சனி, 30 அக்டோபர், 2010

திராவிடர்கழக தலைமையை தலைமுறைதலைமுறையாக நேசிக்கும் பார்ப்பன குடும்பம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரபேடையில் நடேச அய்யர் என்பவர் இருந்தார் .அவர் உணவு விடுதி ஒன்றை நடத்தி வந்தார் .அந்த ஊரில் ''அய்யர் ஓட்டல் ''என்றால் மிக பிரபலம் .கடந்த 5 ஆண்டுக்கு முன்னர் வரை அந்த ஓட்டல் மிக சிறப்பாக இயங்கி வந்தது .தந்தை பெரியார் எப்போது அவ் வழியே   வந்தாலும் ,அல்லது திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும்போதும் நடேச அய்யர் அய்யாவை சந்திப்பார் அல்லது அய்யா நடேச அய்யரை சந்திப்பார் .எப்போதும் சிங்காரபேடையில் அய்யாவுக்கு அவர் ஓட்டலில் தான் உணவு .
அய்யா மறைவுக்கு பின்னர் ஆசிரியர் தலைமை பொறுப்பு ஏற்ற பின்னும் உறவு இன்னும் வலுவாக தொடர்ந்தது .ஆசிரியர் வீரமணி கழக நிகழ்சிகள் ,மண விழா,பொது நிகழ்வுகள் என்று அந்த பகுதிக்கு எப்போது வந்தாலும் பழம் ,நெய் ,பலகாரம் ஆகியன கொண்டு வந்து கொடுத்து அன்பை பரிமாறி செல்வர் .1999 ஆம் ஆண்டு நடேச அய்யர் மறைவுற்றார் .தகவல் அறிந்த ஆசிரியர் வீரமணி சமூகநீதி பிரச்சார பயணம் மேற்கொண்ட போது சிங்காரபேட்டை வந்த போது நடேச அய்யர் இல்லத்திற்கே சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார் .
                நடேச அய்யர் மறைவுக்கு பின்னர் அவரது மகன் தண்டபாணி அதே முறையை பின் பற்றி வருகிறார் .திராவிடர் கழக தோழர்களும் அப் பகுதிக்கு ஆசிரியர் வருகிறார் என்றால் அவர்களுக்கு தகவல் தெரிவித்து விடுகின்றனர்

            அண்மையில் நடைபெற்ற திருப்பத்தூர் திராவிடர் எழுச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த ஆசிரியர் வீரமணியை சுண்டல் ,பழம், நெய்யுடன்  மாவட்ட தலைவர் எழிலரசன் இல்லத்தில் சந்தித்தார் தண்டபாணி .இருவரும் அன்பை பரிமாறி கொண்ட காட்சியை புதிதாக காணும் தோழர்கள் சிலர் ஆச்சிரியப்பட்டு போனார்கள் .இது தலைமுறைகளை தாண்டிய நட்பு ,இங்கு தான் மனித நேயம் பூத்து குழுங்குவதை காண முடியும் !

புதன், 27 அக்டோபர், 2010

தீபாவளி தேவையா ?தமிழர்களே சிந்திபீர் !

தீபாவளி தேவையா ?தமிழர்களே சிந்திபீர் !

தீபாவளி, தமிழ் நாட்டின் மரபு வழிப் பொருளாதாரத்தோடும் பருவநிலைகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழாவாகும். பார்ப்பனீயத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. இந்தியாவில் கேரளா போன்ற மாநிலங்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை .தீபாவளியைக் குறிக்கும் வெடி, அதன் மூலப்பொருளான வெடி மருந்து ஆகியவை தமிழ் நாட்டிற்கு 15ஆம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை . விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி (தீப+ஆவளி) என்னும் வட சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லும் புழக்கத்தில் இல்லை ஆனாலும் தீபாவளியை ஏன் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது .
உள்ளபடியே தீபாவளி பண்டிகை ஓர்
பொருளாதாரப் பேரழிவு!
சுற்றுச்சூழல் சீர்கேடு!
சுகாதாரக் கேடு! உயிர்ப்பலி!
ஆரிய ஆபாசப் பண்டிகை!
தீபாவளியைப் பற்றி பல கதைகள் உண்டு. வடநாட்டவரைப் பொறுத்தளவில் (குஜராத்திகள், மார்வாரிகள்) தீபாவளி இலக்குமிக்கு உரிய நாள். அவர்களது புத்தாண்டின் தொடக்க நாள். வணிகர்கள் புதுக் கணக்கை அந்த நாளில்தான் தொடங்குகிறார்கள். வங்காளிகள் தீபாவளியை காளி அல்லது துர்க்கைக்குரிய நாளாகக் கொண்டாடுகிறார்கள். இன்னும் சில இனத்தவருக்கு தீபாவளி நாள் இராமன் வனவாசம் முடித்து அயோத்திக்குத் திரும்பிய நாள். தமிழர்களைப் பொறுத்தளவில் தீபாவளி நாள் நரகாசுரன் என்ற அசுரன் கொல்லப்பட்ட நாள்.
தீபாவளி கொண்டடப்படுவதற்கு பல கதைகள் உண்டு .புராணப்படி 
ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.தேவர்களின் முறையீட்டின்மீது மகா-விஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமி-யுடன் கலவி செய்தது. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.  விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்-தார்கள்.இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்(?!).இது ஒரு கதை .
இதை ஆராய்வோம்பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்த-போதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டி-னால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?இப் பண்டிகை கொண்டாடும் யாராவது இதை பற்றி சிந்திகிறர்களா?
மற்றொரு புராண கதை என்ன சொல்கிறது என்று பார்ப்போம்  !
நரகாசுரன் பூமாதேவியின் பிள்ளை. காமரூப நாட்டின் மன்னன். படைப்புக் கடவுளான பிரமாவை நோக்கி கடும் தவம் செய்து பல வரங்களைப் பெறுகிறான். அதன் பின் தேவர்களை அவன் துன்புறுத்துகிறான். துன்பத்தைப் பொறுக்க முடியாத தேவர்கள் வைகுண்டத்தில் திருமாலிடம் சென்று முறையிடுகிறார்கள். திருமால் வழக்கம் போல் தேவர்களைக் காக்க திருவுள்ளம் கொள்கிறார்.
ஆனால் நரகாசுரனை கொல்வது திருமாலுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. காரணம் நரகாசுரமன் தனது தாயின் கையால் அல்லாது வேறுயாராலும் கொல்ல முடியாதபடி ஏற்கனவே பிரமாவிடம் வரம் வாங்கி விட்டான். உடனே காத்தல் கடவுளான திருமால் பெரிய சதித் திட்டம் தீட்டுகிறார். தனது தேர்ச்சாரதியாக இரண்டாவது மனைவியான சத்தியபாமாவை (பூமாதேவியின் மறுஅவதாரம்) அமர்த்துகிறார். நரகாசுரனோடு நடக்கும் சண்டையின் நடுவில் அம்பு ஒன்று அவரைத் துளைக்கிறது. உடனே திருமால் மூர்ச்சை போட்டு விழுந்து விடுகிறார். உண்மையில் அப்படி அவர் மூர்ச்சைபோட்டு விழவில்லை. எல்லாம் நடிப்பு. இதனை விளங்கிக் கொள்ளாத சத்தியபாமா தனது கணவன் உண்மையிலேயே மூர்ச்சையாகி இறந்து விட்டார் என நினைத்து திருமாலின் வில்லை எடுத்து நரகாசுரன் மீது அம்பு எய்தி அவனைக் கொன்று விடுகிறார்.
உயிர் போகும் தருவாயில் நரகாசுரனிடம் உனது கடைசி ஆசை என்ன? என்று சத்தியபாமா கேட்கிறார். ”எனது மறைந்த நாளை மக்கள் எல்லோரும் கொண்டாட வேண்டும்”" என்கிறான் நரகாசுரன்.இப்படி பல விதமான கதைகள் அடிப்படையில் தேவர் -அசுரர் போராட்டத்தில் தேவர்களின் வெற்றி பெற்றதை குறிக்கும் நாள் தான் தீபாவளி .
நரகாசுரன் ஒரு திராவிட அரசனாகவும் திராவிடத்தை (வங்கத்தை)ச் சேர்ந்த ஒரு பிராகஜோதிஷம் என்னும் நகரை ஆண்டவனாகவும் அதே புராணங்களில் காணப்படுகின்றான். கதை எப்படியிருப்பினும், இவனும் - நரகாசுரனும், இரண்யாட்சன், இரண்யன், இராவணன், சூரபதுமன் முதலிய திராவிடர் தலைவர்களோடு ஒருவனாக மதிக்கப்பட வேண்டியவன் ஆவான். இவன் தன்னைப் பெற்ற தகப்பனால், தாயால் கொல்லப்பட்டதாகக் கதை கூறுகிறது. காரணம் தேவர் களுக்குத் தொல்லை கொடுத்ததால் என்கிறது புராணம்.
''இன்று நாம் (திராவிடர்கள் - தமிழர்கள்) இரண்யனையும், இராவணனையும் எப்படிப் போற்றிப் புகழ்ந்து மரியாதை செய்கின்றோமோ அது போலவே நரகாசுரனும் நம் மரியாதைக்கு உரியவனாவான். ஆதலால் அப்படிப்பட்ட நம் தலைவனை தேவர் கூட்டம் கொன்றதற்கு நாம் துக்கப்பட வேண்டுமே ஒழிய மகிழ்ச்சியடைவது மடமையும் இழிவும், மான ஈனமுமாகும்.''என்கிறார் அறிவாசான் பெரியார் .
 “தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியது அன்று, தீபாவளிப் பண்டிகை புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் கொலைக்காக தமிழர் மகிழ்ச்சி அடைதல் நன்று அன்று”"
என்று தமிழ்ப் பெரும் புலவர், பேராசிரியர் சைவப் பெரியார் கா.சுப்பிரமணிய(ன்) பிள்ளை தாமெழுதிய ‘தமிழர் சமயம்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
“தீபாவளி என்பது வடநாட்டு மார்வாரிகளும், குஜராத்திகளும் கொண்டாடும் புதுக்கணக்கு புத்தாண்டுப் பிறப்பு விழா. தீபாவளிக்கும் தமிழர்க்கும், தீபாவளிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை”" எனப் பேராசிரியர் சைவப்பெரியார் அ.கி. பரந்தாமனார் தாமெழுதிய “மதுரை நாயக்கமன்னர் கால வரலாறு”" என்னும் நூலில் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.“தீபாவளி சமணசமயப் பண்டிகை. பாவாபுரி நகரிலே அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த வர்த்தமான மகாவீரர் இறந்த விடியற்கால தினமே தீபாவளியாகும். தீபாவளி பற்றிய வரலாற்றுக்கும் நரகாசுரன் புராணக் கதைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தீபாவளி என்பதன் பொருள் விளக்கு வரிசை” (தீபம் – விளக்கு, ஆவலி – வரிசை )
என்று அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய “சமணமும் தமிழும்”" என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
“ஆரியப் பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனைக் கதையே தீபாவளி”
என்று சைவத் தமிழ் பெரியார் மறைமலை அடிகள் தான் எழுதிய “தமிழர் மதம்”" என்ற நூலில் எழுதியுள்ளார். மேலும் அவர் -“ஆரியரின் இந்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன்-இராவணனன் மதலான நிகரற்த தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படுவராயினர்”
(வேளாளர் நாகரிகம் – பக்கம் 60).என்கிறார்

இவர்கள் எல்லோரையும் விட இராமகிருஷ்ண பரமகம்சரின் சீடர் சுவாமி விவேகானந்தரே சொல்லி இருக்கிறார் '' தென்னிந்தியாவில் இருந்த மக்களே இராமாயாணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.''
(இராமாயணச் சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் பக்கம் 587-589)என்று .எதிரியே இறந்தாலும் அவன் மரணத்திற்காக வருத்தப்படுவது தான் திராவிடர்  பண்பு மகிழ்ச்சி அடைந்து கொண்டாடுவது ஆரிய குணம் !இதை அறியா தமிழர்கள் பண்டிகை கொண்டடுகிறர்களே? என்ன சொல்வது !

சுற்றுசுழல் கேடு 

                  
             இப் பண்டிகை அறிவுக்கு பொருந்தாதது மட்டும் அல்ல சுற்றுசூழலுக்கும் கேடு விளைவிக்கிறது .பண்டிகையின் போது வெடிக்படும் பட்டாசுகளால் ஒலி ,காற்று,நீர் ஆகியன மாசுபடுகிறது .புவியும் வெப்பமடைகிறது
பட்டாசுகளில் காரீயம் (lead ),மக்னிசியம ,துத்தநாகம் ,சோடியம் ,பொட்டசியம,செம்பு ,காட்மியம், பாஸ்பரஸ் (PO4 ),சல்பர்,நைட்ரைட் போன்ற எளிதில் தீப்பிடிக்கும் தன்மை உடைய ,எரித்தால் மனிதர் உடலுக்கு கேடு செய்யும் புகையை தரும் இராசயனகள் பட்டாசுகளில் கலக்கப் படுகின்றன

ஒலி மாசு 

                  
 சராசரி ஒலி கேட்பு திறன் 60 dB.இன்னும் ஒரு 10db அதிகரிப்பதாக :ஒலி மாசுகொண்டால் ஒலி அளவு இரு மடங்கு தீவிரப்படுத்தப்படும் .ஆனால் பெரும்பான்மையான பட்டாசுகள் 80db ஒலி எழுப்பும் தன்மை கொண்டதாக இருக்கிறது .அதிகமான ஒலி ,ஒலி கேட்பு திறனை குறைப்பதுடன் மாரடைப்பு ,இரத்தக்கொதிப்பு ,தூக்கமின்மையை உருவாக்குகிறது
ளினால் ஏற்படும் மாசினால் கண் .மூக்கு,தொண்டை பிரச்சனைகள் ஏற்படுகின்றன காற்றில் கரைந்துள்ள துகள்களின் அளவு 100 ppm அளவிற்கு தாண்டும் போது
                    

காற்று மாசுபடுதல் 

                    
                    தீபாவளி பண்டிகையில் வெடிக்கப்படும் பட்டசுக
தலைவலி ,மன ரீதியான பாதிப்புக்கள் ஏற்படுகிறன சல்பர் டை ஆக்சைடு எளிதில் காற்றில் கரைந்து நுரையீரலை தாக்கி மூச்சு குழல் சம்பந்த பட்ட வியாதிகளை உருவாக்குகிறது . நைட்ரஜன் டை ஆக்சை டு காற்றில் கரைந்து சளி ,ஆஸ்த்மா போன்ற வியாதிகளை உருவாக்குகிறது

குழந்தை தொழிலாளர்களின் குருதியில் நடக்கும் பண்டிகை 

சிவகாசியில் சிறிதும் பெரிதுமாக சுமார் 500 பட்டாசு தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த 500 தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் மட்டும் சுமார் 20,000 முதல் 40,000 வரை இருக்ககூடும் என்று NGO நிறுவனங்களின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அரசு தரும் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 10,000.                   



             இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் 90 விழுக்காடு சிவகாசியில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த 90 விழுக்காட்டில் பெரும்பகுதி ஒரே நாளில் - தீபாவளியன்று, கொளுத்தப்பட்டு கரியாகி விடுகிறது. இந்த ஒரு நாள் கூத்துக்காக சிவகாசி வருடம் முழுக்க உழைக்கிறது. பல மழலைகள் தங்கள் மழலைப் பருவத்தை இழந்து தவிக்கின்றனர். பலக் குழந்தைகள் பட்டாசு தயாரிக்கும் பொழுது நேரும் விபத்துக்களாலும், பல வித நோய்களாலும் மரணமடைகின்றனர்.
  
         குழந்தை தொழிலாளர்களில் 90% பெண் குழந்தைகள் தான். அதுவும் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் தான் அதிகம். குழந்தை தொழிலாளர்களை அதிக அளவில் புகுத்த காரணம், இவர்களுக்கு குறைவான சம்பளம் கொடுக்கலாம். ஆனால் நிறைய வேலை வாங்கலாம். ஒரு நாள் முழுக்க ஒரு குழந்தை பட்டாசு செய்தால் அதிகபட்ச சம்பளாமாக 30-50 ரூபாய் கிடைக்கும். 50 என்பதே கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட தொகை தான்.பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சென்று தான் வேலைப்பார்க்க வேண்டும் என்பது கிடையாது. வீட்டிலேயே இருந்து பட்டாசு செய்யலாம். அதன் மூலம் தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை என்பதாக வெளிஉலகுக்கு பட்டாசு முதலைகள் காண்பிப்பார்கள்.
      
                         பட்டாசு செய்யும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் கூட இருக்காது. வீட்டின் அடுப்பறை நெருப்பு பட்டாசு மேல் பட்டு பல நேரங்களில் பல மழலைகள் இறந்து போகின்றனர். இங்கு நடக்கும் பல விபத்துக்கள் மூடிமறைக்கப்படுகிறன. ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் சில விபத்துக்களாவது சிவகாசியில் நடக்கும். ஆனால் வெளியூலகுக்கு தெரியாமல் மூடி மறைக்கப்படும்.
         
        பட்டாசு சுற்றும் பொழுது மருந்துப் பெருட்களுடன் வாழ்வதால் குழந்தைகள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். பெண் குழந்தைகளின் கற்பப்பை வளர்ச்சி குறைந்து போவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒவ்வொரு நாளும் இந்த குழந்தைகளின் வாழ்நாள் கேள்விக்குறியுடன் தான் தொடங்குகிறது.
                        
                         இப்படி பல குழந்தைகளின் பரிதாப வாழ்க்கையின் வெளிப்பாடு தான்  தீபாவளி மத்தாப்புகளும், புஸ்வானங்களும், காதைப் பிளக்கும் அணுகுண்டுகளும்.
                       
                   ஒவ்வொரு மத்தாப்பின் ஒளியிலும் தெரிவது அழகான வண்ணங்களாக இருந்தாலும் அதற்கு பின் இருப்பது என்னவோ சிகப்பு நிறம் தான்... ஆம் அது சிவகாசி பிஞ்சுகளின் ரத்தம்..
                      
                      இப்படி அறிவுக்கு பொருந்தாத ,இனத்திற்கு எதிரான ,உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ,சுற்று சூழலுக்கு எதிரான ,குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் ஒரு பண்டிகை நமக்கு தேவைதானா? தமிழர்களே ! சிந்தியுங்கள்





திராவிடர் எழுச்சி மாநாட்டுக் காட்சிகள்

திராவிடர் எழுச்சி மாநாட்டுக் காட்சிகள்

செவ்வாய், 26 அக்டோபர், 2010

திருப்பத்தூர் மாடலை மற்றவர்களும் பின்பற்றவேண்டும்


தந்தையை விஞ்சிய தனயனாக கே.கே.சி. எழிலரசனின் சாதனை!
மக்கள் தொடர்பும்-செல்வாக்கும்-கூட்டு முயற்சியும்தான் வெற்றிக்கு மிக முக்கிய காரணங்கள்
இந்த திருப்பத்தூர் மாடலை மற்றவர்களும் பின்பற்றவேண்டும்
தலைமுறை இடைவெளியில்லாத தந்தை பெரியாரின்
தொண்டறம் தொடர்கிறது - அனைவருக்கும் பாராட்டுகள் - தமிழர் தலைவர் அறிக்கை -

வேலூர் திருப்பத்தூரில் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு மற்றும் மண்டல திராவிடர் எழுச்சி மாநாடு ஆகியவற்றின் வெற்றி குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் மிக மகிழ்ந்து பாராட்டி எழுதியுள்ள அறிக்கை வருமாறு:
வேலூர் மாவட்டத்தின் திருப்பத்தூரில் 23.10.2010 அன்று காலை நடைபெற்ற திராவிடர் கழகத்தின் பொதுக் குழுக் கூட்டமும், மாலையில் நடைபெற்ற மண்டல மாநாடும் கழக வரலாற்றில் ஒரு தனி சரித்திரம் படைத்தன என்றால், அது மிகையாகாது!
மக்கள் திருவிழா மாலையில்; கழகக் குடும்பங் களின் சங்கமம் காலையில் என்ற நிலையில் அமைந்த அந்த நிகழ்ச்சிகள் என்றென்றும் நம் நெஞ்சைவிட்டு நீங்காதவையாகும்!
வாணியம்பாடி தொடங்கி - திருப்பத்தூர்வரை
வாணியம்பாடி தொடங்கி திருப்பத்தூர் சுற்று வட்டாரங்கள்வரை கழகக் கொடிகள் அனைவரையும் வரவேற்றன!
எங்கெங்கு காணினும் கருஞ்சட்டை வீரர் - வீராங்கனைகள் பல்லாயிரக்கணக்கில்!
கிராமப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பல்லா யிரவர் பந்தல் போடப்பட்ட மாநாட்டில் மாபெரும் மக்கள் கடலாகக் குவிந்து விட்டனர்! நிகழ்ச்சிகள் மாலை 4 மணிக்குத் தொடங்குமுன்பே இருக்கைகள் போதவில்லை - அமர்ந்தவர்கள் பல பகுதி மக்கள் - மகளிர் கூட்டமும் கணிசமானவை என்ற அளவில் ஒரு பொதுத் திருவிழாபோல் கூடி விட்டனர்!
எழிலரசனின் மக்கள் தொடர்பு
மாவட்டத் தலைவர் கே.கே.சி. எழிலரசனின் மக்கள் தொடர்புக்கும், மகத்தான செல்வாக்குக்கும் எடுத்துக்காட்டாக அமைந்தது இம்மாநாடு!
கழக இளைஞரணியில் சுயமரியாதைச் சுடரொளி சோலையார்பேட்டை கே.கே. சின்னராசு அவர்களால் கழகக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டு, சேர்க்கப் பட்டு படிப்படியாக கழகத்திலும் உயர்ந்து, நகரத்திலும் வளர்ந்துள்ளார்!
இளைஞர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைத் தால், அது மிகப்பெரும்பாலான வாய்ப்புகளில் வீண் போவதில்லை. வெற்றியாக அமையும்.
இயக்கத்தில் இளைஞர்கள் பஞ்சமா?
பல பேர் நினைப்பதுண்டு - தந்தை பெரியார் அவர்கள் இயக்கத்தில் இளைஞர்கள் அதிகம் இல்லை என்று. அது ஒரு தவறான கருத்து என்பதை கழகத் தின் செயற்பாடுகளை, நடவடிக்கைகளை நாடு தழுவிய அளவில் பார்க்கும் பொதுவான எவர்க்கும் விளங்க வைக்கும்.
இளைஞர்கள்மீது தந்தை பெரியார் அவர்களுக் குள்ள பாசம், அன்பு, நம்பிக்கையும் அதிகம் என்பதற்கு இதோ இரண்டு ஆதாரங்கள்:
இதோ பெரியார் பேசுகிறார்!
1929 ஜனவரியில் நடைபெற்ற வட ஆற்காடு ஜில்லா பார்ப்பனரல்லாத வாலிபர்கள் மாநாட்டினைத் திறந்து வைத்து தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற் பொழிவில் (13.1.1929 குடிஅரசு இதழில் உள்ளது),
எனது இயக்கத்தையும், தொண்டையும் எனது உடல்நலிவிலும் சரீரத் தளர்ச்சியும், எதிரிகள் தொல் லையும் ஒரு சிறிதும் தடை செய்ய முடியாமல், என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்தி, வெற்றிக்கொடியை நாட்டி வருவதற்குப் பெரிதும் உதவியாய் இருந்து வருவது, இந்த வாலிப இயக்கமேயாகும். உண்மை யிலேயே, இப்போதைய வாலிபர்களிடம் எனக்கு அளவுக்கு மேற்பட்ட நம்பிக்கை இல்லாதிருக்குமானால், என்னுடைய கடையை வெகுநாளைக்கு முன்பே சுருட்டிக்கட்டிக் கொண்டு வேறு ஏதாவது துறையில் மூழ்கி இருப்பேன்.
ஆதலால், இந்த வாலிப இயக்கம்தான் நமது நாட்டிற்கு மாத்திரமல்லாமல் வெளிநாட்டிற்கும், சுதந் திரமும், விடுதலையும், சுயமரியாதையையும் வாங்கிக் கொடுக்கப் போகின்றது. எப்படி எனில், எந்த ஒரு நாட்டிற்கும் அரசியல் தலைவனோ, பாஷைப் பண்டிதனோ, சாஸ்திரியோ முயற்சித்து உண்மையான சுதந்திரமோ, விடுதலையோ வாங்கிக் கொடுத்ததாக சரித்திர காலந்தொட்டு நமக்கு ஆதாரங்கள் கிடையாது. எங்கும் வாலிபர் கிளர்ச்சிதான் விடுதலை அளித்திருக்கின்றது. ஒவ்வொரு விடுதலை முயற்சியும் முதலில் கட்டுப்பாட்டை உடைத்தெறிந்த பின்தான் வெற்றி பெற்றிருக்கின்றது!
(பழைமை) கட்டுப்பாடுகளை உடைப்பதற்கு வாலிபர் களால்தான் முடியுமே ஒழிய மற்றவர்களால் சுலபத்தில் சாத்தியப்படாது. ஆதலால் நான் முழுவதும் இந்த வாலிபர்களையே மனப்பூர்வமாக நம்பி இருக்கிறேன்.
(13.1.1929, குடிஅரசு)
சின்னப் பையன்கள்தாம்...
இரண்டாவது, அதே மாவட்டம் திருப்பத்தூரில் 1933 ஜனவரியில் நடந்த வடஆற்காடு ஜில்லா சுயமரியாதை மாநாட்டில் ஆற்றிய சொற்பொழி (13.1.1933, குடிஅரசு)வில் குறிப்பிடுகிறார்:
தோழர்களே, இந்த மாநாட்டுக்குத் தலைமை வகித்த தோழர் கே.எம். பாலசுப்பிரமணியம் பி.ஏ.பி.எல்., அவர்கள் தான் ஒரு சின்னப் பையன் என்றும், தன்னைத் தலைமைப் பதவியில் உட்கார வைத்து நான் வேடிக்கை செய்கிறேன் என்றும் சொன்னார்.
இந்த இயக்கம் இன்று ஏதாவது ஓரளவுக்காவது மதிக்கத் தகுந்த அளவுக்குப் பயன்பட்டு வருகிறது என்று சொல்லப்படுமானால், அதற்குக் காரணம் இந்த மாதிரி சின்னப் பையன்களே காரணமாகும். இப்படிப்பட்ட சின்னப் பையன்கள் இந்த இயக்கத்தில் இருப்பதனா லேயேதான் எனக்கு ஒருபுறம் வயது வளர்ந்தாலும், வாலிபமும் கூடவே வளர்ந்து வருகிறது. எனது சகவாசம் முழுவதும் சின்னப் பையன்களிடமே இருப்பதால்தான், சின்னப் பையன் தன்மை எனக்கு இன்னமும் இருந்தும், வளர்ந்தும் வருகிறது. என் ஆசையெல்லாம் நான் எப் போதும் சின்னப் பையன்கள் மாதிரியே இருக்கவேண்டு மென்பதோடு, பெரிய ஆளுகள் மாதிரி ஆகக்கூடாது என்பதுமாகும்!
என்னே, அற்புதமான இளைஞர்களுக்கு இயக்கத்தில் அங்கீகாரம், சிவப்புக் கம்பள வரவேற்பு மாட்சிதான் என்னே, பார்த்தீர்களா?
அத்தகைய ஓர் ஆற்றல் வாய்ந்த இளமைத் தலை மையும், அவரைச் சுற்றியுள்ள இளைய நண்பர்கள், நல விரும்பிகளின் ஒத்துழைப்பிலும் இப்படிப்பட்ட சாதனையை லகுவில் அனாயசமாக அந்தக் குழுவினர் (கூநயஅ) செய்து முடித்து முதற்பரிசை தட்டிச் சென்றது.
தலைமுறை இடைவெளி இல்லை
(1) விடுதலைக்கு 800 சந்தாக்களை அந்த மேடையில் அளித்தது.
(2) எடைக்கு எடை (இரு மடங்கு) பணம் தந்தது, அதை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்துக்குப் பயன்படுத்தச் சொன்னது,
(3) உள்ளூரில் இடம் வாங்கி பெரியார் நூலகம், படிப்பகம் அமைப்பதற்கு அச்சார நன்கொடைகள்.
(4) குடிஅரசு வெளியீட்டு விழா -
இவை எல்லாவற்றையும்விட வாழும் இயக்க வீரர் - வீராங்கனைகளை மாவட்டம் முழுவதும் தேடிப் பிடித்து, விருது வழங்கிப் பாராட்டியது!
வேர்களைத் தேடிப் பெருமைப்படுத்திய விழுதுகளின் கடமை உணர்வின் மாட்சிதான் என்னே!
அவர்களும் அங்கே 60-க்கு மேற்பட்ட, மறைந்தும் மறையாத கொள்கை லட்சிய வீரர்கள் - வீராங்கனை களான சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு வீர வணக்கம் என்று படங்களை அமைத்ததானது - தலைமுறை இடைவெளியில்லாத பெரியார் தம் தொண்டறம் இன்றும் தொடருகிறது; என்றும் தொடரும் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டாகும்.
தந்தையை விஞ்சிய தனயன்!
தோழர் எழிலரசன், தன் தந்தையை விஞ்சிய சாதனை யாளராக உயருவதற்கு அவரது நல்ல நண்பர்கள் குழாமே, காரணம்! கட்சி, ஜாதி, மத பேதமின்றி அவர்கள் பெரியார் பற்றாளர்கள் - அவர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய வெற்றியை ஈட்டினார் இந்த இளைஞர்!
ஒத்துழைத்த பெருமக்களுக்குப்
பாராட்டு - நன்றி!
அவருக்குத் துணையாக மாவட்டச் செயலாளர் மானமிகு கா. மகேந்திரன் - நல்ல இளைஞரணி தோழர்கள் இப்படி பலப் பலர்!
திருவாளர்கள் என்.கே.ஆர். சூர்யகுமார் எம்.எல்.ஏ., எஸ். இராஜேந்திரன் (தி.மு.க. நகர செயலாளர்), பி. கணேஷ்மல் (தலைவர், காமராஜர் அறக்கட்டளை), ஏ.அண்ணாதுரை (திருப்பத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர்), கு. இராஜமாணிக்கம் (கந்திலி ஒன்றியக் குழுத் தலைவர்), பொன்குணசேகரன் (மத்தூர் முன் னாள் ஒன்றிய குழுத்தலைவர்), ஏலகிரி எ.வி. செல்வம் (மாவட்டக் கவுன்சிலர்), ஆர். குலோத் துங்கன் (மாவட்டக் கவுன்சிலர்), இரா. லட்சுமிகாந்தன் (மாவட்ட கவுன்சிலர்), தணிகை ஜி. கருணாநிதி (தி.மு.க. இளைஞரணி துணை செயலாளர்), டி.வி. மாதவன் (ரோட்டரி முன்னாள் தலைவர்), டி. மதியழகன், தோழர் பரந்தாமன், அண்ணா அருணகிரி (தொழிலதிபர்), மாவட்டத் துணைச் செயலாளர் எம்.கே.எஸ். இளங் கோவன், மாவட்ட இளைஞரணி தலைவர் வி.ஜி. இளங்கோ, திருமதி அகிலா தலைமையில் அமைந்த ஆற்றலும், ஆர்வம் வாய்ந்த மகளிரணியினர், ம. கவிதா (மகளிரணி செயலாளர்), அண்ணா சரவணன், பழ. வெங்கடாசலம், மா. பன்னீர்செல்வம், எம். வெற்றி கொண்டான், ந. கமல், வ. ஆறுமுகம், சித. வீரமணி, அரங்க.இரவி, மா.சி. பாலன், கே.சி.எ. சிற்றரசு, ஜி. அருண், காளிதாஸ், எ.டி.ஜி. சித்தார்த்தன், புலவர் அண்ணாமலை இப்படி பல அணித் தோழர்கள், தோழியர்கள் ஒட்டுமொத்த கூட்டுழைப்பு மாபெரும் வெற்றியை அறுவடை செய்து, முதலிடத்தைப் பெற காரணமாக அமைந்தது.
அனைவருக்கும் நமது இதயமார்ந்த மகிழ்ச்சி கலந்த பாராட்டுகள் - வாழ்த்துகள்!
இது பணியின் முடிவல்ல; தொடக்கமே!
திருப்பத்தூர் மாடல்
தொய்வின்றி இந்த வெற்றிப் பயணம் தொடர்ந்து திருப்பத்தூர் மாடல் என்று எல்லோரும் பின்பற்ற முன்வரும் அளவுக்கு மேலும் உழைக்கத் திட்ட மிடுங்கள்!
சதா இயங்கிக் கொண்டே இருந்தால்தான் அது இயக்கம்! மறவாதீர்!!

தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

திருப்பம் தர காத்திருக்கிறது திருப்பத்தூர் வாருங்கள்!

''நான் என்னால் ஆன கடமைகளைச் செய்து முடித்தேன் என்ற களிப்புள்ளத்தோடு, எனது இறுதி நாள்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன். பெரியாரின் கனவுகளையெல்லாம் நனவாக்கிக் காட்டிடப் பல்லாயிரக்கணக்கில் இளஞ்சிங்கங்கள் தோன்றியிருக்கிறார்கள் என்ற மனநிறைவோடு நான் என் காலத்தை முடிக்க இருக்கிறேன். திராவிட நாடு திராவிடர்க்கே! இந்தி ஆதிக்கம் ஒழிக! தமிழ் வாழ்க! வளர்க! வெல்க! என்று முழக்கமிட்டு நான் மீளாவிடைபெற்றுச் செல்கிறேன். வாழ்க பெரியார்! வாழ்க திராவிடர் கழகம்!’''என்று தளபதி அஞ்சா நெஞ்சன் அழகிரி ஈரோட்டில் திராவிடர் கழக மாநாட்டில் தனது இறுதி உரையை பதிவு செய்த அதே  அக்டோபர் 23 இல் !


அண்ணாவை சாரட் வண்டியில் அமர வைத்து ஈரோடு முழுவதும் வலம் வர வைத்து . அந்த ஊர்வலத்தின்போது அறிவாசான் பெரியார் அந்த வண்டியின் பின்னால் நடந்தே வந்து  தனயனிடம் பெட்டிச் சாவியை ஒப்படைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்று அறிவித்தாரே  அந்த அக்டோபர் 23 இல் !


சுயமரியாதை சுடரொளிகள் தங்கவேல் ,கே.கே.சி.சினரராஜ் ,எ.டி.கோபால் ,கோவிந்தசாமி ,Dr நாதமுனி ,வடசேரி ஜெகதீசன் ,ஊத்தங்கரை பழனியப்பன் ,கல்லாவி சிதம்பரம் ,ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட எண்ணற்ற சுயமரியாதை தீரர்கள் களமாடிய மண்ணாம் திருப்பத்தூரில் திராவிடர் எழுச்சி மாநாடு!


 திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டம்அன்றைய தினம்  சனிக்கிழமை காலை 10.30 மணி ஜி.பி. மகால், திருப்பத்தூர் (புதுப்பேட்டை சாலை)யில் மானமிகு ராஜகிரி கோ.தங்கராசு, செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்
அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது .திருச்சியில் நடைபெறவிருக்கும் உலக நாத்திகர்கள் மாநாடு,  வைக்கத்தில் பெரியார் விழா, மற்றும் கழக  பிரச்சாரத் திட்டங்கள்ம குறித்து
மாநிலப் பொறுப்பாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினரகள் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றபட உள்ளன .


மாலை 3 .30 மணியளவில் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட மேடையில் மாநாடு துவங்குகிறது கழகக் கொடியை  தலைமை நிலைய செயல்லாளர் வீ.அன்புராஜ் ஏற்றி வைக்கிறார் .


திராவிடர் கழகம் தொடக்கம் முதல் தந்தை பெரியார் பாதை யைப் பற்றிக் கொண்டு, அய்யா, அம்மா, ஆசிரி யர் ஆகியோர் தலைமை களின் கீழ்  ஆடாமல், அசையாமல் கழகக் கொள்கைகளைக் கடும் பத்தியமாகக் கொண்டு, கழகத்திற்காக தொண்டு, நிதிகளை அளிப்பதோடு அல்லாமல், தமக்குப் பிறகும் தமது குடும்பம் திராவிடர் கழகப் பணிகளில் தொய்வின்றித் தொடர்ச் சியாக ஈடுபட்டுக் கொண் டேயிருக்க வேண்டும் என்பதைக் கருத்தாகக் கொண்ட சுயமரியாதை  சுடரொளி கே.கே.சின்னராஜ் அவர்களின் அன்பு மகனும் திராவிடர் கழக மாணவரணி இளைஞ்சரணி என பல பொறுப்புகளில் இருந்து 1998 ஆம் ஆண்டு கோவை  இல் நடை பெற்ற மத்திய நிர்வாக குழுவில் மிக இளம் வயது மாவட்ட தலைவர் என தலைவரால் அறிமுகபடுத்த பட்ட வரும் பயிற்சி முகாம்,கபடி போட்டிஎன கழகம் தந்த அணைத்து பணிகளையும் திறம்பட செயலாற்றி வருபவருமான மாவட்ட தலைவர் கே.கே.சி எழிலரசன் மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார் 


மாநாட்டில் பெரியார் பெருந்தொண்டர்களுக்கு சிறப்பு செய்து நினைவுப் பரிசும  , மறைந்த சுயமரியாதைச் சுடரொளிகள் படத்தினைத் திறந்து வைத்து வீர வணக்கம் செலுத்த படும்  ,
இனமான ஏடான விடுதலைக்கு ஆயிரம் சந்தாக்கள் வழங்க படுகிறது , குடிஅரசு 21 தொகுதிகளையும் முக்கியப் பிரமுகர்கள் வாங்குகின்றனர் 


 சென்னை பெரியார் திடலில் இயங்கிவரும் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்திற்கு- தமிழர் தலைவர் அவர்களுக்கு எடை நாணயம் வழங்கபடுகிறது
இத்தனைக்கும் மேலாக வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்கள் ,தமிழர் தலைவரின் எழுச்சி உரை அத்தனையும் ...!


திருப்பத்தூர் மாவட்ட கழகம் ஓராண்டுக்கு முன்பாக ஊத்தங்கரை ,மத்தூர் ஆகிய இரு ஒன்றியங்களை இணைத்து தமிழர் தலைவரின் செயல்திட்டம் ஏற்ற்று முழுவிச்சில் கழக பணியாற்றும் மாவட்டம் ஆகும் .தமிழர் தலைவர் பொதுகுழு அறிவித்த உடனேயே மாவட்ட தி.க. தலைவர் கே.சி. எழிலரசன்,தலைமையில்  மண்டல செயலாளர் பழ. வெங்கடாசலம், மாவட்ட செயலாளர் க.மகேந் திரன், மாநில ப.க. துணைத் தலைவர் அண்ணா சரவணன், பெரியார் சமூகக் காப்பு அணி துணை இயக்குநர் சித. வீரமணி, மாவட்ட துணைச் செய லாளர் எம்.கே.எஸ். இளங்கோவன், மாவட்ட இணைச் செயலாளர் அரங்க. இரவி, மாவட்ட இளைஞரணி தலைவர் வி.ஜி. இளங்கோ, அண்ணா அருணகிரி, கனகராஜ், ஆசிரியர் வையாபுரி, வெற்றிகொண்டான், உதயகுமார், ரமேசு, பழனிசாமி, எம். ஆனந்தன், சாமி. அரசிளங்கோ, மாவட்ட மகளிரணி தலைவர் எ. அகிலா உள்ளிட்ட தோழர்கள் பலரும் தேனீக்-களாக பறந்து திரிந்து ஏற்பாடுகளைச் செய்து வரு-கின்றனர்!


சுவர் எழுத்துகள், பொதுமக்களின் மத்தியிலே கவனத்தையும் பெரிதும் ஈர்கின்றன கையில், பத்துக்கும் மேற்பட்ட வளைவுகள், 500-க்கும் மேற்பட்ட பதாகை கள் அமைகப்பட்டுள்ளது நகரமே விழா கோலம் பூண்டுள்ளது


எனவேதான், அழைகிறோம் !திராவிடர் களே! கொள்கை சிங்கக் குட்டிகளே, பதவி, பட்டம், புகழ் என்ற போதை-களுக்கோ, ஜாதி, மதப் பேதங்கள் என்ற மயக்க பிஸ்-கெட்டுகளுக்கோ ஆளாகாத மாணவச் செல்வங்களே, உங்களைக் கட்டித் தழுவிடக் காத்திருக்கிறோம்!

உயர்நிலை காண உழைக்கும் தன்னலம் அறியாத தணலின் பிழம்புகளே _ உங்களால் சுட்டெரிக்கப்படக் கூடிய குப்பைகள் அநேகம். சுற்றுச்சூழலைப் பாது-காக்கும் வண்ணம் அதனையும் லாவகமாகச் செய்ய நல்ல திட்டங்களைத் தீட்டிட வாரீர்! வாரீர்!!

படைபோல் தடை உடைத்து வருகவே!

திருப்பம் தர காத்திருக்கிறது திருப்பத்தூர்  வாருங்கள்!
உண்டிக்கல்ல, உயர்வுக்கல்ல;

தொண்டுக்காக தூயவர்களே வாருங்கள்!

அணி அணியாய் வந்து பணிமுடித்து மகிழ படைபோல் வருக!



சமூகத் தடை உடைக்க வருக!

மாநாட்டு குழு  சார்பில் -பழ .பிரபு

வெள்ளி, 15 அக்டோபர், 2010

AVSEQ01

ஆயிரம் விடுதலை சந்தாக்கள் அளிப்பு
தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை இருமடங்கு ரூபாய் நாணயம் அளிப்பு
எழுச்சியூட்டும் திராவிடர் எழுச்சி மாநாடு
திருப்பத்தூரில்
அக்.23 இல் புதிய வரலாறு
திருப்பத்தூர், அக்.15- அக்டோபர் 23 சனி அன்று வ.ஆ. திருப்பத்தூரில் திராவிடர் எழுச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. அதனைப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நடத்துவது என்று கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
11.10.2010 அன்று காலை 9 மணிக்கு கழகத் துணைப் பொதுச்செயலாளர் உரத்தநாடு இரா. குண சேகரன் தலைமையில் திருப்பத்தூரில் கழகப் பொதுக் குழு, மாநாடு நடத்துவது தொடர்பாக பொறுப்பாளர் களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட தி.க. தலைவர் கே.சி. எழிலரசன், மண்டல செயலாளர் பழ. வெங்கடாசலம், மாநில இளைஞரணி செயலாளர் இரா. செயக்குமார், பெரியார் வீர விளையாட்டுக் கழக செயலாளர் நா. இராமகிருட்டினன், மாவட்ட செயலாளர் க.மகேந் திரன், மாநில ப.க. துணைத் தலைவர் அண்ணா சரவணன், பெரியார் சமூகக் காப்பு அணி துணை இயக்குநர் சித. வீரமணி, மாவட்ட துணைச் செய லாளர் எம்.கே.எஸ். இளங்கோவன், மாவட்ட இணைச் செயலாளர் அரங்க. இரவி, மாவட்ட இளைஞரணி தலைவர் வி.ஜி. இளங்கோ, அண்ணா அருணகிரி, கனகராஜ், ஆசிரியர் வையாபுரி, வெற்றிகொண்டான், உதயகுமார், ரமேசு, பழனிசாமி, எம். ஆனந்தன், சாமி. அரசிளங்கோ, மாவட்ட மகளிரணி தலைவர் எ. அகிலா ஆகியோர் கலந்துகொண்டனர்.
தீர்மானங்கள்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
உற்சாக வரவேற்பு
1. கழகப் பொதுக்குழு, திராவிடர் எழுச்சி மாநாட்டினை திருப்பத்தூரில் நடத்துவதற்கு ஒப்புதல் அளித்த தமிழர் தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், 23.10.2010 காலை சோலையார்பேட்டை தந்தை பெரியார் சிலையருகில், தமிழர் தலைவர் அவர்களுக்கு மாபெரும் உற்சாக வரவேற்பு அளிப்பதென முடிவு செய்யப்பட்டது.
சுயமரியாதைச் சுடரொளிகள்
2. மாநாட்டில் பெரியார் பெருந்தொண்டர்களுக்கு சிறப்பு செய்து நினைவுப் பரிசு வழங்குவதென்றும், மறைந்த சுயமரியாதைச் சுடரொளிகள் படத்தினைத் திறந்து வைத்து வீர வணக்கம் செலுத்துவதென்றும் முடிவு செய்யப்பட்டது.
விடுதலைக்கு ஆயிரம் சந்தாக்கள்
3. இனமான ஏடான விடுதலைக்கு ஆயிரம் சந்தாக்கள் வழங்குவதென்றும், குடிஅரசு 21 தொகுதிகளையும் முக்கியப் பிரமுகர்கள் வாங்கும் வகையில் ஏற்பாடு செய்வதென்றும் முடிவு செய்யப் பட்டது.
எடைக்கு எடை இருமடங்கு நாணயம்
4. சென்னை பெரியார் திடலில் இயங்கிவரும் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்திற்கு- தமிழர் தலைவர் அவர்களுக்கு எடைக்கு எடை இருமடங்கு நாணயம் வழங்க பெருவுள்ளத்தோடு முன்வந்த மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி துணைச் செயலாளர் ஊற்றங்கரை தணிகை கோ. கருணாநிதிக்கு உளமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.
வரவேற்கும் வகையில்...
5. திருப்பத்தூரில் நடைபெறவுள்ள பொதுக்குழு மற்றும் திராவிடர் எழுச்சி மாநாட்டிற்கு வருகை தரும் தமிழர் தலைவர் அவர்களையும், கருஞ்சட்டை வீரர்களையும் வரவேற்கும் வகையில், பத்துக்கும் மேற்பட்ட வளைவுகள், 500-க்கும் மேற்பட்ட பதாகை கள் அமைப்பதென முடிவு செய்யப்பட்டது.

செவ்வாய், 12 அக்டோபர், 2010

கட்டுரை -வாழ்வியல் சிந்தனைகள் -கி .வீரமணி

வழக்கமாக, தஞ்சை வல்லத்தில் பெரியார் - மணியம்மை பல்கலைக் கழக கல்வி வளாகத்தில் காலை நடைபயிற்சிக்கு நான் செல்லும்போது, துணைவேந்தரும் என்னுடன் வருவார். வேறு சில பேராசிரியர்களும் வருவர்; நல்ல தூய காற்றை சுவாசிப்பதோடு, நிருவாகப் பணிகளைப் பற்றியும், கட்டட வேலைகள், அடுத்த திட்டங்களைப் பற்றியும் பேசிக் கொண்டே நடப்போம்.
விடுதிகளைத் தாண்டி நடக்கும்போது, வகுப்புகள் காலை 7 மணிக்கே துவக்கம் என்பதால், மாணவச் செல்வங்கள் காலையில் அவசர அவசரமாக சாரை சாரையாகச் செல்வர். அவர்களில் சிலரைப் பார்த்து, விடுதியில் காலைச் சிற்றுண்டி என்ன சாப்பிட்டீர்கள்? என்றும் விசாரிப்பதுண்டு.
பல மாணவிகள் காலைச் சிற்றுண்டிகளைத் தவிர்த்து விட்டு அவசர அவசரமாக, அறக்க பறக்க வகுப்புக்கு ஓடுகிறார்கள். காலந்தவறாது, தாமதியாமல் வகுப்புக்குச் செல்வது நல்லதுதான்; ஆனால், அதற்காக வயிற்றைக் காயப் போட்டுச் செல்ல வேண்டுமா? அது உடல் நலத்திற்கு எவ்வளவு பெருங்கேடு என்பதை பிள்ளைகளிடம் சில மணித்துளிகள் விளக்கிச் சொல்லத் தவறுவதில்லை நாங்கள்!
இரவு உணவுக்கும், காலைச் சிற்றுண்டிக்கும் இடையே உள்ள இடைவெளி நேரம் மிக அதிகம் 7, 8 மணி முதல் சில நேரங்களில் 10 மணி நேரம் கூட ஆகி விடுகிறது.
அதுவரை வயிறு காலியாகவே இருந்தால் வாயுத் தொல்லை, வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகம் ஏற்பட்டு குடலை அரித்துத் தின்னும் பேரபாயம் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகிவிடும்!
மாணவர்கள் பட்டினியாக காலை வகுப்புகளுக்குச் சென்றால், பசி மயக்கம் தூக்கம், அயர்வு, சோர்வு எல்லாம் இணைந்து படிப்பில் கவனம் செலுத்த இயலாத நிலைக்கு ஆளாக்கும்; அத்துடன் இளம் குருத்துகள் வளர வேண்டியவைகள் - கருகிடும் அபாய நிலையும் ஏற்படக்கூடும்.
தஞ்சையில் நடைபெற்ற குழந்தைகள் பழகுமுகாமில் கூட இதை ஒவ்வொரு குழந்தையிடமும் - மாணவ - மாணவிகளிடம் விளக்கியதுபோல, விளக்கிக் கூறினேன்.
Breakfast - பட்டினியை முறியடித்தல் என்றால் நீண்ட அவகாசம் நம் வயிறு காய்ந்து கிடக்கும் நிலையை மாற்றுவது என்பதுதானே! வெள்ளைக்காரன் இதற்கு நல்ல சொல்லையே பயன்படுத்தியுள்ளான்!
பல வீடுகளில், ஒவ்வொரு நாளும் காலையில் பெற்றோர்கள் குழந்தைகளை மாணவர்களை தூக்கத்திலிருந்து எழுப்பி, குளிக்க வைத்து, உடை உடுத்தி, பள்ளிக்கூடத்திற்கோ, கல்லூரிக்கோ ஆயத்தப்படுத்தி அனுப்புகையில், எளிதில் காலை உணவை எடுத்துக் கொள்ளாது அடம்பிடிப்பதும், சாப்பிடாமலேயே அவசர அவசரமாக, பள்ளிக்கூடப் பேருந்து வந்துவிடும் என்று ஓடிடும் பட்டினிப் பட்டாளம் ஏராளமாகி வருவது நல்லதல்ல.
மொட்டுகள் கருகி விடும் அபாயம் உண்டு இதனால்.
இதுகுறித்து இன்று (12.10.2010) ஆங்கில நாளேடான இந்து ஏட்டில் பல மருத்துவர்கள் உள்பட பல பேராசிரியர்கள் வரை காலை உணவுதான் மிக மிக முக்கியம் என்பதை பல்வேறு கோணங்களில் கூறி வலியுறுத்துகின்றனர்.
காலையில் கார்ன்பிளேக்ஸ், நூடூல்ஸ், சிப்ஸ் இவைகளுக்குப் பதிலாக, இட்லி, தோசை போன்றவைகளை சாப்பிட வைப்பது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர்.
இதில்தான் உடனடியாக சக்தி அதிகம்; செரிமானப் பிரச்சினை இருக்காது. மதிய உணவைவிட, முக்கியம் காலைச் சிற்றுண்டி.
இது மாணவர்களுக்கு மட்டுமல்ல; பெரியவர்களாகிய நமக்கும் கூடத்தான்; காலை உணவு கூடுதலாக எடுப்பதும் பழங்களையும்கூட இணைத்துச் சாப்பிடுவதும் மிகவும் ஆரோக்கியமானது வளர்ச்சிக்கு. உடல், அறிவு ஆகிய இரண்டு வளர்ச்சிக்கும் அது உதவக் கூடியது.
இரவு உணவு எவ்வளவு குறைவாகவும், எளிமையாகவும் இருக்கலாம். பகல் உணவு நமக்குப் பழகியதுதான்.
எனவே காலை உணவை நல்ல முறையில் உண்ணச் செய்து குழந்தைகளைப் பழக்கப்படுத்துவது அவசியம்! அவசியம்!!

திங்கள், 4 அக்டோபர், 2010

இன எழுச்சி: ராஜ ராஜ சோழன் நான ....pamaran pakkam http://pamaran.wordpress.com/2010/09/24/ராஜ-ராஜ-

இன எழுச்சி: ராஜ ராஜ சோழன் நான ....pamaran pakkam http://pamaran.wordpress.com/2010/09/24/ராஜ-ராஜ-

ராஜ ராஜ சோழன் நான ....pamaran pakkam http://pamaran.wordpress.com/2010/09/24/ராஜ-ராஜ-


நமக்கும் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கும் அப்படியொன்றும் தனிப்பட்ட பகை கிடையாது. பள்ளிக்கூட பாடபுத்தகத்தில் மதிப்பெண்களுக்காக “சோழர் வரலாறு” படித்ததோடு சரி.
சிறு வயதில் அம்மா கூட்டிப் போன ஏ.பி.நாகராஜனின் 4975 மீட்டர் நீளமுள்ள “ராஜராஜ சோழன்” படத்தினைப் பார்த்து வாயில் ஈ போவது கூட தெரியாமல் வியந்திருக்கிறேன். தமிழில் வெளிவந்த முதல் சினிமாஸ்கோப் படம் அதுதான்.
பின்னர் பல வருடங்கள் கழித்து தஞ்சை மண்ணில் கால் வைத்தபோது பிரமிப்பு விலகாமல் அணு அணுவாக ரசித்த இடம் ஒன்று உண்டென்றால் அது தஞ்சை பெரிய கோயிலாகத்தான் இருக்க முடியும்.
பதிமூன்று அடுக்குகள் கொண்ட அதன் வேலைப்பாடுகளும் அழகும் நம்மை வியக்க வைக்கின்றன. நேற்று கட்டிய காமன்வெல்த் விளையாட்டிற்கான பாலமே குப்புறக் கவிழ்ந்து பலபேர் குற்றுயிராய்க் கிடக்கும்போது பத்து நூற்றாண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோபுரம் இன்னமும் கம்பீரமாய் காட்சி தருகிறதே என்ன காரணம்?
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பி.இ படிப்பும் இல்லை…… எம்.இ.படிப்பும் இல்லை…… பெற்றோரது அடிவயிற்றில் கட்டியிருக்கும் பணத்தைக் கூட அடித்துப் பிடுங்கும் பொறியியல் கல்லூரிகளும் இல்லை…… அப்புறம் எப்படிக் கை வந்தது இந்தக் கலை?
அதுதான் பட்டறிவுக்கும் பாட அறிவுக்கும் உள்ள வேறுபாடு.
பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அந்த மக்களது அயராத உழைப்பும்…. தொழில் நுட்ப அறிவும்…. கலை நயமும்தான் இன்று அது விண்ணுயர எழுந்து நிற்கக் காரணம். கூடவே மன்னனது ரசனையும் கூடுதல் பலம் சேர்த்திருக்கும்தான்.
சரி…… இப்படி சோழர் காலத்து அரண்மனைகள்…… வழிபாட்டுத்தலங்கள்…… சிற்பங்கள்….. ஓவியங்கள்……… அவர்களது வீர தீர பராக்கிரமங்கள் எல்லாம் அற்புதம்தான். ஆனால் மக்கள் எப்படி இருந்தார்கள் அவர்கள் காலத்தில்? அதுதானே முக்கியம்?
“மாதம் மும்மாரி பொழிகிறதா மந்திரியாரே?” எனக் கேட்டுவிட்டு உப்பரிகையில் ஓய்வெடுக்கப் போய் விட்டார்களா? அல்லது மக்களோடு மக்களாக நின்று அவர்களது துயரங்களைத் துடைக்க துணை நின்றார்களா? இதுதான் இன்று நம் முன் உள்ள கேள்வி.
தஞ்சை பெரிய கோவில் கம்பீரமாக நிற்கிறது வெளிப்புறத்தில். ஆனால் மக்கள் வழிபாடு நடத்துவதற்கும்….. வழிபடுவதற்கும் சமத்துவம் நிலவியதா உட்புறத்தில்?
இல்லை……. இல்லை……. இல்லை……. இல்லை……. இல்லவேயில்லை என்கின்றன சோழர் காலத்திய கல்வெட்டுகளும் ஆய்வு நூல்களும்.
சமயத்தலத்தில் சமத்துவமின்மை மட்டுமல்ல சோழப்பேரரசில் மக்கள் நிலை எவ்வாறிருந்தது? அவர்களது கல்வி எவ்வாறு இருந்தது? பெண்களது நிலை எவ்வாறு இருந்தது? நிலம் யார் வசம் இருந்தது? பாழாய்ப்போன சாதி என்ன பங்கை ஆற்றியது? இதுவெல்லாம் முக்கியமில்லையா நமக்கு?
சரி….. மக்கள் எப்படி இருந்தார்கள்? அதை முதலில் பார்ப்போம். சோழப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காவிரி ஆற்றின் தென் கரையில் இருந்த இரு ஊர்களை தங்களின் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட அறிஞர்கள் அதிர்ந்து போனார்கள். ஊரே சாதியால் பிரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து.
ஒன்பதாம் நூற்றாண்டில் விஜயாலய சோழன் தஞ்சையைக் கைப்பற்றி சோழப்பேரரசின் உருவாக்கத்திற்கு அடித்தளம் இடுகிறான். அதன் பின்னர் வந்த சோழப் பேரரசர்களும் வைதீகம் செழித்து வளர பொன்னையும் பொருளையும் நிலத்தையும் தானமாக அள்ளி வழங்குகிறார்கள். எல்லோருக்கும் அல்ல. சிலருக்கு மட்டும். இதனை துல்லியமாகப் போட்டு உடைக்கிறார் கே.கே.பிள்ளை என்கிற வரலாற்று ஆய்வாளர்.
“வேத நெறி தழைத்தோங்குவதற்காக மன்னரும் மக்களும் புதிதாகக் குடி புகுந்த பிராமணருக்கு பொன்னையும் பொருளையும் வழங்கினர். பிராமணர்களுக்குத் தனி நிலங்களும், முழு கிராமங்களும் தானமாக வழங்கப்பட்டன. அக்கிராமங்கள் அக்கிரகாரம், அகரம், சதுர்வேதி மங்கலம், பிரம்மதேயம் என பல பெயரில் வழங்கின. இக்குடியிருப்புகள் அனைத்தும் பிராமணரின் நிர்வாகத்திற்கே விடப்பட்டன. அரசனுடைய ஆணைகள் கூட அவற்றினுள் செயல்பட முடியாது. அக்கிராமங்களுக்கு எல்லாவிதமான வரிகள்…. கட்டணங்கள்…… கடமைகள்….. ஆயங்கள்…… என அனைத்தில் இருந்தும் முழு விலக்கு அளிக்கப்பட்டன.” என்று சோழர்களது கல்வெட்டுக்களில் இருந்தே எடுத்துக் காட்டி அம்பலப்படுத்துகிறார் கே.கே.பிள்ளை.
நிலமும் இலவசம்…..
வரிகளும் கிடையாது……
கட்டணங்களும் இல்லை…..
அரசன் கூட கேள்வி கேட்க முடியாது……
அதாவது இன்றைக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்காக ஏகப்பட்ட வரிச் சலுகைகளுடனும், ஏகப்பட்ட வரி விலக்குகளுடனும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள  ”சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப்” (S E Z – Special Economic Zone) போல…..
அன்றைக்கு ராஜராஜ சோழன் அமைத்துக் கொடுத்தது ”சிறப்புப் பிராமண மண்டலங்கள்”.
அதாவது (S B Z – Special Bramanical Zone).
இதிலென்ன தவறு? தனக்கு எவரைப் பிடிக்கிறதோ அவருக்கு விருப்பமானவற்றையெல்லாம் வாரி வழங்குவதுதானே மன்னர்களது விருப்பம்? குற்றமில்லைதான்.
ஆனால் அதே சோழ சாம்ராஜ்ஜியத்தில் மற்ற மக்கள் எப்படி வாழ்ந்தார்களாம்? அதற்கும் இருக்கிறது கல்வெட்டு.
”வேதம்” ஓத வந்தவர்களுக்கு சோழ அரசு சலுகை காட்டிய அதே வேளையில் உழவர்கள், கைவினைக் கலைஞர்கள், பிறதொழில் செய்வோர் மீது கடுமையான வரிகளை விதித்தது. இவற்றுள் அடித்தள எளியமக்களான சலவையாளர்கள், குயவர், தறி நெய்பவர், தட்டார், ஓடங்களைச் செலுத்தியோர் மீது முறையே….. வண்ணார்பாறை பயன்பாட்டு வரி….. குசக்காணம்……. தறிக்கூரை….. தட்டார்பாட்டம்…. என வரி மேல் வரி போட்டுத் தள்ளியதோடு நிறுத்தாமல் உழவர்கள் ஒரு பயிருக்கு ஊடாக இன்னொரு பயிரை வளர்த்தால்கூட அதற்கும் ஊடுபோக்கு என வரி போட்டு பரிபாலனம் செய்தவர்கள்தான் இந்த ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ பராக்கிரம ராஜ கெம்பீர மன்னர்கள்.
நிர்வாகமும் நீதியும் இப்படியிருக்க….. பெண்கள் நிலை எப்படி இருந்ததாம்? அதற்கும் இருக்கிறது ஆப்பு. எண்ணற்ற பெண்கள் பொட்டுக் கட்டுதல் என்கிற பெயரால் கோயில்களில் தேவரடியார்களாக ஆக்கப்பட்டதும் இக்காலத்தில்தான்.
அது சரி…. கல்வி?
அதுவும் குலத்துக்கொரு நீதிதான். அப்புறம் எங்கு போகும் எல்லோருக்கும் கல்வி?
இதையெல்லாம் பாமரன் சொன்னால் தப்பென்று சொல்லலாம். ஆனால் பண்டிதர்கள் சொன்னால்? அதுவும் இவைகளை தமிழக அரசே வெளியிட்டால்? ஆம் தமிழக அரசே வெளியிட்டது.. இப்போதல்ல. 1976 இல். அதுவும் தி.மு.க. அரசு.
தி.மு.க.ஆட்சியில் தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனமே “தமிழ் நில வரலாறு” என்கிற நூலை வெளியிட்டது அதன் பதிப்பாசிரியர் கோ.தங்கவேலு. சோழர் கால ஆட்சி உழைக்கும் மக்களுக்கு எப்பேர்ப்பட்ட பொல்லாத காலமாக விளங்கியது என்பதை அக்குவேறாக அலசியது அந்த நூல். பிற்பாடு தி.மு.க.ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு இது ”பிரம்மதேய ஆலோசகர்” குழுவால் தடை செய்யப்பட்டது.
மன்னர் காலத்தில் ஏன் மார்க்சீயம் வரவில்லை? ராஜராஜ சோழன் ஏன் பின் நவீனத்துவம் பற்றிப் பேசவில்லை? என்பது போன்ற கேள்விகளல்ல நமது கேள்விகள்.
ஈழம் வென்றதும்….. கடாரம் சென்றதும்……. வெற்றிக்கொடி நாட்டியதும் மகிழத்தக்கதுதான் ஆனால்……. தனது குடிமக்களுக்குள்ளேயே ஏன் பாகுபாடு காட்டினான்? ஒரு பக்கம் சுகத்தையும்….. ஒரு பக்கம் சுமையையும் ஏற்றியது ஏன்? இந்தக் கேள்விகள் நிறைகளைப் பற்றி சிலாகிக்கும் வேளையிலும் நெஞ்சில் உறுத்தும் கேள்விகள் அல்லவா?.
சோழர்கள் என்றில்லை பல்லவ மன்னர்களும், நாயக்க மன்னர்களும் இன்னபிற இத்யாதி மன்னர்களும்தான் என்ன கிழித்தார்கள்?
நாம் மன்னர் காலத்தை விட்டு வெகு நூற்றாண்டு வந்தாயிற்று. அப்புறம் எதற்கு அரசு செலவில் விழா?
என்பதுதான் நமது வினா.