா உணவகம்
சாலையோர உணவகங்கள் ,நடுத்தர உணவகங்கள் இன்றைக்கு விலையேற்றத்தாலும் மின்வெட்டாலும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது .இட்லிக்கு சட்னி கூட கரண்ட் இருந்தா தான் இந்த நிலையில் அவர்களின் தொழிலுக்கு எமனாக வந்தது அம்மா உணவகம் .ஒரு சப்பாத்தியின் விலை ஒரு ரூபாய் ஒரு சாப்பாட்டின் விலை 5 ருபாய் ,ஒரு பொருள் அதன் நிர்ணய விலையை விட அதிகம் விற்றால் மோசடி என்றால் அதே பொருள் அதன் அடக்கவிலையை விட மிகவும் குறைத்து விற்பது அதுவும் அரசியல் விளம்பரதிற்க்காய் செய்வது எவ்வளவு பெரிய மோசடி அதை தான் ஆளும் அதிமுக அரசு செய்து வருகிறது .இதனால் ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளோ ,பெரிய உணவங்களோ பாதிக்க படவில்லை .பாதிக்கப் பட்டவர்கள் சாலையோர ,நடுத்தர உணவகங்கள் தான் வறுமையின் பிடியில் அம்மா அம்மா என்று அவர்கள் கத்துவது விளம்பர சத்தத்தில் அம்மாவுக்கு தான் கேட்கவில்லை பாவம்!
அம்மா மருந்தகம்
திட்டமிட்டு அதிமுக அரசால் அழிக்கப்பட்டு வரும் தொழில் மக்கள் தொடர்பு மருந்து வணிகம் . ஏற்க்கனவே பன்னாட்டு கம்பனிகளின் வருகையாலும் ,சங்கிலி தொடர் வர்த்தகதினாலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பு மருந்து வணிகம் அம்மா மருந்தகம் ,மற்றும் கூட்டுறவு மருந்தகத்தால் மூடு விழாவிற்கு தயாரகி வருகிறது .ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்கு தான் அரசால் அரசு மருத்துவமனைகளில் இலவசமாய் மருந்துகள் வழங்கப்படுகிறது .இப்போது அம்மா மற்றும் கூட்டுறவு மருந்தகத்தில் 15% முதல் 20% வரை தள்ளுபடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது .மக்களுக்கு தள்ளுபடி வழங்கியதை அரசாங்கம் மானியமாக மீண்டும் திரும்பி மருந்தகத்திற்கு தந்துவிடும் .இப்போது மருந்து வியாபாரம் செய்பவர்களின் கதி அவர்களால் தள்ளுபடி தராமல் தொழிலை நடத்த முடியாது ,தள்ளுபடி தந்து வியாபாரமும் பண்ண முடியாது மற்றவர்களின் உயிரை காக்க மருந்து கொடுக்கும் மக்கள் தொடர்பு மருந்து வணிகர்களின் உயிரை அரசியல் லாபங்களுக்காய் அம்மா குடித்து வருகிறார்
இந்த பட்டியலில் திரை அரங்கங்கள் ,விசைத்தறி கூடங்கள் ,என பலவும் வரிசையாய் நிற்கிறது ,
இந்திய அரசியலில் காங்கிரஸ் ,பிஜேபி எப்படி தூக்கி எறியப்படவேண்டியதோ அவ்வாறே அதிமுக அரசும் அகற்றப்பட வேண்டியது . அன்பான வணிகர் பெருமக்களே !சிறு மற்றும் குறு வியாபாரிகளே !உழைக்கின்ற வர்க்கமே ! நமது வணிகத்தை பன்னாட்டு கம்பெனிகளிடமிருந்தும் ,பனியா கும்பளிடமிருந்தும் மட்டும் அல்ல தமிழக அரசின் வணிக விரோத கொள்கையில் இருந்தும் நம்மை காப்பாற்ற இப்போதுள்ள ஒரே வாய்ப்பு தேர்தல் மட்டுமே !அன்பார்ந்த வாக்காள வணிக பெருமக்களே வணிகர் விரோத அதிமுக ,பிஜேபி ,காங்கிரெஸ் கட்சிகளை புறக்கணிப்பீர்!