வியாழன், 30 டிசம்பர், 2010

திருப்பத்துரை குலுக்கிய மாபெரும் ஆர்பாட்டம்

                             திணறியது   திருப்பத்தூர் !
                             மத்திய அரசின் நுழைவு தேர்வை எதிர்த்து

           மாபெரும் கண்டன ஆர்பாட்டம் !

  500 க்கும் மேற்ப்பட்ட கழக தோழர்கள் கழக கொடிகளை         ஏந்தி உணர்ச்சி முழக்கமிட்டபடி பங்கேற்றனர் .

டிசம்பர் 30
மத்திய அரசின் நுழைவு தேர்வை எதிர்த்து திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் எதிரில் நடைபெற்றது .இவ் ஆர்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞ்சரணி தலைவர் வி.ஜி.இளங்கோவன் தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் முன்னிலை வகித்தார் . 300 க்கும் மேற்ப்பட்ட தோழர்களும் 100 க்கும் மேற்ப்பட்ட மகளிரணியினரும் 100 க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்


பெரியார் சிலைக்கு மாலை


முன்னதாக தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட இளைஞ்சரணி தலைவர் வி.ஜி.இளங்கோவன் ஒலிமுழக்கங்களுக்கு இடையில் மாலை அணிவித்து  ஆர்பாட்டத்தினை தொடங்கி வைத்தார் .


மாவட்ட மாணவரணி அமைப்பாளர்  எ.சிற்றரசன் கழகத்தால் அனுமதிக்கப் பட்ட முழக்கங்களை முழங்க அனைவரும் கொடிகளை உயர்த்தி உணர்ச்சி முழக்கமிட்டனர் .
ஆர்பாட்ட விளக்க உரை
ஆர்பாட்டத்தினை விளக்கி சுந்திரம்பள்ளி பெரியார் பெருந்தொண்டர் வையாபுரி ,திருப்பத்தூர் தமிழ் சங்க பொறுப்பாளர் சாமி .பிரபாகரன் .,புலவர் அண்ணாமலை ,திருப்பத்தூர் முன்னால் நகர் மன்ற உறுப்பினர் M .N .அன்பழகன் ,விசமங்களம் தி.மு.க பொறுப்பாளர் மணி ,ஊற்றங்கரை நகர திராவிடர் கழக தலைவர் இர.வேங்கடம் ,கிருட்டினகிரி தி.மு.க.மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தணிகை .ஜி.கருணாநிதி ஆகியோர் உரையாற்றினர் இறுதியாக மாவட்ட தலைவர் கே.கே.சி.எழிலரசன் அவர்கள் ஆர்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி உரையாற்றி முழக்கமிட்டார்
பங்கேற்றோர்
இந் நிகழ்ச்சியில் முன்னால் ரோட்டரி சங்க தலைவர் பரந்தாமன்,தொழிலதிபர்அண்ணா.அருணகிரி ,மாவட்ட இணை செயலாளர் அரங்க .ரவி ,மாவட்ட துணை செயலாளர் எம்.கே.எஸ்.இளங்கோவன் ,மாவட்ட மாவட்ட மகளிரணி தலைவர் அகிலா,செயலாளர் கவிதா ,கே.கே.சி.கமலாஅம்மாள் ,ஆசிரியை அழகுமணி ,இந்திராகாந்தி ,சுப்புலட்சுமி ,மாவட்ட ப.க.தலைவர்  தமிழ்ச்செல்வன் ,மாவட்ட மாணவரணி தலைவர் கமல் ,ஆனந்தன் ,மத்தூர் ஒன்றிய தலைவர் முருகேசன் ,பெரியராணி பயிற்ருனர் திராவிடராசன் ,கட்டரசம்பட்டி குமார் ,ராமச்சந்திரன் ,காவேரி ,முன்னால் மாவட்ட செயலாளர் பழ.பிரபு ,சித.அருள் ,இர .அன்பு .தீ.பொன்னுசாமி ,காளிதாஸ்,கனகராஜ் ,,திருப்பதி,வெற்றிகொண்டான், உதயகுமார், ரமேசு, பழனிசாமி,, சாமி. அரசிளங்கோ,சி.சாமிநாதன் ,அண்ணா,அப்பாசாமி,துரை,தமிழ்குடிமகன் ,உள்ளிட்ட ஏராளமான திருப்பத்தூர் ,ஜோலார்பேட்டை ,கந்திலி ,ஊற்றங்கரை ,மத்தூர் ஒன்றிய தோழர்கள் பங்கேற்றனர்
திணறிய காவல் துறை
எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருப்பத்தூர் சாலையில் காவல்துறை எதிர்பார்பிற்கும் அதிகமாக தோழர்கள் குவிந்ததால் போக்குவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை திணறியது .கழக தோழர்களின் உணர்சிகரமான முழக்கங்களையும் ,கட்டுபாடுடன் ஆர்பாட்டத்தை நடத்தும் பாங்கினையும் பொது மக்கள் பாராட்டினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக