செவ்வாய், 4 மே, 2010

புதுடில்லி விழாவில் தமிழர் தலைவர் நெகிழ்ச்சி

அன்றாடம் பெரியார் கொள்கை பரப்ப முதல்வரின் பணி விலை மதிப்பற்றது
புதுடில்லி விழாவில் தமிழர் தலைவர் நெகிழ்ச்சி


புதுடில்லி, மே 4_ புதுடில்லியில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பில் பெரியார் மய்யம் திறப்பு விழா மே 2 ஆம் தேதி மாலை எழிலுறவும், எழுச்சியுறவும் நடை-பெற்றது.

விழாவில் முதல்வர் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டு மய்யத்-தைத் திறந்து வைத்து உணர்ச்சியும், உருக்கமும் மேலிட உரை நிகழ்த்-தினார்.

மய்யம் உருவாகப் பெற வீரமணி அவர்கள் ஆற்றிய அளப்பரிய பணிகளை வெகுவாகப் புகழ்ந்து உரைத்த முதல்வர் கலைஞர் அவர்-கள், உரையை நிறைவு செய்ததும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீர-மணி அவர்கள் குறிப்பிட்டதாவது:

ஈரோட்டுக் குருகுலத்தில் படித்த காரணத்தால் முதல்வர் கலைஞர் அவர்கள், குருதட்சணை செலுத்-தும்போது, ஏற்கெனவே 95 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறேன். அத்து-டன் 5 லட்சம் ரூபாய் சேர்த்து காணிக்கையை 1 கோடி ரூபாயாகக் கொடுக்கிறேன் என்று கூறியதற்கு ஆழ்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் தொகையை மேலும் ஒரு பெரியார் மய்யம் தொடங்கிட அச்-சாரமாகப் பயன்-படுத்துவோம். அதற்-காக முதல்வர் கலை-ஞர் அவர்-களுக்கு மனப்பூர்வமான நன்றி-யைத் தெரிவித்துக் கொள்-கிறோம்.

முதல்வர் கலைஞர் அவர்கள் மேலும் 5 லட்சம் ரூபாய் கொடுப்ப-தாகச் சொன்னார்கள். அதனைவிட தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளைப் பரப்பிட, அரசின் மூலமாக கலைஞர் அவர்கள் அன்-றாடம் செய்து வருகின்ற பணி விலை மதிப்பற்றது. அதற்கு எங்களு-டைய ஆழ்ந்த நன்றி எப்போதும் உண்டு. பெரியார் கொள்கை பரப்-பிட முதல்வர் கலைஞர் அவர்கள் ஆற்றிடும் பணிக்கு நாங்கள் என்றைக்கும் நன்றி காட்டுவோம்.

இவ்வாறு கி.வீரமணி அவர்கள் நெஞ்சம் நெகிழ்ந்து குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக