புதன், 18 மே, 2011

மே 18 -ஈழ ஆதரவாளர்கள் சிந்தனைக்கு .....

தமிழ் இன வரலாற்றில் மே 18 ஒரு கருப்பு நாள் !

 இன்றைக்கு நினைத்து பார்கிறேன் ஈழ போராட்டம் என் வாழ்வில் எந்தனை அங்கம் வகித்திருகிறது என்பதை  .எனது பள்ளிகூட பருவத்தில் தமிழகத்தில் ஆதரவு திரட்ட எங்கள் பகுதியில் தங்கியிருந்த மேஜர் யசோதரன் ,லேப்..கர்னல் ஞானவேல் உடன் பேசி ,சிரித்து விளையாடிய போது தொடங்கி இருக்கலாம் எனது புலிகள் ஆதரவு உணர்வு

   .ஊற்றங்கரையில் 1985 இல் என்று நினைக்கிறன் எனது தந்தை சுயமரியாதை சுடரொளி பழனியப்பன் தலைமையில் தொடங்க பட்ட விடுதலை புலிகள் தோழமை கழகம் அணைத்து கட்சியினரையும் ஒருகிணைத்து காங்கிரெஸ் கட்சியினர்  உட்பட சின்ன ஊரான ஊற்றங்கரையில் 25000 ருபாய் அன்றைக்கு திரட்டி நாடகம் நடத்தி அய்யா நெடுமாறன் ,கவிஞர் காசி ஆனந்தனிடம் ஒப்படைத்தது ,ராஜீவ் மரணத்தின் போது எங்களுக்கு ஏற்ப்பட்ட பாதிப்பு ,காவல் துறைக்கு தெரியாமல் வீர வேங்கை அகிலா மரணத்தின் போது உணவாளர்களை ஒன்று திரட்டி வயக்காட்டில் வீரவணக்க கூட்டம்நடத்தியது ,என் தந்தையின் நினைவு நாளில் நினைவு தமிழ் விழா நடத்தி புலிகள் புகழ் பாடியது ,இன்னும் எத்தனை எத்தனையோ நினைவுகளில் நிழலாடுகிறது கடும் வெயிலிலும் மழையிளிலும் ஈழ போராட்டத்திற்க்காய் அலைந்தோம்  அத்தனையும் இன்று ஏக்க பெரு மூச்சாய் இருக்கிறது .
              மிக சிறிய அளவிலான பணிகளை செய்த எனக்கே இந் நாளில் இத்தனை துயரத்தையும் நினைவுகளையும் தருகிறதென்றால் புலிகள் அதிகம் பிரபலமாகாத காலத்தில் அவர்களுக்கு அடைக்கலம் தந்து காவல்துறையினரின் விசாரணைக்கு சென்று ,பொருளையும் உழைப்பையும் தந்த பல திராவிடர் கழக தோழர்களுக்கு இந் நாள் எத்தனை துயரம் தரும் !
       இன்றைக்கு புலிகள் ஆதரவையும் ,ஈழ ஆதரவையும் மிக வேகமாக பேசும் நண்பர்களை  அருள் கூர்ந்து வேண்டுகிறேன் .உங்களின் வேகம் நம்மை எந்த நிலையில் நிறுத்தி இருக்கிறது என்பதை தயவு செய்து எண்ணி பாருங்கள் !ஒரு காலத்தில் தமிழகத்தில் இரண்டே அணிகள் தான் புலிகள் \ஈழ ஆதரவாளர்கள் என்கிற ஒரு அணி எதிர்பாளர்கள் மற்றொரு  அணி ,ஆனால் இன்று அன்றைக்கு புலிகளை எதிர்த்தவர்கள் எல்லாம் ஈழ ஆதரவை பேசுகின்றனர் ,புலிகளை உண்மையாய் ஆதரிததவர்கள் ,அவர்களுக்கு களம் அமைத்து கொடுத்தவர்கள் புலிகளின் துரோகிகள் என்று குறை சொல்ல படுகின்றனர் .இன்னும் பகிரங்கமாகவே சொல்கிறேன் புலிகள் என்னை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளனர் ,பிரபாகரனை கைது செய்து தூக்கிலிட பட வேண்டும் என்ற ஜெயலலித்தா ஈழ ஆதரவலராய் சித்தரிக்க படுகிறார் .தமிழர்களை கொல்ல ஆய்தம் வழங்கிய சீனா வை  கண்டித்து வாய் திறக்காத கம்யூனிஸ்ட்கள் காங்கிரசை குறை சொல்ல ஈழ ஆதரவு பேசுகின்றனர் ,பெரியாரை ,திராவிடர் இயக்கங்களை குறை சொல்லி புதிய ஆதரவாளர்கள் கூட்டம் மறுபுறம் .....இன்னும் பட்டியல் நீண்டு கொண்டே போகும்

மே 18 இல் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்காக ,விடுதலை போராட்ட வீரர் களுக்காக வீர வணக்கம் செலுத்தும் முன் ஈழ ஆதரவாளர்கள் ஒருகினைக்க பட வேண்டும் என்கிற எண்ணத்தை நெஞ்சில் முன்னிருத்தவேன்டாமா ?இன்னும் அரசியல் பேசி ஒருவரை ஒருவர் குறை சொல்லி தமிழின பகைவர்களுக்கு நாமே துணை போவதா ?முதலில் புலிகளின் ஆதரவு கட்சிகள் மீதான விமர்சனகளை நிறுத்துங்கள் !இது விமர்சனம் செய்யும் காலம் அல்ல ஆக்க ரீதியாக அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டிய தருணம் அது தான் உண்மையாய் நாம் வித்தாய் போன வீரர்களுக்கு நாம் செலுத்து வீர வணக்கம்

1 கருத்து:

  1. பெயரில்லா18 மே, 2011 அன்று AM 8:35

    ஐயா பதிவாளரே முதலில் நீங்கள் தொங்கி்க் கொண்டிருக்கும் அரசில்கட்சியிலிருந்து விலகி வாருங்கள். நாம் ஜெயாவை என்றும் இனியும் ஈழ ஆதரயவாளராக பார்க்கவில்லை. ஆனால் மலைபோல் நம்பியிருந்த உலகத்தமிழர் தலைவன் என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டிருப்பவர் எதை செய்தார்? உங்களுக்கு ஈழத்தமிழர் மேல் ஈழத்தின் மேல் பற்று இருப்பின் முதலில் உண்மையான ஈழ, தமிழ் உணவாளர்களுடன் ஒன்றிணைந்து எமது துயரங்களுக்கு விடிவு தேட முயலுங்கள். அதை விடுத்து உங்கள் அரசியல் நாட்காலி அபிலாஷைகளுக்காக எம்மை பலிகடா ஆக்காதீர்கள் என தயவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு