வியாழன், 6 ஜனவரி, 2011

தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாள் கருத்தரங்கம் மற்றும் வித்யா மந்திர் கல்வி நிறுவங்களின் தாளாளர் வே.சந்திரசேகரன் அவர்களுக்கு பாராட்டு விழா







































  ஊற்றங்கரையில் வெகு சிறப்புடன் நடைப்பெற்ற

 தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாள் கருத்தரங்கம்  மற்றும் வித்யா மந்திர் கல்வி நிறுவங்களின் தாளாளர் வே.சந்திரசேகரன் அவர்களுக்கு பாராட்டு விழா

ஜனவரி 2

கடந்த ஞாயிற்றுகிழமை ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டத்தில் தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாள் கருத்தரங்கம்  மற்றும் வித்யா மந்திர் கல்வி நிறுவங்களின் தாளாளர் வே.சந்திரசேகரன் அவர்களுக்கு பாராட்டு விழா மிக சிறப்புடன் நடைப்பெற்றது .இந் நிகழ்ச்சிக்கு மானமிகு;சி.சாமிநாதன் துணை தலைவர் விடுதலை வாசகர் வட்டம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் மானமிகு .அண்ணா.அப்பாசாமி .பொருளாளர் விடுதலை வாசகர் வட்டம் அவர்கள் மாத அறிக்கை வாசித்தார் மானமிகு .பழ.பிரபு செயலாளர் விடுதலை வாசகர் வட்டம்அவர்கள் விழா அறிமுக உரை ஆற்றினார்

மானமிகு ;கே .ஆர்.கே .நரசிம்மன் சட்ட மன்ற உறுப்பினர் பருகூர் அவர்கள் தலைமை தாங்கினார் மானமிகு ;ஜெ.எஸ்..ஆறுமுகம் ஊரரட்சிக் குழு தலைவர் ஊற்றங்கரை மானமிகு .முருகேசன் மாவட்ட கல்வி அதிகாரி (ஓய்வு) மானமிகு பழ.வெங்கடாசலம் மண்டல செயலாளர் மானமிகு .தணிகை .ஜி.கருணாநிதி மாவட்ட தி.மு.க.இலக்கிய
அணி செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படத்திறந்து மானமிகு ;கே.கே.சி எழிலரசன் மாவட்ட தலைவர் திராவிடர் கழகம் அவர்கள் உரையாற்றினார்


 மானமிகு .வே.சந்திரசேகரன் தாளாளர் வித்யா மந்திர் கல்வி நிறுவனகள் அவர்களை  பாராட்டி இரா .வேங்கடம் ,அழகுமணி வெங்கடாசலம் ,விவேகானந்தன் ஆகியோர் நினைவு பரிசினை வழங்கினர்
''நற்றமிழர் வாழ்வில் தை திங்களும் தை புத்தாண்டும் ''என்னும் தலைப்பில்
மானமிகு .முனைவர் .துரை.சந்திரசேகரன் துணை பொது செயலாளர் திராவிடர் கழகம் அவர்கள் சிறப்பான கருத்துரையை வழங்கினார் மானமிகு.வே.சந்திரசேகரன் அவர்கள் ஏற்புரை ஆற்றினார்
மானமிகு.த.சந்திரசேகர்  செயற் குழு உறுப்பினர் விடுதலை வாசகர் வட்டம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்
நிகழ்ச்சி அரங்கில் விழா சிறப்புடன் நடைபெற வாழ்த்திய தமிழர் தலைவர்,தலைமை நிலைய செயலாளர் ,கழக பொருளாளர் ஆகியோரின் கடிதங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன .
அனைவருக்கும் பிஸ்கட் ,எழுதுகோல் ,குறிப்பேடு,அடுத்தமாத நிகழ்வு துண்டறிக்கை ,நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டன.விழா முடிந்த உடன் அனைவருக்கும் புலால் உணவு வித்யா மந்திர் கல்வி நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டன .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக