ஞாயிறு, 20 ஜூன், 2010

கருஞ்சட்டையின் பதில்

அண்மைக்காலமாக திராவிடர் கழகத்தை குற்றம் சொல்பவர்களும் குறை சொல்பவர்களும் ஒரு செய்தியை திரும்ப திரும்ப சொல்லி வருகின்றனர்.இவர்களில் எவரும் இயக்க நலன் கருதி சொல்பவர்களில்லை.இயக்கத்தை கொச்சை படுத்த வேண்டும் என்கிற உள்நோக்கமே மேல் நோங்கி உள்ளது.அச் செய்தி தலைவர் வீரமணி வாரிசு அரசியல் செய்கிறார்!தன் மகனை திட்டமிட்டு இயக்கதில் முன்னிலை படுத்துகிறார் என்பதே!குறை சொல்பவர்களுக்காக அல்ல!இயக்கத்தின் பற்றும் பாசமும் கொண்டுள்ள பலருக்கும் அந்த இயக்கத்தின் சாதாராண தொண்டன் இதை எப்படி பார்கிறான்,அவன் சொல்லும் பதில் என்ன என்பதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவேஇப்பக்கம்எழுதுகிறது                                                                                                                                                1.இது முழுக்க முழுக்க இயக்கத்தின் உள் கட்டமைப்பு சம்பந்தபட்டது.வெளியில் உள்ளவர்கள் கருத்து தேவயற்றது.திரு.அன்புராஜ் அவர்களை அனைத்து பொதுக்குழு உருப்பினர்களும் அனைத்து மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களிலும் ஒரு மனதாக தீர்மானம் போட்டு அனைத்து கழக தோழர்களும் எற்றுக்கொண்ட பின் இயக்கம் சாராதவர்களின் கருத்து தெரிவிப்பது அநாகரிகமானது                                       2.தந்தை பெரியார் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும் போது அன்னை மணியம்மையார் எங்கோ மூலையில் புத்தகம் விற்று கொண்டிருப்பார் அப்படி தான் தலைவர் வீரமணி குடும்பமும் தலைவர் மேடையில் முழங்கி கொண்டிருப்பார் அவர் குடும்பம் தொண்டர்களோடு தொண்டர்களாய் உட்கார்ந்திருக்கும் பல மாநாட்டு ஊர்வலங்களில் அன்புராஜ் கொடி பிடித்து பங்கேற்றதுண்டு பலருக்கும் அவர் தலைவரின் மகன் என்பது தெரியாது அவரும் தலைவரின் மகன் என்று முன்னிலை வகித்ததில்லை தொண்டர்களோடு தொண்டராய் இருந்தார்                               3.அன்புராஜ் திணிக்கப்படுகிறாரா? என்றால் இல்லை இப் பக்கத்தை எழுதிக்கொண்டு இருக்கும் நான் என் தந்தை சுயமரியாதை சுடரொளி தருமபுரி முன்னால் மாவட்ட தலைவர் அ.பழனியப்பன் மகன் நானும் சில ஆண்டுகள் தருமபுரி மாவட்டசெயலாளர் பொருப்பில் இருந்தேன் நான் மட்டும் அல்ல கழகத்தில் தாத்தா அப்பா மகன் என பல ஆண்டுகள் அவரவர் செயல்பாட்டிற்கும் தகுதிக்கும் எற்ப பொருப்புகளில் இருந்துள்ளனர்.அன்புராஜ் அவர்களும் ஒரே நாளில் தலைமை நிலைய செயலாலராக வரவில்லை அதற்கு முன்பே சில பொருப்புக்கள் வழங்கபட்டு அது வெற்றி கரமாக நடத்தப்பட்டு பலரின் பாராட்டு பெற்ற நிலையில் தான் வழங்கப்பட்டது                                                                                                                          4.அன்புராஜ் திட்டமிடப்பட்டு தலைமை பொருப்புக்கு கொண்டு வரபடுகிறரா?என்றால் இல்லை மறைந்த துரை.சக்ரவர்த்தி அவர்களை தான் தலைவர் வீரமணி தலைமை பொருப்புக்குத் தயார் படுத்தினார் என்பது அனைவரும் அறிந்த செய்தி.அவரின் திடீர் மறைவு, பணிச்சுமை,தலைவரின் உடல் நலம் அகியவற்றை கருத்தில் கொண்டு நம்பிக்கையான,நாணயமான,கட்டுப்பாடும்,அடக்கமும் ,உள்ள துடிப்பான இளைஞராக வாய்த்தவர் தான் அன்புராஜ்                                                                                                     5.இது இயக்கம் மட்டும் அல்ல;தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டு தலைவர் வீரமணியால் கட்டி காப்பற்றப்படும் குடும்பம்;கொள்கை குடும்பத்தின் தலைவரின் சுமையை எங்கள் மூத்த அண்ணன் சுமக்க வருவதில் தவறில்லையே!எங்களை பொருத்தவரை காலம் கடந்து வருகிறார் இன்னும் முன் கூட்டியே வந்திருக்க வேண்டும். ஒரு விசயம் புரியவில்லை அன்புராஜ் கண்டு பார்பான் பதருகிறான் புரிகிறது இங்கிருந்து வெளியேற்றபட்டவனும் பதருகிறானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக