வியாழன், 20 மார்ச், 2014

''கல்வி கொள்ளையர்களின் நூதன மோசடியும் அரசின் கடமையும் ‘’



கோழிப்பண்ணைகள் போல் நாமக்கல் ,சேலம் ,தருமபுரி ,கிருட்டினகிரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் சில பகுதிகளில் உள்ள மெட்ரிகுலேசன் பள்ளிகள் 9 ஆம் வகுப்பு பாடத்தை நடத்தாமல் 10 ஆம் வகுப்பு படத்தை இரண்டு ஆண்டுகள் நடத்துவதும் ,11 ஆம் ஆம் வகுப்பு பாடத்தை நடத்தாமல் 12 ஆம் வகுப்பு படத்தை இரண்டு ஆண்டுகள் நடத்துவதும் வழக்கமாக கொண்டிருந்தனர் ,இப்படி மாணவர்களை இவர்கள் பயிற்றுவிபபதினால் அரசு பள்ளி மாணவர்கள் இவர்களுடன் போட்டி போட முடியாமல் திணறுவதும் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்கள் அதிகமதிப்பெண் எடுத்து உயர் கல்விக்கு செல்வதும் அதைவைத்து இந்த கல்வி வியாபாரிகள் கொள்ளை அடித்து வந்ததும் அனைவரும் அறிந்ததே .
இந்த ஆண்டு அரசு உத்தரவுப் படி 11 ஆம் வகுப்பிற்கான வினாத்தாள் அரசால் தயாரிக்கப்பட்டு மேற்படி கல்வி நிலையங்களுக்கு அனுப்பப்பட்டது .ஒரு சில பள்ளிகள் அவசர அவசரமாக 11 ஆம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண் எடுக்கும் அளவிற்கு மட்டும் மாணவர்களை தயார் செய்தது .இன்னும் ஒரு சில பள்ளிகள் காலையில் வந்த வினாத்தாளை மாணவர்களிடம் கொடுத்து மதியத்திற்குள் நாற்பது ஒரு மதிப்பெண் வினாக்களை மட்டும் மனப்பாடம் செய்ய வைக்கின்றனர் .இன்னும் சில கிரிமினல் பள்ளிகள் மாணவர்களிடம் தெரிந்ததை எழுதுங்கள் உங்களை எப்படி தேர்ச்சி அடைய வைப்பது என்பது எங்களுக்கு தெரியும் என்கின்றனர் .ஆனால் அவர்கள் மட்டும் மாற தயாராய் இல்லை
இந்த நிலையை மாற்ற ஏழை எளிய கிராமத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட மாணவனும் இந்த மாணவர்களுடன் போட்டியிட வேண்டும் எனில் 11 ஆம் வகுப்பு தேர்வையும் அரசே நடத்தி அரசே விடைத்தாள் திருத்தும் மையங்களில் தேர்வு தாளை திருத்தி அந்த மதிப்பெண்களையும் 12 ஆம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்களையும் இணைத்தே உயர் கல்விக்கு தேந்தெடுக்க வேண்டும் இதை அரசு செய்ய முன் வருமா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக